×
 

எல்லா வேலையும் கரெக்ட்டா நடக்குதா..?? ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் துணை முதல்வர்..!!

சென்னையில் இன்று நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் கடந்த ஜூலை 15-ஆம் தேதி கடலூரில் தொடங்கப்பட்ட “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம், மக்களுக்கு அரசு சேவைகளை வீடு தேடி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மகத்தான முயற்சியாகும். இத்திட்டம், 15 துறைகளை உள்ளடக்கி, 46 கிராமப்புற சேவைகள் மற்றும் 43 நகர்ப்புற சேவைகளை வழங்குகிறது. 

பட்டா மாறுதல், ரேஷன் அட்டை, மின்சார இணைப்பு பெயர் மாற்றம், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல சேவைகள் இதில் அடங்கும். மக்களின் அன்றாட தேவைகளை எளிதாக்குவதற்காக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் உடனடி தீர்வு காண முடியாத பிரச்சினைகளுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.

இதையும் படிங்க: நாளை 10 வார்டுகள்.. எங்கெங்க தெரியுமா..?? உங்களுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்..!!

இத்திட்டம், குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற தவறிய பெண்களுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் இதனை “புரட்சிகரமான திட்டம்” என வர்ணித்து, இது மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அரசு நிர்வாகத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறது எனக் குறிப்பிட்டார். இத்திட்டம், தமிழ்நாட்டின் சமூக நீதி மற்றும் மக்கள் நலனை மையமாகக் கொண்டு, குறிப்பாக பின்தங்கிய பிரிவினருக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, திமுக அரசின் மக்கள் நல முயற்சிகளில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று (18.09.2025) 10 வார்டுகளில் நடைபெற்றது. இந்நிலையில் சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கு தமிழக துணை முதல்மைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

இது தொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ தளத்தில், “மக்களைத் தேடி அரசு சேவைகள் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்டு வரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். இன்றைய தினம், சென்னை சோழிங்கநல்லூர் தொகுதி மண்டலம் -15, வார்டு 195, துரைப்பாக்கத்தில் நடைபெற்ற முகாமுக்குச் சென்று அங்கு வழங்கப்படும் சேவைகளை ஆய்வு செய்தோம். பொதுமக்களின் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வுகளை வழங்க வேண்டும் என்று முகாமில் இருந்த பணியாளர்களை அறிவுறுத்தினோம். முகாம் குறித்த பொதுமக்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் பெற்றோம்.” என்று தெரிவித்துள்ளார். 

இதேபோல் ஆலந்தூர் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட மண்டலம் 12, வார்டு 165, வானுவம்பேட்டை பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். 

இதையும் படிங்க: யூஸ் பண்ணிக்கோங்க மக்களே.. நாளை 12 வார்டுகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share