×
 

காலையிலேயே களத்தில் இறங்கிய முதலமைச்சர் விஜய்... அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அதிரடி உத்தரவு...!

அரசு மருத்துவமனைகளில் தூய்மையை உறுதி செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டிருக்கிறது 

கடந்த சில வாரங்களாகவே அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தூய்மை என்பது கேள்விக்குறியாக இருப்பதாகவும் போதிய அளவில் பணியாளர்கள் தூய்மை பணிகளில் ஈடுபடுவதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து பல்வேறு எம்எல்ஏக்களும் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் ஆய்வு நடத்திய போது தூய்மை பணிகள் சரிவர செய்யாததைக் கண்டு அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் தற்போது சுகாதாரத்துறை அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் ஸ்ட்ரிக்ட்டான உத்தரவு ஒன்றினை அனுப்பியுள்ளது. 

அதில் அரசு மருத்துவமனைகள் மற்றும் பொது சுகாதார மையங்களில் தூய்மை தன்மையை உறுதிப்படுத்துவதற்கு சுகாதாரத்ததுறை தரப்பில் சம்பந்தப்பட்ட முதல்வர்களுக்கும் இயக்குனர்களுக்கும் உத்தரவு என்பது வழங்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை வார்டுகள், கழிவறைகள் மற்றும் சுற்றுப்புறம் முழுமையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பதற்காக சுகாதாரத்ததுறை வலியுறுத்தியுள்ளது. அனைத்து வார்டுகளிலும் படுக்கைகள் சீராக அமைப்பது, படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை கவர்களை சுழற்சி அடிப்படையில் துவைத்து கிருமி நீக்கம் செய்து தொடர்ச்சியாக பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும், அனைத்து வார்டுகளின் கழிவறைகளையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும், மருத்துவ வளாகம் முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், போதி அளவு கிருமிநாசினி இருப்பு வைத்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் குறித்தும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

அதுமட்டுமல்லாமல் கழிப்பறைகள் முறையாக தூய்மைப்படுத்துவதை உறுதி செய்ய பதிவேடுகளை முறையாக பராமரித்து, ஒவ்வொரு முறையும் சுத்தப்படுத்தும் போது பராமரிப்பு பணியாளர்கள் மூலம் அதனை பதிவிட வேண்டும் என்ற ஒரு வழிகாட்டுதலாக தீவிரப்படுத்துமாறு உத்தரவு என்பது வழங்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமில்லாமல் வார்டு கழிவறைகளை சுத்தமாக பராமரிக்கப்படாதது தெரிய வந்தால் பணியில் இருக்கக்கூடிய செவிலியர்கள் கண்காணிப்பாளர்கள் உடனடியாக உறைவிட மருத்துவ அதிகாரியிடம் தெரிவித்து ஆய்வுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கைக்கும் உட்படுத்த வேண்டும் என்ற உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. 

இதையும் படிங்க: தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்... அமைச்சர்களாக பொறுப்பேற்க போவது யார்?... உத்தேச பட்டியல் இதோ...!

மின் சாதனங்கள், சலவை இயந்திரங்கள் முறையாக செயல்படுவதை கண்காணிக்க வேண்டும். மருத்துவக் கழிவுகளை அகற்றுவது தினசரி அடிப்படையில் அகற்ற வேண்டும் என்ற வழிகாட்டுதல் வழங்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும், உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதலும் வழங்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மருத்துவ பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் நோயாளிகளை கண்ணியமான முறையில் நடத்துவதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு பொதுவெளியில வைக்கப்பட்டு வருகிறது. 

எனவே மருத்துவ பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் நோயாளிகளை கண்ணியமான முறையில் நடத்த வேண்டும். நோயாளிகள் மற்றும் உறவினர்களிடம் மருத்துவ பணியாளர்கள் லஞ்சம் பெறுவதை தவிர்க்க வேண்டும். லஞ்சம் தொடர்பான புகார்கள் எழக்கூடிய பட்சத்தில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தூய்மை தன்மையை சம்பந்தப்பட்ட பொது சுகாதாரத்துறை இயக்குனர்கள் அதாவது மாவட்ட அளவிலான இயக்குனர்கள் உறுதி செய்ய வேண்டும் என்ற ஒரு வழிகாட்டுதல் வழங்கப்பட்டிருக்கிறது. மருத்துவமனைகளின் தூய்மையை உறுதி செய்ய தேவையான தகுந்த ஒப்பந்த பணியாளர்கள் தேவைக்கு ஏற்ப நியமித்து கொள்ளவும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: அமைச்சரவையில் இடம்.? பரபரக்கும் அரசியல்..! ஐயூஎம்எல் கட்சி நாளை அவசர ஆலோசனை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share