×
 

பத்தல பத்தல.. அடம் பிடிக்கும் திருமா... விஜய்க்கு வைத்த 4 டிமாண்ட்... தாமதத்திற்கு காரணம் இதுவா?

2 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட விசிகவிடம் தவெக தலைமை கடிதம் மூலம் ஆதரவு கோரி இருந்தது. 

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு மெஜாரிட்டி இல்லை. மெஜாரிட்டிக்கு மொத்தம் 118 எம்எல்ஏக்கள் வேண்டும். ஆனால் விஜய் 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலா 2 எம்எல்ஏக்கள் என 4 பேர் தவெகவிற்கு ஆதரவு கொடுத்துள்ளனர். இதனால் மெஜாரிட்டி எண்ணிக்கை 116 ஆக உயர்ந்திருந்தாலும் எதிர்பார்த்த பெரும்பான்மையை எட்டித்தொட இன்னம் 2 தொகுதிகள் தேவை. இந்நிலையில் 2 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட விசிகவிடம் தவெக தலைமை கடிதம் மூலம் ஆதரவு கோரி இருந்தது. 

இதுதொடர்பாக தனது கட்சியி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவு சொல்வதாக அறிவித்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நேற்று மாலை 5 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக விசிக உயர்நிலைக்குழு கூட்டத்தை நடத்தினர். அப்போது விஜய்க்கு ஆதரவு கொடுக்கலாமா? வேண்டாமா? என்பது பற்றி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கட்சியின் நிர்வாகிகள் தங்களின் விருப்பங்களை தெரிவித்தனர். அதுபற்றி விவாதம் நடத்தி திருமாவளவன் விஜய்யின் தவெகவை ஆதரிக்கலாமா? வேண்டாமா? என்ற முடிவை எடுத்துள்ளார்.

இந்நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் இன்று கூட்டணி குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று மாலை 4 மணிக்கு முடிவு அறிவிக்கப்படும் என விசிக செய்தி தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதற்கு பின்னால் உள்ள காரணங்கள் குறித்து பல விஷயங்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக விஜயிடம் திருமாவளவன் துணை முதலமைச்சர் பதவியோடு சேர்த்து மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது. விசிகவிற்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க விஜய் தயாராக உள்ள நிலையில், திருமாவளவனை துணை முதலமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: விஜய்க்கு ஆதரவு கொடுக்கணும்..! கையை அறுத்துக் கொண்ட விசிக தொண்டர்..! பரபரப்பு..!

அதற்காக திருச்சி கிழக்கு அல்லது பெரம்பூர் தொகுதியில் ஒன்றை விஜய் ராஜினாமா செய்தால், அதனை திருமாவளவனுக்கு வழங்கி அவருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. திருமாவளவன் ஜெயித்து எம்.எல்.ஏ. ஆனதும், அவருடைய சிதம்பரம் தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்வார். அப்போது அந்த தொகுதியில் தவெக வேட்பாளரை நிறுத்தாமல் விசிக களமிறக்கும் வேட்பாளருக்கு தவெக ஆதரவளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை விசிக தவெக தலைமையிடம் முன்வைத்துள்ளது.

இதில் விசிகவிற்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பதிலும், திருச்சி கிழக்கு தொகுதியில் திருமாவளவனுக்கு வாய்ப்பளிக்கவும் விஜய் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் திருமாவளவனுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பதில் விஜய்க்கு விரும்பமில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 5 எம்.எல்.ஏ.களுடன் ஆதரவு வழங்கிய காங்கிரஸுக்கே ஒரு அமைச்சரவை சீட் தான் கொடுக்கப்பட்டது. வெறும் 2 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட விசிகவுக்கு துணை முதலமைச்சர் பதவியா? என தவெகவினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனால் விசிகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக விஜய் மெளனம் காத்து வருவதாகவும், விசிகவின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்த பின்னர் அறிவிப்பை வெளியிடலாம் என்பதாலும் தான் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பை ஒத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையும் படிங்க: திருமா. எப்போ வருவாரு..? ஆதரவு தருவாரு..? “ 4 மணிக்கு” விசிக வெளியிடும் முக்கிய அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share