தமிழ் சினிமாவையும், சமீபகாலத்தில் அரசியலையும் சுற்றிய ஒரு பெரிய சர்ச்சை கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தவெகதலைவர் மற்றும் நடிகர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றிய வதந்திகள், திருமண விவகாரங்களைப் பற்றிய ஊகக் கதைகள், அதனுடன் இணைந்து திரிஷாவுடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற வீடியோக்கள் என இவை எல்லாம் சேர்ந்து ஒரு பரபரப்பை உருவாக்கின. அதற்கு மேல், நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி விஜய்யை குறிவைத்து பேசிய கடுமையான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், தற்போது அதற்கான விளக்கத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் ஒரு திருமண விழாவில் நடிகர் விஜய்யும் நடிகை திரிஷாவும் ஒன்றாக பங்கேற்ற வீடியோ எக்ஸ், இன்ஸ்ட்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தளங்களில் தீயாய் பரவியது. அதே நேரத்தில், விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரியதாக பரவும் வதந்தி இந்தக் காட்சியுடன் இணைந்து பெரும் விவாதத்தை கிளப்பியது. “விஜய்–திரிஷா மீண்டும் நெருக்கமாகிவிட்டார்களா?”, “இதற்கான காரணம் விவாகரத்தா?” போன்ற கேள்விகள் இணையத்தில் வேகமாக பரவின.

இதே சூழலில் நடிகர்–இயக்குநர் சமுத்திரக்கனி மிகவும் கடுமையான கருத்துகளைப் பகிர்ந்த ஒரு காணொளி வெளிவந்தது. “இதெல்லாம் விளையாட்டா? யாரை பழிவாங்க இதை செய்கிறார்? ஒரு பிரச்சனை நடக்கும்போது நடிகையை கூட்டி வருகிறார். நான்கு சுவருக்குள் இருக்க வேண்டிய விஷயங்களை வெளியே கொண்டுவருகிறார். சொந்தக் கட்சிக்காரர்களே இதற்கு மேல் முட்டுக்கொடுக்க முடியாது என்று புலம்புகிறார்கள்” என்று அவர் பேசிய காட்சி சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: மீண்டும் சோகத்தில் விக்னேஷ் சிவன்..! தொடர்ந்து தள்ளிபோகும் LIK பட ரிலீஸ் தேதி.. கவலையில் ரசிகர்கள்..!
விஜய் ரசிகர்கள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். “விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை யாரும் இப்படி பொதுவெளியில் பேசக் கூடாது”, “வதந்திகளின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பது தவறு” என்று பலரும் பதிவிட்டனர். இதனால் சமுத்திரக்கனியின் கருத்து ஒரு நாள் முழுவதும் விவாதப் பொருளாக மாறியது.
இத்தகைய சூழலில், இன்று சமுத்திரக்கனி தனது விளக்கத்தை வெளியிட்டுள்ளார். அவர் தெரிவித்துள்ளார்: “எனக்கு மனதில் ஒன்று வைத்துக்கொண்டு வெளியே ஒன்று பேசத் தெரியாது. மகிழ்ச்சியோ அல்லது வலியோ என எதுவாக இருந்தாலும் அதை அப்படியே வெளிப்படுத்திவிடுவேன். ஒருவகை அக்கறையும், அதனால் ஏற்பட்ட வலியும் தான் அப்படி பேசியதற்குக் காரணம். நான் சொன்னதற்கு வருத்தமில்லை. அதை குற்றமாகவும் நினைக்கவில்லை.”

அவரது இந்த விளக்கம் மேலும் ஒரு விவாதத்துக்கே வழிவகுத்துள்ளது. அவரது ஆதரவாளர்கள் “சமுத்திரக்கனி உண்மையை பேசுபவர், அதனால் தான் அவர் இவ்வாறு கூறினார்” என தெரிவிக்க, விஜய் ரசிகர்கள் “அக்கறை இருப்பது வேறு; ஆதாரமில்லாத வதந்திகளுக்கு அடிப்படையாக நீதிமன்றத் தண்டனை போல் பேசுவது வேறு” என எதிர்க்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பலமுறை விவாதமானாலும், அது அரசியலோடு கலந்து வரும் போது சர்ச்சை பல மடங்கு அதிகரிக்கிறது. தற்போது விஜய்யின் அரசியல் பயணம் தொடங்கியுள்ள நிலையில், அவரைச் சுற்றிய எந்த தகவலும் மிகப்பெரிய விவாதமாக மாறுகிறது. இந்த விவகாரம் கூட அந்த அரசியல் சூழ்நிலையுடனும் கலந்தே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் பரவலாக கருத்துரைக்கின்றன.

சமுத்திரக்கனியின் விளக்கத்தால் சர்ச்சை முடிந்துவிட்டதா? இல்லை இன்னும் பல தளங்களில் இது தொடரப் போகிறதா? என்பது ரசிகர்களும், தொழில்துறையும் ஆர்வத்துடன் கவனித்து வரும் கேள்வியாக உள்ளது. விஜய் இந்த விஷயத்தில் ஏதேனும் பதில் அளிப்பாரா? அல்லது மௌனமாகவே இருப்பாரா? என அடுத்த சில நாட்களில் இது தெளிவாகும்.
இதையும் படிங்க: திருடியை பிடிக்க நூதன பிளான்.. அம்மனாக மாறிய மீனா..! முத்துவால் வெளிவந்த உண்மை.. சிறகடிக்க ஆசையில் இன்று..!