ஏண்டா விஜய தொட்டோம்- னு நினைச்சு நினைச்சு FEEL பண்ண போறீங்க… தாறுமாறாக தாக்கிய விஜய்..!
தற்குறி என்ற விமர்சனங்களுக்கு காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் பதிலடி கொடுத்தார்.
தமிழக வெற்றி கழகத்தை ஆதரிப்பவர்கள் தற்குறிகள் என்று விமர்சனம் அவ்வப்போது முன்வைக்கப்படுகின்றன. தமிழக ஆட்சி கழகத்தினரையும் தற்குறிகள் என்று விமர்சிக்கின்றனர். காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினார்.
அப்போது இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். அது என்னப்பா அது தற்குறியா? லட்சக்கணக்கானோர் தமிழக கட்சி கழகத்தினருக்கு சப்போர்ட் செய்பவர்களை தற்குறி என்று சொல்லிவிட்டு தற்போது அப்படி கூப்பிடாதீர்கள் என்று சொல்கிறார்கள்.
அறிவு திருவிழா என்ற பெயரில் அவதூறு திருவிழா நடத்தினார்கள். அதில் அவர்களின் தலைமையே குழப்பும் வகையில் அறிவு கண்ணை திறந்து வைக்கும் வகையில் ஒருவர் பேசி உள்ளார். அவர்களுடைய எம்எல்ஏவே இவ்வாறு பேசினார். நமது கொள்கை தலைவர் அஞ்சலை அம்மாளில் சொந்தக்காரர் அந்த எம்எல்ஏ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அது என்ன ஆட்சிக்கு வந்தா? கண்டிப்பா நம்ம ஆட்சிதான்! காஞ்சியில் விஜய் மாஸ் பேச்சு…!
தமிழக வெற்றி கழகத்திற்கு சப்போர்ட் செய்பவர்கள் தற்குறி என்றால் அதே மக்களிடம் ஓட்டு வாங்கிய நீங்கள் யார்? என்று கேட்டார். அந்த மக்களுக்கு காட்டும் நன்றியும் மரியாதையும் இதுதானா என்றும் சாடினார். இந்த தற்குறிகள்… தற்குறிகள் என்று நீங்கள் குறிப்பிட்டு சொல்பவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துதான் உங்களுடைய அரசியலையே கேள்விக்குறியாக்கப் போகிறார்கள் என்று தெரிவித்தார். மீண்டும் MY DEAR UNCLE என்று மீண்டும் முதல்வர் ஸ்டாலினை குறிப்பிட்டு விஜய் பேசினார்.
இதையும் படிங்க: #BREAKING: பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த திமுகவை கேள்வி கேட்காமல் இருக்க முடியுமா? காஞ்சிபுரத்தில் விஜய் தெறி பேச்சு…!