×
 

ஆஹா... இனி முட்டையை மறந்திட வேண்டியது தானா? - கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சொன்ன ஷாக்கிங் நியூஸ்...!

வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் முட்டை உற்பத்தி 15 சதவிகிதம் குறைந்துள்ளது.

கோழித்தீவினற்கு தேவையான மக்காசோளம், சோயா புண்ணாக்கு, தவிடு போன்ற மூலப்பொருட்களின் விலை கடந்த ஒரு மாதத்தில் டன் ஒன்றுக்கு  ரூ.10 ஆயிரம் வரை விலை உயர்ந்துள்ளது. இதுவே முட்டை விலை உயர்வுக்கு காரணம் என  தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்க தலைவரும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல தலைவருமான சிங்கராஜ் தகவல்

  கோழிப் பண்ணையாளர்கள் மற்றும் முட்டை வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நாமக்கல் லில் இன்று (16-7-2026) நடைபெற்றது. கோழிப் பண்ணை தொழிலின் தற்போதைய நிலை முட்டை விற்பனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள கோழிப் பண்ணை உரிமையாளர்கள் மற்றும் முட்டை வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு தமிழ் நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்க தலைவரும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல தலைவருமான திரு சிங்கராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில் , கோழித்தீவினற்கு தேவையான மக்காசோளம், சோயா புண்ணாக்கு, தவிடு போன்ற மூலப்பொருட்களின் விலை கடந்த ஒரு மாதத்தில் டன் ஒன்றுக்கு  ரூ.10 ஆயிரம் வரை விலை உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க: சொத்தை காப்பாற்ற ஆளுங்கட்சிக்கு ஓடினார்கள்! துரோகிகள் சொல்வதை நம்ப வேண்டாம்.. இபிஎஸ் காட்டம்!

இதனால் முட்டையின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. முட்டை கொள்முதல் விலை ரூ.7 இருந்தால் தான் இலாபகரமாக கோழிப்பண்ணையை நடத்த முடியும். பழைய கோழிப்பண்ணைகளைபராமரித்து வருவதால்  செலவினம் அதிகரித்து உள்ளது.

வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் முட்டை உற்பத்தி 15 சதவிகிதம் குறைந்துள்ளது. 8 கோடி முட்டையிடும் கோழிகள் இருக்கும் சூழ்நிலையில் 7 கோடி முட்டைகள் உற்பத்தியானதில் வெயிலின் தாக்கம் காரணமாக ஒரு கோடி முட்டைகள் குறைந்துள்ளது. மேலும் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் கோழிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

முட்டை உற்பத்தி குறைந்துள்ளதால் தற்போது 6 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. தீவின மூலப்பொருட்களின் விலை மக்காசோளம், தவிடு கிலோவிற்கு ரூ.28 க்கு விற்பனை செய்யப்படுவதால் மத்திய அரசிடம் ஸ்டாக் இருக்கும் மக்காசோளம், ரைஸ் உள்ளிட்ட பொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும். ஈ தொல்லைகளை சமாளிக்க கோழிப்பண்ணைகளை தீவிரமாக பராமரித்து வருகின்றோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னையில் கள்ளநோட்டு கும்பல் முகாம்... களத்தில் இறங்கிய சிபிசிஐடி... மலேசியா மாஃபியாவுடன் தொடர்பா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share