×
 

வைகை அணையில் சட்டவிரோதமாக எடுக்கப்படும் நீர்..!! பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதி..! கடும் குற்றச்சாட்டு..!!

வைகை அணையில் மின்மோட்டார் மூலம் சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கப்படுவதால் பொதுமக்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

வைகை அணையில் சட்ட விரோதமாக மின்மோட்டார் மூலம் உறிஞ்சி எடுக்கப்படும் நீரால் அப்பகுதி மக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 10 குதிரை திறன் கொண்ட மின்மோட்டார் மூலம் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நீர் உறிஞ்சப்படுவதால் தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.nதேனி மாவட்டத்தில் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை தேனி திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் பாசனத்திற்கும், தேனி திண்டுக்கல் மதுரை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

இந்த ஆண்டு கோடை மழை பெரிய அளவில் பெய்யாத நிலையில் தென்மேற்கு பருவமழையும் துவங்காத நிலையில் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 20 அடியாக சரிந்துள்ளது. இந்த நிலையில் வைகை அணையின் நீர் தேக்க பகுதியில் நீரின்றி வறண்டு காணப்படும் நிலையில் அணையில் தேக்கி வைக்கப்படும் நீரை அணையை சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு சட்ட விரோதமாக மின் மோட்டார்கள் மூலம் உறிஞ்சி எடுக்கப்பட்டு வருகின்றது. தற்பொழுது அணையின் நீர்மட்டம் அடிப்பாதாளத்தில் சென்றதால் மின்மோட்டார்களை பயன்படுத்தி நீர் உறிஞ்சப்படுவதும் தொடர் கதையாக உள்ளது. நீரை உறிஞ்சுவதற்காக 10 குதிரை திறன் கொண்ட மோட்டார்கள் பயன்படுத்தினால் மட்டுமே இரண்டு முதல் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தோட்டங்களுக்கு நீரை உறிஞ்சி எடுத்து கொண்டு செல்ல முடியும்.

ஆகையால் அணையின் உட்பகுதி நிலத்தில் பைப்புகளை பதித்து மின்மோட்டார்கள் மூலம் 50க்கும் மேற்பட்ட இடங்களில் நீர் உறிஞ்சி எடுக்கப்படுவது தற்போது தெரிய வந்துள்ளது. 50 மின்மோட்டார்கள் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5 மணி நேரம் இயக்கி நீர் உறிஞ்சி எடுக்கப்படும் நிலையில் அது வைகை அணையில் இருந்து குடிநீருக்காக திறந்து விடப்படும் நீரின் அளவைக் காட்டிலும் கூடுதலாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 69 கன அடி நீர் திறக்கப்படும் பொழுது 24 மணி நேரத்தில் திறக்கப்படும் நீரின் அளவு 16 கோடியே 88 லட்சம் லிட்டர் ஆகும். ஆக நாள் ஒன்றுக்கு குடிநீருக்காக அணையில் இருந்து 16 கோடியே 88 லட்சம் லிட்டர் தண்ணீர் திறக்கப்படும் அதே வேளையில் அணையின் உட்பகுதியில் சட்ட விரோதமாக 14 கோடியே 80 லட்சம் லிட்டர்க்கு மேலாக நீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: இடுக்கி அணையின் பிரமாண்ட அழகு..! டூரிஸ்ட்களுக்கு செம்ம சான்ஸ்..!! முக்கிய அறிவிப்பு..!!

மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களில் அணையில் இருந்து சட்டவிரோதமாக நீர் உறிஞ்சப்படுவதை தடுத்து இருந்தால் வைகை அணையின் நீர்மட்டம் அடி பாதாளத்திற்கு சென்று இருக்காது குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படாமல் இருந்திருக்கும். தற்பொழுது வைகை அணையின் நீர்மட்டம் அடி பாதாளத்தில் சென்றுள்ள நிலையில் தேனி மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித்துறையினரும் இணைந்து சட்டவிரோதமாக அணையில் இருந்து நீர் எடுக்கப்படுவதை தடுப்பதோடு அணையின் உட்பகுதியில் நீர் உறிஞ்ச பயன்படுத்த போடப்பட்டுள்ள மின் மோட்டார்களை அகற்றி மூன்று மாவட்ட மக்களின் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

இதையும் படிங்க: மேகதாது விவகாரத்தில் குரல் உயர்த்திய முதல்வர் விஜய்..! பிரதமர் மோடிக்கு முக்கிய வலியுறுத்தல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share