×
 

வெளுக்க போகுதாம் மழை... 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... சென்னைக்கும் எச்சரிக்கை...!

தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

கடலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு கலர் கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தேனி, தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் நாளை மறுநாள் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் வரும் 19ஆம் தேதி கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரும் இருபதாம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 21ஆம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை 11 மாவட்டங்களில் 21 ஆம் தேதி கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அடிச்சு நகர்த்த போகுது... 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்... சென்னையிலும் மழை...!

மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர் உள்ளிட்ட பத்து மாவட்டங்களில் 22 ஆம் தேதி கனமழைப்பு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் 22 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: வானிலை அலர்ட்... கனமழை பெய்யுமாம்..! உஷார் மக்களே...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share