×
 

முந்துங்கள்.. முந்துங்கள்.. நம்ம தூத்துக்குடியில் இருந்து முன்பதிவு தொடங்கியாச்சு..!

தூத்துக்குடியில் அமைந்து வரும் வின் பாஸ்ட் மின் வாகன ஆலை பணிகள் விரைவில் முடிவடைய உள்ளதையடுத்து தற்போது ஆன்லைனில் காருக்கு முன்பதிவு இந்த மாதத்திற்குள் தொடங்கு  உள்ளது.

சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்  உலகின் முன்னணி மின் வாகனத் தயாரிப்பு நிறுவனமான வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் என்ற நிறுவனம், தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்தது. தூத்துக்குடியில் வின்பாஸ்ட் கார் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஆண்டு பிப்ரவரியில் அடிக்கல் நாட்டினார். 

முதல் கட்டமாக 1,119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது. ஆண்டுக்கு 50 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் இரண்டு பணிமனைகள், 2 குடோன்கள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவைகள்  அமைக்கும் பணி நடந்து முடிவடையும் நிலையில் உள்ளது. இங்கு V7,V6 ஆகிய இரண்டு வகை கார்கள் தயாரிக்கப்படுகிறது.

தூத்துக்குடியில் அமையும் வின்பாஸ்ட் கார் தொழிற்சாலை ஜூலை மாதத்தில் மின்சார கார் உற்பத்தியை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தூத்துக்குடியில் உற்பத்தியாகும் கார்களை மேற்கு ஆசியா, ஆப்பிரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய  முடிவு செய்துள்ளது.

இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு 7ம் ஆண்டு நினைவு நாள்.. மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி..!

ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான மின்சார கார்களை உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடி ஆலை அமைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது.

தற்போது தயாராக உள்ள மூன்று கார்களை விரைவில் முதலமைச்சர் வந்து விற்பனையை துவங்கி வைக்கப்பட்ட பிறகு இந்த இந்த மாதத்திற்குள் மின்சார காருக்கான முன்பதிவு துவங்கும் என கூறப்படுகிறது. 
 

இதையும் படிங்க: கிணற்றுக்குள் சீறிபாய்ந்த கார்... எடுக்க எடுக்க வரும் சடலங்கள்... சாத்தான்குளத்தில் சோகம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share