×
 

எங்க உயிர் அவ்வளவு அலட்சியமா? அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மக்கள்

சிறுத்தை தாக்கி உயிரிழந்த சிறுமி விவகாரத்தில் அலட்சியமாக பதில் அளித்த அமைச்சர் ராஜகண்ணப்பனை எதிர்த்து கூடலூரில் போராட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த பச்சை மலை எஸ்டேட்டின் தென்பிரிவில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி மனோஜ் - மோனிகா என்பவரது மகள் ரோஷினிகுமாரி. 7 வயது சிறுமி ரோஷினி, தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த சிறுத்தை ஒன்று தாய் மோனிகாவின் கண்முன்னே சிறுமியை கவ்விச் சென்றது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் மோனிகா செய்வதறியாது, அருகில் உள்ளவ தகவல் கொடுத்தார். பிறகு வனத்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் சிறுத்தைச் சென்ற வழியில் சிறுமியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இரவு முழுவதும் 100க்கும் மேற்பட்டோர் தேடிவந்த நிலையில், 18 மணிநேர தேடுதலுக்கு பிறகு, எஸ்டேட் உள்ள பகுதியிலிருந்து 300 மீட்டர் தொலைவில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. கால்கள் இல்லாத நிலையில், தலையோடு உடல் இருந்துள்ளது. இதனைக்கண்ட வனத்துறையினர் உடலை மீட்டனர். 

இதையும் படிங்க: வெளிய விட்டா சாட்சியை கலைத்து விடுவார்! MLA ஜெகன் மூர்த்தி ஜாமீன் தீர்ப்பை ஒத்திவைத்தது நீதிமன்றம்!

இந்த நிலையில் சிறுமி ஒருவர் சிறுத்தை தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் இது தொடர்பாக தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் பேசியது சர்ச்சையை கிளப்பியது. மனிதர்களை மிருகங்கள் தாக்குவது வழக்கமான ஒன்று தான், அரசு தரப்பில் நிவாரணம் வழங்குகிறோம் என்று கூறினார்.

இந்த பதில் மக்களை மேலும் காயப்படுத்துவதாகவும், அலட்சியமாகவும் இருப்பதாக பலரும் விமர்சித்துள்ளனர். இந்த நிலையில் அமைச்சரின் அலட்சியமான போக்கை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிராக கூடலூரில் எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து கண்டன முழக்கங்களை எழுப்பி போராடினர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதையும் படிங்க: தமிழ் படைப்பாளிகளுக்கு இதையெல்லாம் செய்ய துடிக்கிறோம்! கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கத்தில் முதல்வர் பேருரை...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share