சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள நடிகர் ரவிமோகனின் வீட்டில் பணிபுரிந்து வந்த இரு பணிப்பெண்கள் மற்றும் அவர்களில் ஒருவரின் மகன் சிறைபிடித்து வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தகவல் கிடைத்தது. அதில், நடிகர் ரவிமோகனின் வீட்டிற்குச் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து, வீட்டுப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களின் உறவினர்கள் அவசர உதவி எண்ணான 100-க்கு தொடர்புகொண்டு புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
தகவலின் பேரில் உடனடியாக நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இரண்டு பணிப்பெண்களும் அவர்களில் ஒருவரின் மகனும் அந்த வீட்டிற்குள் தங்க வைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ‘மீசையை முறுக்கு 2’ படத்தின் ‘அடி போடி’ பாடல்..! ஹிப் ஹாப் ஆதியின் கம்பேக் கொண்டாட்டத்தின் அப்டேட் வந்தாச்சு..!
இதுகுறித்து விசாரித்தபோது, அவர்கள் திருட்டில் ஈடுபட்டதாக நடிகர் ரவிமோகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், சந்தேகத்தின் பேரில் யாரையும் தனிப்பட்ட முறையில் அடைத்து வைத்து விசாரிப்பது சட்டவிரோதமானது என்றும், இதுபோன்ற சூழலில் காவல்துறையில் முறையாக புகார் அளிக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
புகார் அளிக்கப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்டவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து சட்டப்படி விசாரணை நடத்த முடியும் என்றும், தனிப்பட்ட முறையில் சிறைபிடித்து விசாரிப்பது தவறு என்றும் போலீசார் நடிகர் ரவிமோகன் தரப்பினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, வீட்டிற்குள் தங்க வைக்கப்பட்டிருந்த இரண்டு பணிப்பெண்களும் அவர்களில் ஒருவரின் மகனும் போலீசாரால் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் மீண்டும் ஈடுபட்டால், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதுவரை நடிகர் ரவிமோகன் தரப்பிலோ அல்லது பணிப்பெண்கள் தரப்பிலோ காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வ புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும், பணிப்பெண்களின் உறவினர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அவர்களை மீட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக நீலாங்கரை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காவல்நிலையத்தில் திருட்டு தொடர்பாக புகார் அளிக்க அறிவுறுத்திய நிலையில், நீலாங்கரையில் உள்ள ரவிமோகனின் வீட்டில் ரூ.3 லட்சம், டைமண்ட் செயின் திருட்டு என புகார் நடிகர் ரவி மோகனின் மேனேஜர் நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார். 2 ஓட்டுநர்கள், 1 பி.ஏ, பணிப்பெண் மற்றும் அவரது மகன் மீது சந்தேகம் என புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கிளாமர் லுக்கில் மோனல் கஜ்ஜர்..!! இன்ஸ்டாகிராமை தெறிக்கவிடும் கவர்ச்சி போட்டோஸ்..!