×
 

மேகதாது விவகாரம்... வேகம் காட்டும் கர்நாடகா..! என்ன செய்யப் போறீங்க..? பேரவையில் உதயநிதி சரமாரி கேள்வி..!!

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். விவசாயிகளின் பிரச்சனை தொடர்பாக பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கி இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். மேகதாது விவகாரத்தில் அரசு நடவடிக்கைகள் என்ன எடுத்துள்ளது என்பது குறித்து அவைக்கு விளக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். முழு தள்ளுபடி என சொல்லிவிட்டு பயிர் கடனை அரைகுறையாக தள்ளுபடி செய்வது ஏன் என பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

டெல்டா மாவட்டங்களில் வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தர வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். தமிழக வெற்றிக்கழக அரசு அமைந்த பிறகு மேகதாது விவகாரத்தில் அதிக வேகம் காட்டுகிறது கர்நாடகா என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என அனைத்து கட்சிகளும் வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். மேகதாது அணை கட்ட வேண்டும் என்று கர்நாடகா தரப்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நிதி கேட்டிருப்பதாகவும் உதயநிதி குறிப்பிட்டு பேசி உள்ளார்.

மேகதாது அணையை கட்ட வேண்டும் என கர்நாடக அதிவேகத்துடன் முயற்சித்து வருவதாகவும் இன்று விவகாரத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை விளக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேகதாது விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் செயல்பாடுகளை உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் பட்டியலிட்டு பேசினார். ஆகஸ்ட் இரண்டாம் தேதி பெங்களூருவில் அனைத்து கட்சி கூட்டத்தை கர்நாடக முதல்வர் கூட்டியதாக கூறினார். அனைத்து கட்சி கூட்டத்தில் ஐந்து முன்னாள் முதல்வர்கள் பங்கேற்றதாகவும் தெரிவித்தார். மாநில நலன் விவகாரத்தில் நமது ஒற்றுமையை காட்ட வேண்டும் என்று வலியுறுத்திய உதயநிதி ஸ்டாலின், மாநில நலன் விவகாரத்தில் நமது ஒற்றுமை வெளிப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: காரில் குழப்பம்.. களத்தில் பரபரப்பு! உதயநிதியின் காரை நோக்கிச் சென்ற இபிஎஸ்!

சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் குறிப்பிட்டதை மட்டும் பேசுமாறு அப்போது எதிர் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு சபாநாயகர் பிரபாகர் அறிவுரை வழங்கினார். ஏன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட மறுக்கிறீர்கள் என்று உதயநிதி கேள்வி எழுப்பி இருக்கிறார். முன்னாள் முதலமைச்சர் கடிதங்கள் எழுதிய போது அதனை தற்போதைய முதலமைச்சர் விமர்சித்தார் என்றும் குறிப்பிட்டார். முதல்வர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதையும் நினைவுகூர்ந்தார். பிரச்சனையை அரசியல் நோக்கத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று சபாநாயகர் பிரபாகர் உதயநிதி பேச்சுக்கு ஆட்சேபம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பேரவையின் முதல்வருக்கு ஜால்ரா..! பட்ஜெட்டில் ஒண்ணுமில்ல..!! உதயநிதி விமர்சனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share