×
 

அபார பந்துவீச்சால் CSK-வை சுருட்டிய RCB... த்ரில் வெற்றியால் புள்ளிப்பட்டியலில் முதலிடம்!!

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணியும்  ஆர்சிபி அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் ஜாக்கப் போத்தேல் மற்றும் விராட் கோலி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.  ஜோக்கப் பொத்தல் 33 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் விராட் கோலி 33 பந்துகளின் 62 ரன்கள் சேர்த்து அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த டேவுதட் படிக்கல் 17 ரன்களிலும், ஜிதேஷ் சர்மா 7 ரன்களிலும் ரஜத் பட்டிதார் 11 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் ஆர் சி பி அணி 200 ரன்களை தாண்டாது என எதிர்பார்க்கப்பட்டது. 180 ரன்களை எட்டவே ஆர் சி பி அணி தடுமாறி வந்த நிலையில் ரோமாரியோ ஷெஃபெர்ட் – டிம் டேவிட் கூட்டணி களமிறங்கியது. 19 ஆவது ஓவரரை கலீல் அகமத் ஆட்டத்தின் வீச ஆர்சிபி வீரர் ரோமாரியோ ஷெஃபெர்ட் சிக்ஸ், பவுண்ட்ரி என பந்துகளை விளாசினார். இந்த ஓவரில் 4 சிக்ஸர்களும்,2 பவுண்டரிகளும் சென்றது. இதன் மூலம் ஒரே ஓவரில் ஷெஃபெர்ட் 33 ரன்கள் குவித்தார். இதனால் ஆட்டம் தலைக்கீழாக மாறியது. இதேபோன்று பதிராணா கடைசி ஓவர் வீசினார். அதிலும் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களை ஆர்சிபி வீரர்கள் அடித்தனர். இந்த ஓவரிலும் 24 ரன்கள் சென்றது.

இதையும் படிங்க: சி.எஸ்.கே பந்துகளை தெறிக்கவிட்ட ரொமாரியோ ஷெப்பர்ட்... இமாலய இலக்கு நிர்ணயித்த ஆர்.சி.பி!!

இதன் மூலம் கடைசி இரண்டு ஓவரில் 57 ரன்கள் சேர்த்து ஆர்சிபி அணி ஆட்டத்தையே தலைகீழ் மாற்றியது. டிம் டேவிட் 2 ரன்கள் சேர்த்திருந்தார். ரெமோரியோ செபர்ட் 14 பந்துகளில் 53 ரன்கள் விளாசியுள்ளார். இதனால் 20 ஓவர் முடிவில் ஆர்சிபி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. 214  ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக ஆயுஷ் மாத்ரே மற்றும் ஷேக் ரசீத் களமிறங்கினர். இதில் ஷேக் ரசீத் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சாம் கரன் 5 ரன்களில் ஆட்டமிழக்க சிஎஸ்கே அணி இலக்கை எட்ட தடுமாறியது. மறுமுனையில் 17 வயது வீரரான ஆயுஷ் மாத்ரே அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பின்னர் வந்த ஜடேஜா – மாத்ரே கூட்டணி அபாரமாக ஆடி எதிரணியை திக்குமுக்காட வைத்தனர்.

அப்போது ஆயுஷ் மாத்ரே 48 பந்துகளில் 94 எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த டிவால்ட் பிரேவிஸ் டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் களமிறங்கிய தோனி மற்றும் ஜடேஜா நிதானமாக ஆடினர். தோனி 8 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க சிஎஸ்கே அணியின் வெற்றி வாய்ப்பும் சட்டென குறைந்தது. ஜடேஜா ஒருபுறம் நம்பிக்கை அளித்தாலும் இலக்கை எட்ட அணி தடுமாறியது. கடைசி ஓவர் வரை போராடிய ஜடேஜா 45 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். மறுபுறம் சிவம் தூபே 8 ரன்கள் சேர்த்தார். ஆனால் இலக்கை எட்ட முடியவில்லை. இதன் மூலம் ஆர்சிபி அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: CSK-வை கிண்டலடிக்கும் வகையில் ஜெயில் டீசர்ட்... பெங்களூர் மைதானத்தில் RCB ரசிகர்கள் அடாவடி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share