மூன்று ஆண்டுகளில் முதல் முறை... விஜய் எடுத்த அதிரடி முடிவு... யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்...!
மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக வேலூர் மாவட்டம் அகரம் சேரியில் நடைபெறும் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு தொண்டர்கள் அமர்வதற்கு நாற்காலிகள் போடப்பட இருக்கிறது.
வேலூர் அகரம் சேரியில் வரக்கூடிய 23 ஆம் தேதி விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்காக பந்தல் அமைத்து 5000 நாற்காலிகள் போடப்பட்டு கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே நாற்காலிகளில் தண்ணீர் பாட்டில் வைக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வேலூர் மாவட்டம் அகரம் சேரி பகுதியில் வரும் 23ஆம் தேதி அன்று விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற இருக்கிறது. இதற்காக 33 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு சமன் செய்யும் பணிகள் முழுமையாக நிறைவடையக்கூடிய நிலையில், தற்போது தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ளும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு முதல் முறையாக பந்தல் அமைத்து 5000 பேர் அமரும் வகையில் நாற்காலிகள் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை விஜய் சந்திப்பு கூட்டங்கள் அனைத்தும் திறந்தவெளி மைதானத்தில் பந்தல் அமைக்காமல் அமர்வதற்கு நாற்காலிகள் கூட போடாமலேயே நடத்தப்பட்டன.
இந்நிலையில் மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக வேலூர் மாவட்டம் அகரம் சேரியில் நடைபெறும் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு தொண்டர்கள் அமர்வதற்கு நாற்காலிகள் போடப்பட இருக்கிறது. தொண்டர்கள் வெயிலில் நிற்காமல் இருப்பதற்கு பந்தலும் அமைக்கப்பட உள்ளது. 5000 நாற்காளிகளிலும் கூட்டம் ஆரம்பிக்கும் முன்பாகவே ஸ்நாக்ஸ்,தண்ணீர் பாட்டில், சிற்றுண்டி வைக்கப்பட உள்ளதாகவும், கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தவெக நிர்வாகிகள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: மனநோயா? பாசிச மனநிலையா? மாற்றுத்திறனாளிகளை வதைக்கும் திமுக... ஆதவ் அர்ஜுனா சாடல்..!
இதற்கு முன் சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது விஜயை காண வந்த தொண்டர்கள் வெயிலை சமாளிக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். அதனால் ஒரு உயிரிழப்பு கூட நிகழ்ந்தது. அதனை கருத்தில் கொண்டு இந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டமானது காலை 10 மணி முதல் ஒரு மணி வரை நடக்க இருப்பதாக தெரிகிறது. அந்த நேரம் முழுமையாக வெயில் என்பதால் பந்தல் அமைத்தம் நாற்காலியில் போடவும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
பொதுவாக வேலூர் என்றாலே வெயில்லூர் என்று சொல்வார்கள். தற்போது வேலூரில் வெயில் என்பது அதிகரிக்கக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால் தவெக தொண்டர்களுக்கு வெயிலால் எவ்வித சிரமும் ஏற்படாமல் இருக்க பந்தல் மற்றும் நாற்காலிகள் அமைக்கப்படவுள்ளன.
அதேபோன்று 5000 பேருக்கு அனுமதி பாஸ் என்பதும் வழங்கப்பட இருக்கிறது. அந்த 5000 பேர் அவர்கள் பாஸ் மூலமாக உள்ளே அனுப்புவார்கள். மேலும் இந்த பகுதியில் மக்கள் அதிகம் இருக்கக்கூடிய ஐந்து இடங்களில் பார்க்கிங் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது வேலூரில் இருந்து வருவர்களுக்கு ஒரு இடத்தில் பார்க்கிங், அதேபோன்று ஆம்பூர் திருப்பத்தூரில் இருந்து வருபவர்களுக்கு ஒரு இடத்தில் பார்க்கிங் என ஐந்து இடங்களில் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டு எந்த ஒரு அசம்பாவிதமும் இந்த முறை நடக்காத வகையில் வேலூர் தவெக நிர்வாகிகள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அடுத்த பட்ஜெட்டை TVK தாக்கல் செய்யும்... இந்த பட்ஜெட்டுக்கு ஜீரோ மார்க்... அருண்ராஜ் விளாசல்..!