• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    உணர்வுகளை வெற்றிக்காக பயன்படுத்த விரும்பவில்லை..!! பாக்யராஜ் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்திய பார்த்திபன்..!

    நடிகர் பார்த்திபன் எழுத்தாளர் சங்க தேர்தல் குறித்த உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    Author By Bala Sat, 11 Jul 2026 13:04:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-radhakrishnan-parthiban-opens-about-one-more-thing-after-bhagyaraj-demise-tamilcinema

    தமிழ் திரையுலகில் இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பன்முக திறமையால் தனக்கென தனி இடத்தை உருவாக்கிய இயக்குநர் பாக்யராஜின் மறைவு, சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. அவரது மறைவுக்குப் பிறகு, அவருடன் நெருக்கமாக பழகியவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களது நினைவுகளையும், அவருடனான அனுபவங்களையும் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.

    அந்த வரிசையில், பாக்யராஜின் மாணவராகவும், அவரது படைப்புகளால் ஈர்க்கப்பட்டவராகவும் இருக்கும் இயக்குநர் பார்த்திபன், தொடர்ந்து தனது சமூக வலைதளப் பதிவுகள் மூலம் பாக்யராஜ் மீதான தனது அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தி வருகிறார். தமிழ் சினிமாவில் தனித்துவமான கதை சொல்லும் முறையால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் இயக்குநர் பாக்யராஜ். எளிய மனிதர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து வித்தியாசமான திரைக்கதைகளை உருவாக்கிய அவர், எழுத்து மற்றும் இயக்கத்தில் தனி முத்திரை பதித்தார்.

    அவரது படைப்புகள் மட்டுமின்றி, அவரிடம் பயின்ற பல திரை கலைஞர்களும் இன்று தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்துள்ளனர். அந்த வகையில், பாக்யராஜின் சிஷ்யர்களில் முக்கியமானவராக பார்க்கப்படுபவர் பார்த்திபன். இயக்குநராக அறிமுகமான காலம் முதல் இன்று வரை, பாக்யராஜ் மீது கொண்ட மரியாதையை அவர் பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் அதர்வா..! சுதாகரால் படத்தில் ஏற்படும் மாற்றம்.. திரைக்கதையில் தடுமாற்றம்.. 'இதய முரளி' விமர்சனம்..!

    radhakrishnan-parthiban-opens

    பாக்யராஜின் மறைவுக்குப் பிறகு, அவரது இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் பல பதிவுகளை பார்த்திபன் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் நடிகை குஷ்புவின் மகள் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் வீடு திரும்பிய பாக்யராஜ், மறுநாள் காலை திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது. மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றும் பலனளிக்கவில்லை. இந்த செய்தி திரையுலகினர் மட்டுமின்றி, ரசிகர்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    பாக்யராஜ் மறைந்த பிறகு, அவருடன் இருந்த நினைவுகளை பார்த்திபன் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அவரது ஒவ்வொரு பதிவிலும் குருவின் மீதான அன்பும், இழப்பின் வலியும் வெளிப்படுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பாக்யராஜ் வகித்து வந்த பதவி தொடர்பாக பார்த்திபன் வெளியிட்டுள்ள பதிவு தற்போது கவனம் பெற்றுள்ளது. பாக்யராஜ் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக பதவி வகித்து வந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, அடுத்ததாக நடைபெறவுள்ள எழுத்தாளர் சங்கத் தேர்தலில் பார்த்திபன் போட்டியிட்டால் அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் என்று சிலர் அவரிடம் கூறியதாக தெரிகிறது.

    இதற்கு பதிலளிக்கும் வகையில் பார்த்திபன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார். அதில், பாக்யராஜ் எழுத்தாளர் சங்க தேர்தலை சந்தித்த காலகட்டத்தில் சில மன அழுத்தங்களை எதிர்கொண்டதாக தான் அறிந்ததாக குறிப்பிட்டுள்ளார். “பாக்யராஜ் சாருக்கு எழுத்தாளர்கள் சங்க தேர்தல் சற்று மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அறிந்தேன். ஏற்கனவே அவர் நடுநிலையாகவும் சிறப்பாகவும் செயல்பட்டிருந்ததால் தலைமை பதவிக்கு தகுதியானவராக இருந்தாலும், தேர்தலை சந்திக்கும் போது வரும் அழுத்தங்களை சமாளிப்பதில் சிரமப்பட்டதாக கேள்விப்பட்டேன்” என பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

    radhakrishnan-parthiban-opens

    மேலும், பாக்யராஜிடம் தான் முன்பு கூறிய கருத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். “இது ஒன்றும் பொது தேர்தல் அல்ல. போட்டியின்றி கௌரவமாக தேர்ந்தெடுத்தால் நீங்கள் தலைமை தாங்குங்கள். இல்லாவிட்டால் அமைதியாக உங்கள் எழுத்தை கவனியுங்கள்” என்று கூறியதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து, பாக்யராஜ் மறைவுக்குப் பிறகு சிலர் தன்னை எழுத்தாளர் சங்க தலைவர் அல்லது செயலாளர் பதவிக்கு போட்டியிடுமாறு கூறியதாகவும், தற்போது தனக்கு நல்ல பெயர் இருப்பதால் வெற்றி பெற வாய்ப்பு அதிகம் என அவர்கள் தெரிவித்ததாகவும் பார்த்திபன் கூறியுள்ளார்.

    ஆனால், அந்த ஆலோசனையை தான் ஏற்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனது மறுப்புக்கான காரணத்தையும் அவர் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக பதிவு செய்துள்ளார். “என் ஒவ்வொரு சொட்டு உண்மையான கண்ணீருக்கும் உள்நோக்கமான களங்கம் கற்பிக்கப்படும். என் உணர்வுகள் முழுக்க முழுக்க உன்னதமானது. அதை அனுதாபமாக்கி விற்று வெற்று வெற்றி பெற எனக்கு விருப்பமில்லை” என்று பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார். இந்த வார்த்தைகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, பாக்யராஜ் மீதான தனது மரியாதையை பதவி அல்லது வாய்ப்புகளுடன் இணைக்காமல் பார்த்திபன் வெளிப்படுத்திய விதம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

    மேலும், எழுத்தாளர் சங்க தேர்தலில் வெற்றி பெறும் அணிக்கு முன்கூட்டியே வாழ்த்து தெரிவித்துள்ள பார்த்திபன், தனது அடுத்த முக்கிய பணியாக ஆகஸ்ட் 9-ஆம் தேதி நடைபெற உள்ள நினைவு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதில் கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகம் சார்பில் இயக்குநர் பாரதிராஜா மற்றும் இயக்குநர் பாக்யராஜ் ஆகியோருக்காக நினைவு உற்சவம் பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பதே தனது முக்கிய பணியாக இருக்கும் என்றும் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

    radhakrishnan-parthiban-opens

    பார்த்திபனின் இந்த பதிவு வெளியான பிறகு, ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். “பாக்யராஜ் சிஷ்யன் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார்”, “குருவின் மீது உண்மையான அன்பு கொண்டவர் பார்த்திபன்” என்று பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஒரு கலைஞரின் மறைவுக்குப் பிறகு அவரை நினைவுகூர்வது மட்டுமின்றி, அவரது கொள்கைகளையும் மதிப்புகளையும் காப்பாற்ற முயற்சிப்பது தான் உண்மையான மரியாதை என்பதை பார்த்திபனின் இந்த பதிவு வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கூறுகின்றனர். பாக்யராஜின் இழப்பில் இருந்து அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மீண்டு வர திரையுலகினரும் ரசிகர்களும் தொடர்ந்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: முன்பதிவில் முண்டியடிக்கும் ‘ஜனநாயகன்’..!! சென்சார் சான்றிதழுக்கு பிறகு வெளியான முக்கிய தகவல்.. ஹேப்பியான ரசிகர்கள்..!

    மேலும் படிங்க
    வந்தே மாதரம் சுற்றறிக்கையை உடனே திரும்ப பெறு! மத்திய அரசுக்கு எதிராக தொல். திருமாவளவன் ஆவேசம்!

    வந்தே மாதரம் சுற்றறிக்கையை உடனே திரும்ப பெறு! மத்திய அரசுக்கு எதிராக தொல். திருமாவளவன் ஆவேசம்!

    இந்தியா
    அண்ணாமலையின் புதிய இயக்கம்.. வடிவேலு பாணியில் கலாய்த்த தமிழக காங்கிரஸ் தலைவர்!

    அண்ணாமலையின் புதிய இயக்கம்.. வடிவேலு பாணியில் கலாய்த்த தமிழக காங்கிரஸ் தலைவர்!

    தமிழ்நாடு
    2026-ல் விஜய் வந்த மாதிரி.. 2031-லும் ஆட்சி மாற்றம் நடக்கும்! பொள்ளாச்சியில் அண்ணாமலை அண்ணாமலை பேச்சு!

    2026-ல் விஜய் வந்த மாதிரி.. 2031-லும் ஆட்சி மாற்றம் நடக்கும்! பொள்ளாச்சியில் அண்ணாமலை அண்ணாமலை பேச்சு!

    தமிழ்நாடு
    அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா பின்னணியில் தவெகவின் குதிரை பேரம்! ஆளுநரிடம் டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி புகார்!

    அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா பின்னணியில் தவெகவின் குதிரை பேரம்! ஆளுநரிடம் டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி புகார்!

    தமிழ்நாடு

    'போதையில்லா தமிழகம்' விழிப்புணர்வு மாநாட்டை குத்துவிளக்கேற்றி தொடங்கினார் அண்ணாமலை!

    தமிழ்நாடு
    திரையுலகமே திரண்ட இறுதி பயணம்! 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜானகி அம்மா உடல் தகனம்!

    திரையுலகமே திரண்ட இறுதி பயணம்! 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜானகி அம்மா உடல் தகனம்!

    இந்தியா

    செய்திகள்

    வந்தே மாதரம் சுற்றறிக்கையை உடனே திரும்ப பெறு! மத்திய அரசுக்கு எதிராக தொல். திருமாவளவன் ஆவேசம்!

    வந்தே மாதரம் சுற்றறிக்கையை உடனே திரும்ப பெறு! மத்திய அரசுக்கு எதிராக தொல். திருமாவளவன் ஆவேசம்!

    இந்தியா
    அண்ணாமலையின் புதிய இயக்கம்.. வடிவேலு பாணியில் கலாய்த்த தமிழக காங்கிரஸ் தலைவர்!

    அண்ணாமலையின் புதிய இயக்கம்.. வடிவேலு பாணியில் கலாய்த்த தமிழக காங்கிரஸ் தலைவர்!

    தமிழ்நாடு
    2026-ல் விஜய் வந்த மாதிரி.. 2031-லும் ஆட்சி மாற்றம் நடக்கும்! பொள்ளாச்சியில் அண்ணாமலை அண்ணாமலை பேச்சு!

    2026-ல் விஜய் வந்த மாதிரி.. 2031-லும் ஆட்சி மாற்றம் நடக்கும்! பொள்ளாச்சியில் அண்ணாமலை அண்ணாமலை பேச்சு!

    தமிழ்நாடு
    அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா பின்னணியில் தவெகவின் குதிரை பேரம்! ஆளுநரிடம் டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி புகார்!

    அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா பின்னணியில் தவெகவின் குதிரை பேரம்! ஆளுநரிடம் டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி புகார்!

    தமிழ்நாடு
    'போதையில்லா தமிழகம்' விழிப்புணர்வு மாநாட்டை குத்துவிளக்கேற்றி தொடங்கினார் அண்ணாமலை!

    'போதையில்லா தமிழகம்' விழிப்புணர்வு மாநாட்டை குத்துவிளக்கேற்றி தொடங்கினார் அண்ணாமலை!

    தமிழ்நாடு
    திரையுலகமே திரண்ட இறுதி பயணம்! 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜானகி அம்மா உடல் தகனம்!

    திரையுலகமே திரண்ட இறுதி பயணம்! 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜானகி அம்மா உடல் தகனம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share