முதல்வரை எதிர்த்து..! தவெக வி.எஸ்.பாபு வேட்பு மனுத் தாக்கல்..!!
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தமிழக வெற்றி கழக வேட்பாளர் வி.எஸ். பாபு வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடும் வி.எஸ். பாபு வேட்புமனு தாக்கல் செய்த சம்பவம் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ஐச் சுற்றிய அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க ஒரு திருப்பமாக அமைந்துள்ளது. சென்னையின் வட பகுதியில் அமைந்துள்ள கொளத்தூர் தொகுதி, திமுகவின் முக்கிய கோட்டையாகக் கருதப்படும் இடம்.
இங்கு மு.க.ஸ்டாலின் 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்று மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இந்த முறை நான்காவது முறையாக அதே தொகுதியில் போட்டியிட அவர் மார்ச் 30, 2026 அன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், தவெகவின் வேட்பாளராக வி.எஸ். பாபு அறிவிக்கப்பட்டு, அவரும் வேட்புமனு தாக்கல் செய்ததன் மூலம் தொகுதியில் நேரடி போட்டி உருவானது.வி.எஸ். பாபு, புரசைவாக்கம் பகுதியுடன் தொடர்புடைய அரசியல் பின்னணி கொண்டவர்.
முன்னர் அதிமுகவில் இருந்த அவர், எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் பிடிக்காததால் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகராட்சியில் செல்வாக்கு மிக்க பொறுப்புகளை வகித்த அனுபவம் அவருக்கு உண்டு. கொளத்தூர் தொகுதியை “எனக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட தொகுதி” என்று அவர் பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். தொகுதியில் உள்ள மக்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், வெற்றி வாய்ப்பு குறித்து நம்பிக்கை தெரிவித்தும் அவர் பேசியுள்ளார். தவெக தலைவர் விஜய், கொளத்தூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டபோது வி.எஸ். பாபுவை ஆதரித்து பேசினார்.
இதையும் படிங்க: விஜயின் பெரம்பூர் வேட்பு மனு சர்ச்சை...! திருத்தப்பட்ட பிரமாண பத்திரம் தாக்கல்..!!
இந்த நிலையில் முதலமைச்சரின் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடும் தமிழக வெற்றி கழக வேட்பாளர் வி.எஸ். பாபு வேட்பு மனுதாக்கல் செய்தார். கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த மாநகராட்சி அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இதையும் படிங்க: ஒருவிரல் புரட்சி… விசில் அடிக்க ரெடியா..? புதுவைக்கு மாஸ் வாக்குறுதிகள் கொடுத்த விஜய்..!!