2009ம் ஆண்டு வெளியான "வெண்ணிலா கபடி குழு" என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் தான் விஷ்ணு விஷால். இந்த படத்தை பற்றி நினைவு கூற வேண்டுமானால் காமெடி நடிகர் சூரியை தான் முதலில் நினைவு கூற வேண்டும். அந்த அளவிற்கு பரோட்டோ காமெடியில் இந்த படத்தை அழகாக மக்கள் மனதில் கொண்டு சேர்த்தார்.

மேலும் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த விஷ்ணு விஷால் கடைசியாக தனது காதலியுடன் வாழாமல் கபடி போட்டிகளத்தில் இறந்து போனது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அந்த அளவிற்கு படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிக்காட்டி அசத்தி இருப்பார். இதனை அடுத்து இவரது நடிப்பில் உருவான அருமையான திரைப்படம் "குள்ளநரி கூட்டம்". இந்த படத்தில் தனது காதலிக்காக போலீசாக மாற நினைக்கும் விஷ்ணு ஷிஷால், தனது அப்பாவுக்கு தெரியாமல் போலீஸ் ட்ரைனிங் சென்று அங்கு நன்றாக தனது திறமையை காண்பித்து இருப்பார். ஆனால் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் வேறு சிலரை வேலைக்கு எடுக்கும் செய்தி தெரிந்த விஷ்ணு, அவரது நண்பர்களுடன் இணைந்து ஊழல் அதிகாரிகளை மீடியாக்கு முன்பாக நிறுத்தி மீண்டும் தனது வேலையை வாங்குவர்.
இதையும் படிங்க: பிரபல இயக்குனர் படத்தில் விஷ்ணு விஷால்..! அதிரடி அப்டேட் கொடுத்த படக்குழு..!

ஆனாலும் இப்படத்தில் இவரது காதல் போஷன் அல்டிமேட்டாக இருக்கும். இந்த படமும் வெண்ணிலா கபடி குழுவும் இவரை மக்கள் மனதில் கதாநாயகனாக பதியவைத்த படம் எனலாம். இப்படி இருக்க, இவரை அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடிக்க வைத்த படம் என்றால் மூன்று படங்களை சொல்லலாம். அதில் முதலாவது போட்டோ எடுத்தால் மறித்து போவார்கள் என நம்பும் ஊர்மக்களை ஏமாற்றி அந்த ஊர் தலைவரின் மகளை திருமணம் செய்யும் படம் தான் "முண்டாசுப்பட்டி". இதனை அடுத்தது அனைவரது மனதிலும் மிகப்பெரிய திகிலை ஏற்படுத்திய அட்டகாசமான படமான "ராட்சசன்" திரைப்படம். மூன்றாவதாக மனைவியுடன் மல்யுத்தமான குஸ்தி போடும் படமான "கட்டா குஸ்தி". இந்த மூன்று படங்களும் மக்கள் மனதில் அவரை நிலைநிற்க செய்தது.

இந்த சூழலில் விஷ்ணு விஷால் இதுவரை, வெண்ணிலா கபடி குழு, துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, தாக்க தாக்க, இன்று நேற்று நாளை, மாவீரன் கிட்டு, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கதாநாயகன், ராட்சசன், சிலுக்குவார்பட்டி சிங்கம், இன்று நேற்று நாளை 2, மோகன் தாஸ், காடன், கட்டா குஸ்தி, ஃப்.ஐ.ஆர் (ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ்), லால் சலாம், போடா ஆண்டவனே என் பக்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். இந்த சூழலில், இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு அனைவரையும் கதிகலங்க செய்த ராட்சசன் படத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், அம்மு அபிராமி, காளி வெங்ககட் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இதே போல் ஒரு படத்தை மக்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஏழு வருடங்களுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அதன்படி, சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் திபு நினன் தாமஸ் இசையமைப்பில், விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் தான் 'இரண்டு வானம்'. இந்த சூழலில், 150 நாட்களுக்கும் மேலாக பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பானது தற்பொழுது முற்றிலுமாக முடிவடைந்து விட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இனி எடிட்டிங் பணிகள் இருப்பதால் 5 மாதகால உழைப்பை திரையில் காண காத்திருங்கள் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இப்படம் ஒரு ஃபேண்டசி ரொமான்டிக் திரைப்படமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரபல இயக்குனர் படத்தில் விஷ்ணு விஷால்..! அதிரடி அப்டேட் கொடுத்த படக்குழு..!