குடியாத்தத்தில் ஆட்டோ நிறுத்துவதில் தகராறு..! டிரைவருக்கு சரமாரி வெட்டு..!
குடியாத்தத்தில் ஆட்டு நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் டிரைவர் ஒருவருக்கு சரமாரி வெட்டு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது
குடியாத்தத்தில் ஆட்டோ நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆட்டோ டிரைவரை கத்திகால் வெட்டிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சாதாரணமாக காலி இடத்தில் ஆட்டோ நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு வெட்டு சம்பவத்தில் முடிந்துள்ளது. மற்றொரு ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் வயது 53. ஆட்டோ டிரைவர்.
அதே பகுதியைச் சேர்ந்த அண்ணன் தம்பிகள் சதீஷ்,கிரிபிரசாத் இவர்களும் ஆட்டோ டிரைவர்களாக உள்ளனர். இந்த நிலையில், வெங்கடேசனுக்கும் சதீஷுக்கும், அவர்களின் ஆட்டோக்களை காலி இடத்தில் நிறுத்துவது தொடர்பாக தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்தத் தகராறு எதிரொலியாக மாலையில் சதீஷின் தம்பி கிரிபிரசாத் வெங்கடேசன் உடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதன் தொடர்ச்சியாக கத்தியால் வெங்கடேசனை சரமாரியாக வெட்டி உள்ளார்.
இதில் தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த வெங்கடேசனை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக வெங்கடேசனை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
இதையும் படிங்க: புது டிசைனில் ஆதார் கார்டு..!! தனியுரிமைக்கு வலுசேர்க்கும் மாற்றம்..!! UIDAI அதிரடி..!!
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக குடியாத்தம் கிராமிய காவல் ஆய்வாளர் ராஜேஷ்கண்ணா வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் வெங்கடேசனை கத்தியால் சரமாரியாக வெட்டிய மற்றொரு ஆட்டோ டிரைவர் கிரிபிரசாத் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரையில் அதிர்ச்சி சம்பவம்... மணல் கொள்ளையை தடுத்த இளைஞர் மீது கொலை வெறி தாக்குதல்..!!