சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. இல்லையென்றால் "சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்" என்ற பாடல் வந்திருக்குமா? அந்த அளவிற்கு நடிகர் ரஜினியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இப்படிப்பட்ட ரஜினிகாந்த் 80களில் உள்ள ரசிகர்களுக்கு ஏற்றார் போல் ஒரு ஸ்டைலும், 90களில் உள்ள ரசிகர்களுக்கு ஏற்றார் போல் ஒரு ஸ்டைலும், 2கேக்களில் உள்ள ரசிகர்களுக்கு ஏற்றார் போல் ஸ்டைலிலும் நடித்து இன்று பலகோடி ரசிகர்களை தன் கைவசம் வைத்து இருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

1975ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான "அபூர்வ ராகங்கள்" என்ற திரைபாத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் ரஜினிகாந்த். பின் மூன்று முடிச்சு, காயத்திரி, 16 வயதினிலே, பைரவி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, அன்னை ஒரு ஆலையம், பில்லா, நட்சத்திரம், அன்புக்கு நான் அடிமை, காளி, நான் போட்ட சவால், எல்லாம் உன் கைராசி, ஜானி, பொல்லாதவன், முரட்டு காளை, நெற்றிக்கண், ராணுவ வீரன், என 1981 வரை மிகவும் கோபக்காரராகவும் ஆக்ரோஷ்க்காரராக மட்டுமே நடித்து வந்தார் ரஜினி காந்த்.
இதையும் படிங்க: முகேஷ் அம்பானி வீட்டு கல்யாணத்துல டான்ஸ் ஆடுனது குத்தமா? - காது கூசும் கமெண்ட்ஸ்... ரஜினியால் கடுப்பான கமல் ஃபேன்ஸ்...!

1981றிற்கு மேல் இனி தான் நகைச்சுவையாக நடிக்கப்போவதாக கூறி "தில்லு முல்லு" என்ற படத்தில் மிகவும் பிரமாதமாக யாரும் எதிர்பாராத வகையில் நகைச்சுவையாக நடித்தார். அதன் பின் வந்த படங்களான வேலைக்காரன், குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், கோடி பறக்குது, ராஜாதி ராஜா, மாப்பிள்ளை, சிவா, ராஜா சின்ன ரோஜா, பணக்காரன், பெரிய இடத்து பிள்ளை, அதிசிய பிறவி, தளபதி, தர்மதுரை, அண்ணாமலை, மன்னன், உழைப்பாளி, எஜமான், பாட்ஷா,முத்து, அருணாச்சலம், படையப்பா, சந்திரமுகி, சிவாஜி : தி பாஸ், எந்திரன், லிங்கா, கபாலி, பேட்ட, தர்பார், அண்ணாத்த, பாபா, ஜெயிலர், வேட்டையன், லால் சலாம் என பல படங்களில் தனது நகைச்சுவை திறனை வெளிக்காட்டி மக்களை கவர்ந்தார்.

இப்படி பட்ட சூழலில் நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான 'கூலி' திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் சவுபின் ஷாகிர், நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கி இருக்கும் இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. மேலும், இப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகும் என அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியானது.

இதனை கண்டு அவரது ரசிகர்கள் ஒருபுறம் மகிழ்ச்சியில் இருக்க, சன் பிச்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் படைப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் உருவான திரைப்படம் தான் ஜெயிலர். அதற்கு காரணம் நெல்சன் திலீப் குமாரின் இயக்கம் தான். இதில் அனிரூத்தின் இசை மக்களை மட்டுமல்லாது ரஜினியையே கவரும் அளவிற்கு இருந்தது. இப்படி அலப்பறையை கிளப்பும் படம் மீண்டும் வந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்க, ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனக்குண்டான முதல் பாகங்களை கோயம்புத்தூரில் நடித்து முடித்துள்ளார். தற்பொழுது இரண்டாவது பாகத்தை கேரளாவில் நடித்து கொண்டு இருக்கிறார்.

இந்த நிலையில் தனியார் சேனலுக்கு கொடுத்த நேர்காணலில் நடிகர் ராதாரவி ரஜினியை குறித்து பேசியிருக்கிறார். அதில், " சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவான எஜமான் படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்றது. அப்பொழுது நான் ஒரு வேலையாக அங்கு சென்றிருந்தேன். அந்த படப்பிடிப்பு நடந்த இடத்தில் இருந்த ரஜினி சாரிடம் எனது படத்துக்கு கால்ஷீட் கொடுங்கள் என கேட்டேன். அதற்கு அவரும் தருவதாக ஒப்புக்கொண்டார். சில நாட்களுக்கு பின் ரஜினியிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் மன்னிக்கவும் இப்போதைக்கு என்னால் உங்களுக்கு கால்ஷீட் தர முடியாது. நீங்கள் சொன்ன சின்ன படத்தை கொடித்து விடுங்கள். அடுத்த முறை கண்டிப்பாக உங்களுக்கு கால்ஷீட் தருகிறேன் என கூறியிருந்தார். நானும் அவரை ஏன் தொந்தரவு செய்யவேண்டும் என அப்படியே விட்டுட்டேன்.

இதனை அடுத்து நீண்ட நாட்கள் கழித்து ரஜினியை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்பொழுது ஒரு படத்திற்க்காக என்னை நடிக்க அழைத்தார். கதையை கேட்ட நான் உடனே அவரிடம் சென்று, 'என்னை நீங்கள் ஏன்? வில்லனாகவே நடிக்க அழைக்கிறீர்கள். நானும் நன்றாக நடிப்பேன், நகைச்சுவைகளை கூட சிறப்பாக செய்வேன். ஆனாலும் ஏன்? என்னை மட்டும் வயதான கெட்டப்புக்கே அழைக்கிறீர்கள். எல்லா படங்களிலும் உங்களுக்கு எதிரானவன் போன்ற கேரக்ட்டரிலேயே இருக்கிறேனே" என ஆவேசமாக கூறினேன். அதற்கு பதிலளித்த ரஜினி, ராதாரவி ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள். மற்றவர்கள் என்னை அடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். என்ன செய்வார்கள் என உங்களுக்கே தெரியும்.

ஆனா, அதுவே நீங்கள் என்னை அடிக்கலாம், அப்படி அடித்தால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள். அதனால் தான் உங்களை அழைக்கிறேன்' என்றார்" என ராதாரவி பெருமிதமாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க: ஒரே பதிவில் ரஜினியை கடுப்பாக்கிய ப்ளூ சட்டை மாறன்..! கொதிக்கும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்..!