திருப்பதியில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்திய ஹார்திக் பாண்டியா... வைரலாகும் புகைப்படங்கள்!
இந்திய கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தார். அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தரிசனத்திற்கு முன்பு அவர் திருமலையில் மொட்டை அடித்து முடிக்காணிக்கை செலுத்தி தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
காயம் காரணமாக சமீப காலமாக சர்வதேச போட்டிகளில் இருந்து விலகி இருக்கும் ஹார்திக் பாண்டியா, உடல்தகுதியை மீட்டெடுத்து மீண்டும் கிரிக்கெட் களத்திற்குத் திரும்ப தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடிய அவர், அதன் பின்னர் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் இடம்பெறவில்லை.
இதற்கிடையில், அடுத்த ஐபிஎல் சீசன் மற்றும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை உள்ளிட்ட முக்கிய தொடர்களுக்காக தயாராகி வரும் நிலையில், அவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தந்துள்ளார். அதிகாலையில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் பங்கேற்ற ஹார்திக் பாண்டியா, சாமி தரிசனத்திற்கு முன்பு மொட்டை அடித்து முடிக்காணிக்கை செலுத்தி வழிபட்டார்.
இதையும் படிங்க: காமன்வெல்த் போட்டியில் இந்தியா மிரட்டல்! குத்துச் சண்டையில் 7 தங்கம்! வரலாற்று சாதனை! தொடரும் பதக்க வேட்டை!
VIDEO | Tirupati, Andhra Pradesh: Indian cricketer Hardik Pandya offers prayers during the Suprabhata Seva at the Sri Venkateswara Swamy Temple in Tirumala.
— Press Trust of India (@PTI_News) August 2, 2026
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/HKdtPmcyC3
தரிசனத்தின்போது ஹார்திக் பாண்டியாவுடன் அவரது காதலி மஹிகா சர்மாவும் உடனிருந்ததாக கூறப்படுகிறது. இருவரும் பாரம்பரிய உடையில் கோவிலுக்கு வந்து ஏழுமலையானை வழிபட்டனர். பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு தீர்த்தம், பிரசாதம் மற்றும் ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.
கடந்த சில மாதங்களாக ஹார்திக் பாண்டியாவின் கிரிக்கெட் எதிர்காலம் மற்றும் ஐபிஎல் அணி தொடர்பாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வந்தன. குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து அவர் விலகலாம் என்றும், வேறு அணிக்கு செல்லலாம் என்றும் தகவல்கள் பரவின. இதுபோன்ற சூழலில் அவர் திருப்பதி கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்திய நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
ஹார்திக் பாண்டியா மொட்டை அடித்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன. அவரது புதிய தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளையும் கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் தங்க வேட்டை! ஒரே நாளில் 2 தங்கம்... ஜூடோவில் அசத்திய அஷ்மிதா, ஹர்ஷ் சிங்!