×
 

சும்மா சுள்ளுனு..! கொளுத்த போகுது வெயில்..! உஷார் மக்களே... வானிலை மையம் அலர்ட்..!

தமிழ்நாட்டில் வரும் 12ஆம் தேதி வரை வெயில் கொளுத்தும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2026 மார்ச் மாதத்தில் தமிழகத்தில் வெயில் கொளுத்தியது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு அசாதாரண வானிலை நிகழ்வாகப் பதிவாகியுள்ளது. பொதுவாக மார்ச் மாதம் கோடைக்காலத்தின் தொடக்கமாகக் கருதப்பட்டாலும், இந்த ஆண்டு அதன் தொடக்கத்திலிருந்தே வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உயர்ந்து, மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்தது.

வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக வெயிலின் தாக்கம் உச்சத்தைத் தொட்டது, மேலும் முழு மாநிலத்திலும் வெப்ப அலை போன்ற நிலைமைகள் நிலவின. இந்திய வானிலை ஆய்வு மையம் முன்பே மார்ச் முதல் மே வரை தமிழகத்தில், குறிப்பாக வட மற்றும் கடலோரப் பகுதிகளில் வெப்ப அலை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலிருந்தே வெப்பநிலை உயரத் தொடங்கியது.

வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் போன்ற வட மாவட்டங்களில் மார்ச் 8-ஆம் தேதி வெப்ப அலை போன்ற நிலைமைகள் ஏற்பட்டன. பொதுமக்கள் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. கடுமையான வெயில் தாக்கத்தால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். 

இதையும் படிங்க: வெயில் காலம் தொடங்கியாச்சு.. ஆனா தள்ளிப்போகிறது மாம்பழ சீசன்..!! மாம்பழ லவ்வர்ஸ்களுக்கு ஷாக்..!!

இந்த நிலையில் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் வெயில் கொளுத்தும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் வரும் 12-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி பாரன்ஹீட் வரை உயர வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி பாரன்ஹீட்டாக உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: “ப்ளீஸ்...!! -எக்காரணம் கொண்டும் இந்த நேரத்துல வெளிய வராதீங்க...” - மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட பகிரங்க எச்சரிக்கை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share