மோடி, அமித் ஷாவிற்கு என்ன யோக்கியதை இருக்கு... பாஜகவை வெளுத்து வாங்கிய வைகோ...!
தமிழ்நாட்டை சீரழித்து சென்ற ஆளுனரை போல, இப்போது வந்த ஆளுநரும் சலைத்தவர் அல்ல, என்ற சந்தேகம் எழுகிறது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குனிச்சி பகுதியை சேர்ந்த மதிமுக நிர்வாகி ராம்மூர்த்தி என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க வந்த மதிமுக பொதுச்செயலாளர், அவரது வீட்டிற்கு சென்று குடும்பத்தாரிடம் ஆறுதல் தெரிவித்து குழந்தைகளுக்கு படிப்பு செலவுக்காக ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்கினார். பின்னர் வைகோ திருப்பத்தூரில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், நாடு முழுவதும் கேஸ் சிலிண்ட் கிடைக்கவில்லை, மயானங்களில் உடல்களை எரிக்ககூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, தமிழக அரசு இதற்காக மயானங்களில், சோலார் பேனல் அமைக்க வேண்டும் என்பது எனது கோரிக்கை. திமுக கூட்டணியில் எந்த தொகுதியில் போட்டியிடுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
வரும் சட்டமன்ற தேர்தலில், ஒருகாலம் நான் போட்டியிட மாட்டேன், மன நிறைவுடன் நாடாளுமன்றத்தில் பணியாற்றி, 1300 முறை பேசியிருக்கின்றேன், திமுக சமூகநீதிக்கான இயக்கம், கூட்டணி கட்சிகளுடன், சமூக நீதி கடைபிடிக்கப்படும்.
இதையும் படிங்க: ஒன்றில் தனிச்சின்னம்!! மற்றதில் உதயசூரியன்! மதிமுக ஆலோசனை கூட்டத்தில் வைகோ முடிவு?!
இத்தனை ஆண்டுகளில், எய்ம்ஸ் மருத்துவமனை 10 % வேலையை மட்டுமே செய்துள்ளார்கள், மற்ற மாநிலங்களில் 2 வருடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் தமிழகத்திற்கு மட்டும் ஓரவஞ்சமாக மத்திய அரசு வஞ்சிக்கிறது..
துத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யது கொலை செய்யப்பட்ட, விவகாரத்தில், மிருகங்கள் காட்டில் இல்லாமல் வீட்டில் உள்ளது, ஈவு இரக்கமற்ற மிருகங்கள், இதுவரை இல்லாத சட்டத்தை கொண்டு வந்து அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். எல்லா ஆட்சியிலும் இதுபோன்று நடந்துள்ளது, இதனை தடுக்க முதல்வர் முயற்சித்து வருகிறார், இதுபோன்ற நிகழ்வுகளால் அவர் மிகுந்த கவலைப்படுகிறார்.
திமுகவிற்காக என்னால் முடிந்த அளவிற்கு பிரச்சாரம் செய்வேன், திமுக கூறினால் அந்த அந்த தொகுதியிற்கு சென்று பிரச்சாரம் செய்வேன். விஜய் இப்போது தான் அரசியலில் நுழைந்து பிரவேசம் செய்கிறார், தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது.
மேலும் கடந்த சில தினங்களாக உலகம் மற்றும், இந்திய நாட்டு மக்கள் அவதிகுள்ளாகுவதற்கு மூலக்காரணம், டிரம்ப் தான். ஹிட்லர் தான் உலகை அழிப்பேன் என பேசினார், ஹிட்லரின் மறுபிறவி எடுத்து தற்போது வெள்ளை மாளிகையில் அமர்ந்துள்ளார். அவர் அதிபராக இருப்பதற்கு தகுதியற்றவர், உளருவதில், கோமாளியை விட லிமிட் இல்லாமல் மோசமாக பேசுகிறார் டிரம்ப்.
மோடியும், அமித்ஷாவும், தங்களது தகுதிகளை இழந்து, தகுதியில்லாமல், திமுகவை அழிப்பேன் என்று பேசுகிறார்கள்,. எதிர்கட்சிகளை மிரட்டி அடியபணிய வைக்கும், பாஜகவிற்கு திமுக பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கு.
தமிழ்நாட்டை ஏற்கனவே இருந்த கவர்னர் சீரழித்தார், இப்போது வந்தவரும், சலைத்தவர் அல்ல, அவரை போல செயல்படுவார் என சந்தேகம் எழுகிறது,
மேலும் மோடி குட்டிகரணம் போட்டாலும், தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க முடியாது, திருச்சியில் அவரை வரவேற்கவே ஆள் இல்லை, ஏன் கைத்தட்டவே ஆள் இல்லை, மோடி தமிழ்நாட்டில் நுழையவே முடியாது என பேசினார்.
இதையும் படிங்க: விடுதலை புலிகள் விவகாரம்...! முடியவே முடியாது..! வைகோ மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!!