×
 

அடுத்த கேபினட் செயலர் யார்? பிரதமர் மோடியின் முக்கிய தேர்வு! மீண்டும் தமிழருக்கு வாய்ப்பு?!

டெல்லி அதிகாரிகள் வட்டாரங்களில், ஒரு விஷயம் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. அது, 'அடுத்த கேபினட் செயலர் யார்?' என்பதே

மத்திய அரசின் உயரிய நிர்வாகப் பதவிகளில் ஒன்றாகக் கருதப்படும் கேபினட் செயலர் பதவி தொடர்பாக டெல்லி அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பான விவாதம் நிலவி வருகிறது. தற்போதைய கேபினட் செயலராக உள்ள தமிழரான டி.வி. சோமநாதன் அடுத்த மாத இறுதியில் ஓய்வு பெற உள்ள நிலையில், அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படுமா அல்லது புதிய அதிகாரி நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கேபினட் செயலர் என்பது இந்திய அரசின் மிக முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் ஒன்றாகும். அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளின் தலைவராக செயல்படும் அவர், மத்திய அரசின் முக்கிய நிர்வாக நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதுடன், பல்வேறு அமைச்சகங்களுக்கிடையேயான செயல்பாடுகளையும் கண்காணிப்பார். மேலும், பிரதமரின் முக்கிய நிர்வாக ஆலோசகர்களில் ஒருவராகவும் இந்தப் பதவி கருதப்படுகிறது.

தற்போது பதவி வகித்து வரும் டி.வி. சோமநாதன், தனது பதவிக்காலம் முடிவடைந்த பிறகு பணி நீட்டிப்பு வேண்டாம் என்று பிரதமரிடம் தெரிவித்துள்ளதாக டெல்லி அதிகாரிகள் வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: பேரிடர் மேலாண்மைத் துறையில் மாற்றம்... சிவஞானம் ஐஏஎஸ் களமிறக்கம்..! தமிழக அரசு நடவடிக்கை..!!

அண்மையில் நீட் தொடர்பான விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளை விரைவுபடுத்த தேவையான மசோதா தயாரிப்பில் அவர் முக்கிய பங்காற்றியதாகவும் கூறப்படுகிறது. இதனால் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கே பணி நீட்டிப்பு வழங்கப்படலாம் என்ற யூகங்களும் நிலவுகின்றன.

ஒருவேளை புதிய கேபினட் செயலர் நியமிக்கப்படுமானால், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலராக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த சரண்யன் கிருஷ்ணன் மற்றும் தற்போதைய உள்துறை செயலர் கோவிந்த் மோகன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக அதிகாரிகள் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பத் திட்டங்களில் முக்கிய பங்காற்றிய சரண்யன் கிருஷ்ணன், பிரதமரின் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், உள்துறை செயலராக பல முக்கிய நிர்வாக முடிவுகளில் பங்காற்றிய கோவிந்த் மோகனும் இந்தப் பதவிக்கான முன்னணி பெயர்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், இவை அனைத்தும் அதிகாரிகள் வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் மட்டுமே. கேபினட் செயலர் பதவி தொடர்பான இறுதி முடிவை மத்திய அரசு இந்த வார இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் 2 ஆம் நாள் மாநாடு..! முதல்வர் விஜய் தலைமையில் முக்கிய ஆலோசனைகள்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share