×
 

ஆரஞ்சு அலர்ட்... அடிச்சு நகத்த போகுது மழை..! உஷார் மக்களே...!

தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த தாழ்வு மண்டலம் இன்று மாலைக்குள் இலங்கையின் வடக்கு கடற்கரையில் திரிகோணமலை யாழ்ப்பாணம் இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தற்போது இந்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே சுமார் 490 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 310 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இதன் தாக்கத்தால் தமிழக கடலோர பகுதிகளில் காற்று வேகம் அதிகரித்துள்ளது. வங்க கடலின் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்வதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீட்பு படைகள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஐந்து மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: வெளுத்து வாங்கப் போகுது... 12 மாவட்டங்களில் மழை... வானிலை மையம் அலர்ட்...!

நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் அரியலூர், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்திலும் கன மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஐந்து மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: வெளுக்க போகுது. ! கனமழை எச்சரிக்கை... லிஸ்ட்ல சென்னையும் இருக்கு... முழு விவரம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share