“கொளத்தூரில் பாதுகாப்பில்ல”… இரண்டே நிமிடத்தில் பேச்சை நிறுத்திய விஜய்..! வில்லிவாக்கம் பிரச்சாரம் திடீர் ரத்து..!
கொளத்தூரில் சரியான பாதுகாப்பு கொடுக்காததால் விஜயின் வில்லிவாக்கம் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று வேட்பு மனுதாக்கல் செய்த நிலையில் தனது முதல் பிரச்சாரத்தை தொடங்கினார். தான் போட்டியிடும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தனது முதல் பிரச்சாரத்தை விஜய் தொடங்கி இருந்தார். இந்த பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வி எஸ் பாபுவை ஆதரித்து விஜய் வாக்கு சேகரிக்க சென்றார். விஜய் கொளத்தூர் தொகுதிக்குள் செல்வதற்குள்ளேயே பல சிக்கல்கள் எழுந்தன. பாதுகாப்பு ஏற்பாடு குறைபாடுகளை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்திடம் தமிழக வெற்றிக் கழகத்தினர் புகார் மனு கொடுத்தனர்.
கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரம் செய்வதற்கு இரண்டு இடங்களில் அனுமதி வாங்க வேண்டி இருந்ததாகவும் பெரவள்ளூரில் மட்டும் அனுமதி பெற்றதாகவும் கூறி சர்ச்சை கிளம்பியது. இதை அடுத்து அளவுக்கு அதிகமாக கூட்டம் கூடியதால் போலீசாரின் அறிவுரை வழங்கப்பட்டது. அசம்பாவிதம் தவிர்க்க போலீசார் அறிவுரை ஏற்று இரண்டு நிமிடங்களில் தனது பேச்சை முடித்துக் கொண்டார். விஜய் அளவுக்கு அதிகமான கூட்டம் கூடியதால் அசம்பாவிதத்தை தவிர்க்கு அறிவுரை கூறியதால் முடித்துக் கொண்டார். கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது தலைக்கவசம் அணியாமல் வந்த நபரை பார்த்து ஏன் தலைக்கவசம் அணியவில்லை என்று விஜய் கேள்வி எழுப்பினார்.
பேச்சை முடித்துக் கொண்டு கொளத்தூரில் இருந்து வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு விஜய் புறப்பட தயாரானார். இதற்கிடையில் விஜயின் வில்லிவாக்கம் பிரச்சாரம் திடீரென ரத்து செய்யப்பட்டது. கொளத்தூரில் சரியான பாதுகாப்பு கொடுக்காததால் வில்லிவாக்கத்தில் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக வெற்றி கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பூர் மற்றும் கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் வில்லிவாக்கம் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதால் தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதையும் படிங்க: மீண்டும் மீண்டுமா? அனுமதி வாங்கலையா?... கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் செய்வதில் சர்ச்சை..!!
விஜய்க்கு சரியான பாதுகாப்பு கொளத்தூரில் கொடுக்கவில்லை என்று தமிழக வெற்றிக்கடகத்தின் மாவட்ட செயலாளர் பூக்கடை குமார் தெரிவித்துள்ளார். விஜய் மற்றொரு நாள் நிச்சயமாக வெளிவாக்கத்தில் பிரச்சாரம் செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் வில்லிவாக்கம் தொகுதியில் விஜயின் பிரச்சாரம் மிகுந்த எதிர்பார்ப்புடன் நடக்க இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. கரூர் சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதுபோல எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதற்கு ஏதுவாக மிகுந்த பாதுகாப்புடன் தமிழக வெற்றி கழகம் பிரச்சாரத்தை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தவெக துண்டால் முகத்தை மூடி ட்ரான்ஸ்பார்மர் மீது ஏறிய இளைஞர்கள்... விஜய் பரப்புரையில் பரபரப்பு..!!