×
 

ஆட்சியில் பங்கு, இரட்டை இலக்கத்தில் சீட்டு... எதிர்பார்க்காத ட்விஸ்ட் வைத்த திருமா...!

இந்தியா கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது? (அ) ஒருங்கிணைப்பது? (அ) முன் நின்று வழி நடத்துவது என்பது குறித்து தேசிய அளவிலுள்ள மூத்த தலைவர்கள் முடிவு செய்வர்: திருமாவளவன் எம்.பி.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், குழுவின் தலைவர் திருமாவளவன் எம்.பி தலைமையில் நடைபெற்றது. இதில் ஆட்சியர் ரத்தினசாமி, காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனிடம், இந்தியா கூட்டணிக்கு தேசிய அளவில் மு.க.ஸ்டாலின் அல்லது மம்தா பானர்ஜியை தலைவராக்க வேண்டும் என உத்தவ் சிவசேனா கட்சியின் 'சாம்னா' நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்தியா கூட்டணியில் உள்ள முன்னணி தலைவர்கள் மற்றும் தேசிய அளவிலான தலைவர்கள் கூடி முடிவு செய்பவர். அதில் கருத்து சொல்ல எதுவும் இல்லை. இந்தியா கூட்டணி காலத்தின் தேவை. அது கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும். 

இதையும் படிங்க: “முடிஞ்சா வேங்கைவயலுக்கு போய் பாருங்க”... திருமாவுக்கு தில்லா சவால்விட்ட தமிழிசை சவுந்தரராஜன்...!

வலதுசாரிகளை எதிர்த்து நாட்டையும், மக்களையும் காப்பாற்ற, இந்தியா கூட்டணி மிக மிக தேவையான ஒன்று. எனவே அதில் யார் தலைமை தாங்குவது அல்லது ஒருங்கிணைப்பது அல்லது முன் நின்று வழி நடத்துவது என்பது குறித்து மூத்த தலைவர்கள் முடிவு செய்வர்.

ஆட்சியில் பங்கு என்பது குறித்த கேள்விக்கு 100 முறை பதில் சொல்லி விட்டேன். இன்னும் எத்தனை முறைதான் அதில் விளக்கம் சொல்ல வேண்டும்? என செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார். 

இடைக்கால பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை என எதிர்க்கட்சியினர் அரசியலுக்காக பேசுகிறார்கள். எப்படியாவது திமுக அரசின் மீது வெறுப்பு உருவாக வேண்டும் என்பது அவர்களின் ஏக்கமாக உள்ளது. ஆனால், அது இங்கு சாத்தியமாகாது என்பது அவர்களுக்கு தெரியாது.

ராகுல் காந்தி இந்தியாவிற்கு ஆபத்தான மனிதர் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜூ பேசியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, பாரத கட்சியும் ஆர்எஸ்எஸும் இந்தியாவிற்கு எவ்வளவு ஆபத்தான சக்தி என்பதை கட்சி சார்பற்ற ஜனநாயக சக்திகள் தொடர்ந்து நாடு முழுக்க உலகம் முழுக்க பேசி வருகின்றனர் அந்த கட்சியை சார்ந்த ஒருவர் காங்கிரஸ் கட்சியை அதன் தலைவர் ராகுல் காந்தியையும் ஆபத்தானவர் என விமர்சிப்பதற்கு நகைச்சுவைக்கு உரியது. 

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரட்டை இலக்கத்தில் சீட்டு கிடைக்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு?, நீங்களே ரெக்கமண்ட் பண்ணுங்க என கூறி சென்றார்.

இதையும் படிங்க: காங்., கேட்பதில் என்ன தப்பு? ஆட்சி அதிகார பகிர்வு! ஆட்டத்தை ஆரம்பித்தார் திருமாவளவன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share