விஜய் எங்க அப்பா..!! கொச்சையாக பேசிய வேல்முருகன்.. மாணவியின் சாட்டையடி பதில்..!
'விஜய்யை நாங்கள் அப்பாவாக பார்க்கிறோம்' என கல்வி விருது வழங்கும் விழாவில் மாணவி ஒருவர் உருக்கமாக பேசியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி (தவாக) தலைவர் வேல்முருகன், தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய் குறித்து விழுப்புரத்தில் நடந்த ஒரு கட்சி நிகழ்ச்சியில் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. விஜய், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியை நடத்தி, அவர்களை அரவணைத்து பரிசு வழங்கியதை வேல்முருகன் ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் விமர்சித்தார்.
இரண்டு கிராம் தங்கத்திற்காக மாணவிகளை கட்டிப்பிடிப்பது, விஜய் அண்ணா என்று அழைப்பது தமிழ் பண்பாடு இல்லை என்றும் விஜய் நடிப்பை ரசியுங்கள், ஆனால் இப்படி செய்யக் கூடாது" என்று குறிப்பிட்டு, மாணவிகளுடனான விஜய்யின் நடவடிக்கைகளை "பாரம்பரிய கலாசாரத்தை சீரழிப்பது" என்றும் வேல்முருகன் விமர்சித்தார். மேலும், பெற்று வளர்த்த பெண்ணை, மாற்றான் வீட்டுக்கு மனைவியாக அனுப்பும் பெண்ணை இப்படி அரவணைப்பது ஏற்புடையது இல்லை என்று ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையும் படிங்க: பாஜக கூட்டணியில் தவெக? நயினார் நாகேந்திரன் போட்ட திட்டத்தை தவிடு பொடியாக்கிய விஜய்..!
வேல்முருகனின் பேச்சு தமிழக அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது கருத்துகள் தமிழ் பண்பாட்டிற்கு எதிரானவை என்றும், மாணவிகளை அவமதிக்கும் வகையில் இருந்ததாகவும் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், தவெக இணைச் செயலாளர் தாஹீரா, வேல்முருகனின் பேச்சை "மனசாட்சியற்ற, தரம்தாழ்ந்த விமர்சனம்" என்று கண்டித்து, தமிழக பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார். மேலும், விஜய்யின் செயல் தூய உள்ளத்தின் வெளிப்பாடு என்று பதிலடி கொடுத்தார்.
மேலும் பாஜக நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன், "குழந்தைகள் விஜயை அண்ணா என்று அழைப்பது தமிழ் பண்பாட்டில் அன்பின் வெளிப்பாடு. இதை கொச்சைப்படுத்துவது மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை புண்படுத்துவது என்று வேல்முருகனை கண்டித்தார்.
முன்னதாக இரண்டு கட்ட பரிசளிப்பு விழா முடிவடைந்த நிலையில், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு மூன்றாவது கட்டமாக பரிசளிக்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
அப்போது மேடையில் மாணவி ஒருவர், விஜய் மாணவிகளின் தோளில் கை போடுவதாக பேசி சில வீடியோக்கள் வந்ததை பார்த்தேன். விஜய்யை நாங்கள் அப்பாவாக பார்க்கிறோம். விஜய்யை நாங்கள் அப்பாவாக, அண்ணனாக, எங்கள் உயிராக நினைக்கிறோம். இப்படியெல்லாம் பேசக்கூடாது. உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் அப்பா.. என்று உருக்கமாக கூறினார்.
இதையும் படிங்க: அஞ்சலையம்மாளின் 135-ம் பிறந்தநாள்.. அவரது பெருமையை போற்றுவோம்.. தவெக தலைவர் விஜய்..!