ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்...!! - மாயாவி பட நடிகை தந்தை கொலையில் அதிரடி திருப்பம்... விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்...!
கொடைக்கானலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த சினிமா துணை நடிகையின் தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேர் கைது, ஒருவரை தேடும்பணி தீவிரம், விசாரணையில் வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்.
ஐதராபாத்தை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் சூரிய நாராயணன் கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில் அருகே சொந்தமான தங்கும் விடுதி வைத்துள்ளார். இவர் நடிகர் சூர்யா நடித்த மாயாவி படத்தில் மாற்றுத்திறனாளியாக நடித்த துணை நடிகை விஷ்ணுபிரியாவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி ஐந்து இளைஞர்கள் சூரிய நாராயணனுக்கு சொந்தமான தங்கும் விடுதியில் இரண்டு தினங்களாக வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்த நிலையில் சூரிய நாராயணனை உடல் முழுவதும் டேப் சுற்றிவிட்டு, அங்கு வேலைப்பார்த்து வந்த ஆறுமுகம் மற்றும் முரளி ஆகிய இரண்டு நபர்களையும் கயிற்றால் கட்டிவிட்டு அங்கிருந்த சிசிடிவி, தங்க நகை மற்றும் முக்கிய ஆவணங்களை திருடிவிட்டு சென்றுள்ளனர்.
இதில் சூரிய நாராயணன் மூச்சு திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அதனை தொடர்ந்து கட்டி போட்டு வைத்திருந்த ஆறுமுகம் கட்டை அவிழ்த்துவிட்டு அங்கிருந்து வெளியே வந்து அருகில் இருந்தவர்களில் மொபைல் போன் மூலம் காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் தனியார் விடுதியை ஆய்வு செய்தனர். மேலும் கொலையாளிகள் யார் என தெரியாமல் இருந்த நிலையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேகா பிரியா மற்றும் 50 மேற்பட்ட சிறப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டு தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
மேலும் அடுத்த கட்டமாக மோப்ப நாய்கள் உதவியுடன் குற்றவாளிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதில் காட்டேஜில் பணியாற்றி வந்த ஆறுமுகம் மற்றும் முரளி ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவம் குறித்து தனிப்படை அமைத்து சென்னை, பாண்டிச்சேரி, அரக்கோணம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடுப் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று சென்னையில் சூரிய நாராயணன் கொலை வழக்கு சம்பந்தமாக 10 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.காவல் துறையின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் ஓர் பயங்கரம்... பெண்ணை கொலை செய்துவிட்டு சடலத்தை வன்கொடுமை செய்த கொடூரம்..!!
சென்னையை சேர்ந்த கிரிஜா என்பவர் பணத்தை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றி (money laundering) கொடுத்து வரும் வேலையை செய்து வருவதாகவும், இவரது மகன் கிரண் இவரும் தனது தாய்க்கு உதவியாக இருந்து வரும் நிலையில் கிரனின் நண்பர் சாம் கட்டப்பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் போன்றவற்றில் ஈடுபட்டு வந்த நிலையில் அவரிடம் கிரண் ஹவாலா பணம் மாற்றி கொடுக்க யாரேரும் நபர்கள் இருந்தால் தெரிவிக்க கேட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து சாம் அவரது நண்பரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து சாம் கிரிஜாவிடம் சில லட்சம் ரூபாய் கொடுத்த நிலையில் அதற்கான கமிஷனுடன் கூடிய கூடுதல் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். பணத்தை தர சிறிது கால அவகாசம் கேட்ட கிரிஜா நீண்ட நாளாக பணத்தை தராமல் இருந்துள்ளார். இந்நிலையில் சென்னையில் உள்ள கிரிஜாவின் கணவரின் நண்பரான சூரிய நாராயணன் உடல் நிலை சரியில்லாத நிலையில் கிரிஜா வீட்டில் சிறிது காலம் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் ECR ரோடு பகுதியில் சூரிய நாராயணனுக்கு சொந்தமான இருந்த(pent house,) பில்டிங் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் அதன் தீர்ப்பு சூரிய நாராயணனுக்கு சாதகமாக வெளியாகி உள்ளது. இந்த பில்டிங் மதிப்பு சுமார் 3.50 கோடி என கூறப்படுகிறது. இதனிடையே கிரிஜாவிடம் தொடர்ந்து பணம் கேட்டு வந்த சாம் சூரியநாராயணனுக்கு சொந்தமான பில்டிங் சம்பந்தமாக ஆவணங்கள் இருப்பதாகவும் அதனை அவரிடம் இருந்து திருடி கொண்டு வந்தால் அதனை வைத்து பணம் வாங்கிக்கொள்ளலாம் என்றும், அதற்கு காட்டேஜில் வேலைபார்த்த வரும் ஆறுமுகம் உதவியாக இருப்பார் என தெரிவித்தும், அவர் தற்போது கொடைக்கானலில் உள்ள காட்டேஜில் ஓய்வு எடுத்து வருகிறார் என்றும் கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து சாம் தலைமையிலான மொத்தம் 5 பேர் கொடைக்கானலுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் கடந்த 11 ஆம் தேதி கொடைக்கானலுக்கு வந்த ஐந்து பேர் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். மேலும் அங்கிருக்க கூடிய நிலைமைகளை கண்டறிந்து அதன் பிறகு அங்கிருந்து காலி செய்துவிட்டு வெளியூர் சென்றுள்ளனர். மீண்டும் இரண்டு நாள் கழித்து காட்டேஜில் வேலை செய்து வந்த ஆறுமுகத்திற்கு போனில் தொடர்பு கொண்டு மீண்டும் 19 ஆம் தேதி அறையை வாடகைக்கு எடுத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஏற்கனவே வந்திருந்த நபர்கள் மற்றும் புதிதாக மூன்று நபர்கள் உட்பட மொத்தம் 5 பேரை அழைத்துக் கொண்டு தங்கும் விடுதிக்கு வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து 22 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் காட்டேஜில் பணியாற்றிய இரண்டு நபர்களை கட்டிப்போட்டு விட்டு சூரிய நாராயணனையும் உடல் முழுவதும் டேப்பால் சுற்றிய நிலையில் சூரிய நாராயணன் மூச்சு திணறல் ஏற்பட்டு அங்கேயே பரிதாபமாக உயிர் இழந்தா.
அதனை தொடர்ந்து காட்டேஜில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி தங்க செயின், பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை அங்கிருந்து திருடிவிட்டு சென்றுவிட்டனர். அதன்பிறகு இங்கிருந்து சுமார் ஐந்து மணி நேரம் கழித்து காட்டேஜில் வேலைபார்த்த ஆறுமுகம் காவல் துறையினருக்கு நடந்தது எதுவும் தெரியாதவாறு தகவல் தெரிவித்துள்ளார்.அவரைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்த பிறகு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இதில் முதல் குற்றவாளியாக சாம் மற்றும் ரஞ்சித், கோகுல்நாத், கிஷோர், அக்ஷய், கார்த்தி, விக்னேஷ், கிரிஜா, கிரண், ஆறுமுகம் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மகேந்திரன் தலைமறைவாகி உள்ளதால் அவரை தேடும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பொள்ளாச்சியில் பயங்கரம்... வீடு புகுந்து பாட்டி, பேத்தி கத்தியால் குத்திக்கொலை... வெறியாட்டம் ஆடிய இளைஞர்...!