• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    சூப்பர் ஸ்டாரை சந்தித்த அந்த நிமிடம்..!! ரஜினிகாந்த் குறித்து நடிகர் சுகுமார் பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

    ரஜினிகாந்த் குறித்து நடிகர் சுகுமார் சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார்.
    Author By Bala Fri, 04 Sep 2026 13:25:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-rajinikanth-s-kind-gesture-to-actor-sugumar-tamilcinema

    தமிழ் சினிமாவில் சில சந்திப்புகள் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகளாகவே மாறிவிடும். குறிப்பாக, பல ஆண்டுகளாக திரையில் பார்த்து ரசித்த ஒரு முன்னணி நடிகரை நேரில் சந்தித்து, அவருடன் சில நிமிடங்கள் உரையாடும் வாய்ப்பு கிடைத்தால் அந்த அனுபவம் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும். அப்படியொரு அனுபவத்தைத்தான் நடிகர் சுகுமார் தற்போது சமூக வலைதளப் பதிவு ஒன்றின் மூலம் பகிர்ந்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை முதன்முறையாக நேரில் சந்தித்த தருணம், அப்போது நடந்த உரையாடல், ஒரு படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு, பின்னர் ஏற்பட்ட தேதி பிரச்சனை, அந்த சூழலிலும் ரஜினிகாந்த் காட்டிய பெருந்தன்மை என பல்வேறு விஷயங்களை சுகுமார் தனது பதிவில் விரிவாக நினைவுகூர்ந்துள்ளார்.

    ரஜினிகாந்த் தற்போது தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக தொடர்ந்து பயணித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘தர்மன்’ உள்ளிட்ட படங்களிலும், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இணையும் படத்திலும் அவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இப்படிப்பட்ட சூழலில், ரஜினிகாந்தின் ஆரம்ப காலத்திலான ஒரு சந்திப்பை சுகுமார் பகிர்ந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. சுகுமார் தனது பதிவில், ‘காதல் அழிவதில்லை’ திரைப்படத்தின் காலகட்டத்தில் தனக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பிலிருந்தே இந்தக் கதையை தொடங்குகிறார். புரொடக்‌ஷன் மேனேஜர் பாலகோபி தன்னை அழைத்து, அருணாச்சலம் கெஸ்ட்ஹவுஸுக்கு உடனடியாக வர முடியுமா என்று கேட்டதாகவும், தான் உடனே அங்கு சென்றதாகவும் சுகுமார் தெரிவித்துள்ளார். அங்கு ரிசப்ஷனில் நான்கு பேர் அமர்ந்திருந்ததாகவும், அவர்களில் மலையாள நடிகரைப் போல தோற்றமளித்த ஒருவரிடம், “சார், இவர்தான் அந்தப் பையன்” என்று பாலகோபி கூறியதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

    இதையும் படிங்க: அந்தப் படம் எனக்குப் பிடிக்கவே இல்லை..!! மேடையிலேயே கவினை வச்சு செய்த ராதிகா.. ‘ஹாய்’ சக்சஸ் மீட்டில் சுவாரஸ்ய சம்பவம்..!

    அதன்பிறகு, “சார்தான் பார்க்க வேண்டும் என்று சொன்னார். மேலே நான்காவது தளத்துக்கு போகச் சொல்லுங்கள்” என்று கூறப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சில நிமிடங்களில் இன்னொருவர் வருவார் என்றும், அவருடன் சேர்ந்து மேலே செல்லலாம் என்றும் கூறப்பட்ட நிலையில், அங்கு வந்தவர் நடிகர் ஆகாஷ் என்று சுகுமார் குறிப்பிட்டுள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டே, “யாரைப் பார்க்கப் போகிறோம்?” என்று தெரியாமல் லிஃப்டில் மேலே சென்றதாக அவர் எழுதியுள்ளார். நான்காவது தளத்தை அடைந்ததும், வலது பக்கத்தில் இருக்கும் முதல் அறைக்குச் செல்லுமாறு கூறப்பட்டிருந்தது. கதவு மணி அழுத்தியதும் உள்ளிருந்து “Yes, come in” என்ற குரல் கேட்டதாக சுகுமார் தெரிவித்துள்ளார்.

    rajinikanth-s-kind-gesture-to-actor-sugumar

    இருவரும் கதவைத் திறந்து உள்ளே சென்றபோது, அங்கிருந்தவர் உடனடியாக எழுந்து, “வாங்க வாங்க” என்று கூறியபடி கருப்பு குர்தா அணிந்து தங்களை நோக்கி வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த தருணத்தில் தான் அடைந்த பதற்றத்தை மிகவும் சுவாரஸ்யமாக சுகுமார் பதிவு செய்துள்ளார். “சார் சார்… நீங்க உக்காருங்க” என்று ரஜினிகாந்திடம் கூறியதாகவும், அதற்கு அவர் “No, no, please sit” என்று தங்களை அமர வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் தனது கால்கள் தரையில் நழுவுவது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும், ஏ.சி. அறையில்கூட ஆகாஷ் வியர்த்ததாகவும், தனது இதயத்துடிப்பு வெளியில் கேட்பது போல இருந்ததாகவும் சுகுமார் தெரிவித்துள்ளார்.

    தண்ணீர் கேட்டபோது, ரஜினிகாந்த் உடனடியாக பாட்டிலை எடுத்துக் கொடுத்ததாகவும், அவரது ஒவ்வொரு செயலிலும் ஒரு விதமான வேகம் இருந்ததாகவும் சுகுமார் நினைவுகூர்ந்துள்ளார். அந்த நேரத்தில் ரஜினிகாந்தை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்; கண்கள் கூட சிமிட்டக்கூடாது என்று தான் நினைத்ததாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சந்திப்பு தொடங்கியதும் ஆகாஷிடம் பேச ஆரம்பித்த ரஜினிகாந்த், அவருடைய கதாபாத்திரம் குறித்து விளக்கியுள்ளார். அதன்பிறகு சுகுமாரை நோக்கி திரும்பிய ரஜினிகாந்த், தொலைக்காட்சியில் அவரை பார்த்திருப்பதாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, படத்தில் சுகுமார் மற்றும் செந்தில் இணைந்து செய்யப்போகும் காமெடி காட்சிகள் பற்றியும் ரஜினிகாந்த் அப்போது விவரித்ததாக சுகுமார் தெரிவித்துள்ளார்.

    கடவுள் நம்பிக்கை கொண்ட கதாபாத்திரத்தை ஏமாற்றுவதற்காக, தாங்கள் இமயமலையில் இருந்து வந்தவர்கள் என்றும், ஒருவர் குரு, இன்னொருவர் சிஷ்யன் என்றும் பொய் கூறும் காட்சியை ரஜினிகாந்த் சுவாரஸ்யமாக விளக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பின்னர் அந்தக் கதாபாத்திரத்திற்கு சக்தி கிடைத்ததும், இருவரையும் சும்மா சுற்றவிட்டு அடிக்கும் வகையில் காமெடி காட்சி இருக்கும் என்றும் ரஜினிகாந்த் கூறியதாக சுகுமார் தெரிவித்துள்ளார். ஒரு நடிகராக தன்னைப் பற்றி சூப்பர் ஸ்டார் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறார் என்பது அவருக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்திருக்கிறது. அதனால் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “சார், டிவியில் என்னைப் பார்த்ததாக சொன்னீர்கள். எப்படி சார் உங்களுக்கு நேரம் கிடைத்தது?” என்று கேட்டதாக சுகுமார் கூறியுள்ளார்.

    அதற்கு ரஜினிகாந்த் சிரித்துக்கொண்டே, தான் மூன்று ஆண்டுகளாக சும்மாதானே இருந்தேன் என்று மிகவும் எளிமையாக பதிலளித்ததாக சுகுமார் குறிப்பிட்டுள்ளார். அந்த பதில்தான் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், ஒரு மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் இவ்வளவு இயல்பாக பேசுவது தனக்கு ஆச்சரியமாக இருந்ததாகவும் அவர் தனது பதிவில் உணர்வுபூர்வமாக எழுதியுள்ளார். ரஜினிகாந்துடன் நடந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததாக சுகுமார் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த 20 நிமிடங்களில் பெரும்பாலான நேரம் ரஜினிகாந்தை பார்த்துக்கொண்டே இருந்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். “எப்படி ஸ்டோரி?” என்று ரஜினிகாந்த் கேட்டபோது, “நான் எங்கே சார் அதைக் கேட்டேன், உங்களையே பார்த்துக்கொண்டே இருந்தேன்” என்று சுகுமார் கூறியதாக தெரிவித்துள்ளார்.

    rajinikanth-s-kind-gesture-to-actor-sugumar

    இதற்கு ரஜினிகாந்த் சிரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பின்னர் கீழே சென்று அட்வான்ஸ் வாங்கிக்கொள்ளுமாறும், செட்டில் சந்திப்போம் என்றும் ரஜினிகாந்த் கூறியதாகவும் சுகுமார் நினைவுகூர்ந்துள்ளார். வாசல் வரை இருவரின் தோளிலும் கை போட்டுக்கொண்டு வந்து வழியனுப்பிய ரஜினிகாந்தின் அந்த அன்பை சுகுமார் இன்றும் மறக்கவில்லை என்பது அவரது பதிவில் வெளிப்படுகிறது. அதன்பிறகு கீழே வந்த சுகுமாரிடம், ரஜினிகாந்த்தான் தங்களை பார்க்கச் சொன்னதாகவும், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாதான் படத்தை இயக்குகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். ‘பாட்சா’ படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாக இருந்த அந்த திரைப்படத்துக்கான அட்வான்ஸ் காசோலையையும் பெற்றதாக சுகுமார் தெரிவித்துள்ளார்.

    அந்த மகிழ்ச்சியில் வீட்டுக்குச் செல்லும் வழியில் ஜெராக்ஸ் கடையில் அட்வான்ஸ் செக்கை இரண்டு பிரதிகள் எடுத்துக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் சினிமா வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதற்கு அடுத்தடுத்த நிகழ்வுகள் உதாரணமாக அமைந்ததாக சுகுமார் கூறுகிறார். ஒருபுறம் தெலுங்கில் ஒரு படத்தின் படப்பிடிப்பு, மறுபுறம் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு என தேதிகளில் குழப்பம் ஏற்பட்டதாகவும், இதனால் இரண்டு படங்களுக்கும் இடையே சமநிலை ஏற்படுத்த முடியாத சூழல் உருவானதாகவும் அவர் தெரிவித்துள்ளார். செந்தில் சாரின் தேதிகள் கிடைக்காததால் படப்பிடிப்பு தள்ளிப்போனதாகவும், இறுதியில் அந்தக் கதாபாத்திரத்தையே படத்திலிருந்து நீக்கிவிட்டதாகவும் அவருக்கு தகவல் கிடைத்ததாக சுகுமார் தெரிவித்துள்ளார்.

    தனக்கு மிகவும் தேவையான அந்த அட்வான்ஸ் தொகையை ஏற்கனவே தனது தங்கையின் படிப்புக்காக செலவு செய்துவிட்டதாக சுகுமார் புரொடக்‌ஷன் மேனேஜர் பாலகோபியிடம் கூறியுள்ளார். அப்போது கிடைத்த பதில்தான் சுகுமாரை மேலும் நெகிழ வைத்துள்ளது. “அதெல்லாம் ஒன்றும் யோசிக்காதீங்க… நீங்களே வைத்துக்கட்டும் என்று சூப்பர் ஸ்டார் சொல்லிவிட்டார்” என்று பாலகோபி கூறியதாக சுகுமார் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்ததாக ஏதாவது கதாபாத்திரம் இருந்தால் அழைக்கலாம் என்றும், தற்போது அந்தப் பகுதியை படத்திலிருந்து நீக்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். ஒரு கதாபாத்திரம் கிடைக்காமல் போன வருத்தத்துக்கு நடுவிலும், தன்னிடம் கொடுத்த பணத்தைத் திரும்பப் பெறாமல் விட்ட ரஜினிகாந்தின் பெருந்தன்மை தன்னை ஆழமாக பாதித்ததாக சுகுமார் குறிப்பிட்டுள்ளார்.

    தனது பதிவின் முடிவில், ரஜினிகாந்தின் அந்த செயலை “இமயமலையில் இன்னோர் சிகரம் முளைத்தது” என்று சுகுமார் குறிப்பிட்டுள்ளார். அதன்பிறகு இரண்டு முறை நிகழ்ச்சிகளில் ரஜினிகாந்தை சந்தித்தபோதும், அவர் தனது தோளில் தட்டிக் கொடுத்துச் சென்றதாகவும் சுகுமார் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகள் கடந்துவிட்டாலும், ஒரு முன்னணி நடிகராக தனக்கு கிடைத்த அந்த அனுபவத்தை இன்னும் தனது மனதில் மிகப்பெரிய நினைவாக வைத்திருப்பதை அவரது பதிவு காட்டுகிறது. ஒரு நடிகரின் புகழ், திரையில் அவர் உருவாக்கும் பிரம்மாண்ட பிம்பம் ஆகியவற்றைத் தாண்டி, தனிப்பட்ட முறையில் அவர் காட்டும் மனிதநேயம்தான் பலரது மனதில் நீண்ட காலம் நிற்கும். அந்த வகையில், ரஜினிகாந்துடன் தனக்கு ஏற்பட்ட இந்த சந்திப்பை சுகுமார் பகிர்ந்திருப்பது ரசிகர்களையும் திரையுலகினரையும் நெகிழ வைத்துள்ளது.

    rajinikanth-s-kind-gesture-to-actor-sugumar

    “நடிகனாக எனது ஏக்கம் இது ஒன்றுதான்” என்று தனது பதிவை முடித்திருக்கும் சுகுமாரின் வார்த்தைகள், அந்த ஒரு சந்திப்பு அவருடைய வாழ்க்கையில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை உணர்த்துகின்றன. ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் எண்ணற்ற வெற்றிக் கதைகள் இருந்தாலும், அவரை சந்தித்தவர்களின் நினைவுகளில் பதிந்திருக்கும் இதுபோன்ற மனிதநேய சம்பவங்களும் அவரது பயணத்தின் முக்கியமான பகுதிகளாகவே இருக்கின்றன.

    இதையும் படிங்க: வெற்றிமாறன் பிறந்தநாளில் வைரலாகும் ‘அரசன்’ அப்டேட்..!! பொங்கலுக்கு வராதா? சிம்பு சொன்ன வார்த்தைகளால் ரசிகர்கள் ஷாக்..!

    மேலும் படிங்க
    2029 பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி மட்டுமே!!! விமான நிலையத்தில் அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி!

    2029 பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி மட்டுமே!!! விமான நிலையத்தில் அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி!

    தமிழ்நாடு
    அஜித்தின்

    அஜித்தின் 'GLADIATORS' ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! செப்டம்பர் 6-ல் தியேட்டர்களில் வெளியீடு!

    தமிழ்நாடு
    ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுதல் மாபெரும் வெற்றி! சென்னை விமான நிலையத்தில் எஸ்.சோம்நாத் பேட்டி!

    ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுதல் மாபெரும் வெற்றி! சென்னை விமான நிலையத்தில் எஸ்.சோம்நாத் பேட்டி!

    தமிழ்நாடு
    கல்லூரிகளில் சாதி மதம் கேட்க கட்டாயப்படுத்த கூடாது! உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!

    கல்லூரிகளில் சாதி மதம் கேட்க கட்டாயப்படுத்த கூடாது! உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    சேப்பாக்கத்தில் துலீப் டிராபி பைனல்!! அனுமதி இலவசம்! தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு!

    சேப்பாக்கத்தில் துலீப் டிராபி பைனல்!! அனுமதி இலவசம்! தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு!

    கிரிக்கெட்
    ஊழலை ஒழிப்பதில் தவெக அரசு பெரும் வெற்றி! அமைச்சர்களுடன் சந்திப்பிற்குப் பின் வைகோ புகழாரம்!

    ஊழலை ஒழிப்பதில் தவெக அரசு பெரும் வெற்றி! அமைச்சர்களுடன் சந்திப்பிற்குப் பின் வைகோ புகழாரம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    2029 பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி மட்டுமே!!! விமான நிலையத்தில் அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி!

    2029 பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி மட்டுமே!!! விமான நிலையத்தில் அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி!

    தமிழ்நாடு
    அஜித்தின் 'GLADIATORS' ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! செப்டம்பர் 6-ல் தியேட்டர்களில் வெளியீடு!

    அஜித்தின் 'GLADIATORS' ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! செப்டம்பர் 6-ல் தியேட்டர்களில் வெளியீடு!

    தமிழ்நாடு
    ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுதல் மாபெரும் வெற்றி! சென்னை விமான நிலையத்தில் எஸ்.சோம்நாத் பேட்டி!

    ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுதல் மாபெரும் வெற்றி! சென்னை விமான நிலையத்தில் எஸ்.சோம்நாத் பேட்டி!

    தமிழ்நாடு
    கல்லூரிகளில் சாதி மதம் கேட்க கட்டாயப்படுத்த கூடாது! உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!

    கல்லூரிகளில் சாதி மதம் கேட்க கட்டாயப்படுத்த கூடாது! உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    ஊழலை ஒழிப்பதில் தவெக அரசு பெரும் வெற்றி! அமைச்சர்களுடன் சந்திப்பிற்குப் பின் வைகோ புகழாரம்!

    ஊழலை ஒழிப்பதில் தவெக அரசு பெரும் வெற்றி! அமைச்சர்களுடன் சந்திப்பிற்குப் பின் வைகோ புகழாரம்!

    தமிழ்நாடு
    ஆக்கிரமிப்புகளை அனுமதிப்பதா.? அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் கண்டனம்.!!

    ஆக்கிரமிப்புகளை அனுமதிப்பதா.? அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் கண்டனம்.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share