பாடகி சின்மயி, 'கன்னத்தில் முத்தமிட்டால்' என்ற திரைப்படத்தில் வரும் "ஒரு தெய்வம் தந்த பூவே" என்ற அழகான பாடலை பாடி திரையுலகில் அறிமுகமானார். இதனை அடுத்து 'என்னோடு நீ இருந்தால், மன்னிப்பாயா, வாகை சூடவா திரைப்படத்தில் வரும் சரசர சார காத்து வீசும் போது' முதலான பாடல்களைப் பாடி ஹிட் பாடகையாக வலம் வந்தவர்.

இப்படி தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பாடல்களைப் பாடுவதோடு மட்டுமல்லாமல் பின்னணியில் டப்பிங் குரல்களும் கொடுத்து பிரபலமாக வலம் வந்த சின்மயி, சமீபத்தில் '#மெட்டோ' என்ற செயலியில், ஏராளமான பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலில் கொடுமைகளை பற்றி தெரிவித்து வந்த நிலையில், கவிஞர் வைரமுத்துவால் தனக்கு ஏற்பட்ட பாலில் தொந்தரவுகளை குறித்து பாடகி சின்மயியும் அதில் பகிரங்கமாக தெரிவித்தார். அவரது குற்றச்சாட்டுகளை பார்த்து பலர் அவருக்கு ஆதரவு குரல்களை கொடுத்து வந்தாலும், மறுபக்கம் வேண்டுமென்றே அவர் கவிஞர் வைரமுத்துவின் மீது பழி போடுகிறார் என்று தெரிவித்து வந்தனர்.
இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் பிளான்... ரஜினியின் 'கூலி' படத்தில் அமீர்கான்.. கசிந்த உண்மை...!

அதுமட்டுமில்லாமல் அதற்குப் பின்பு அவருக்கு வந்த வாய்ப்புகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் திரை உலகில் குறைந்து வர, நடிகர் ராதாரவி உத்தரவின் பெயரில் தொலைக்காட்சி மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் சந்தா செலுத்தவில்லை என்ற காரணத்தை கூறி அதிலிருந்து பாடகி சின்மையை வெளியேற்றினார். இதனால் அவருடைய பல வாய்ப்புகள் அவரை விட்டுக் கடந்து சென்றாலும் கிடைத்த ஒரு சில வாய்ப்புகளை சரி வர பயன்படுத்தி வந்தார் பாடகி சின்மயி.

அதன் விளைவாகவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படத்தில் நடிகை திரிஷாவிற்கு பின்னணி குரல் கொடுத்திருந்தார். 'தக் லைஃப்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் மேடையில் திடீரென தோன்றிய பாடகி சின்மயி, "முத்த மழை " என்ற பாடலை தனது வசீகரிக்கும் குரலால் பாட, அங்கிருந்த ரசிகர்கள் முதல் பல பிரபலங்கள் வரை அவருடைய பாடலுக்கு மயங்கி இருக்கும் இந்த வேளையில் அவர் மீதான தடைகளை களைத்து அவரை மீண்டும் பாட வைக்க வேண்டும் என்ற ஆதரவு குரல் மக்கள் மத்தியில் எழுந்து உள்ளது.

இப்படி இருக்க, தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், எடிட்டர் என பன்முகத்தன்மை கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கையில் வைத்திருப்பவர் தான் விஜய் ஆண்டனி. இவரது படங்களின் தலைப்புகள் எப்படி வித்தியாசமாக இருக்கிறதோ அதற்கு ஏற்றார் போல் இவரும் வித்தியாசமானவர்தான். சில நேரங்களில் இவரது பேச்சுக்கள் புரியாததால் சர்ச்சைகளுக்கு உள்ளாக சிக்கிக் கொள்வார். பின்னர் மீண்டும் அதற்குண்டான விளக்கத்தை கொடுத்து அந்த சர்ச்சையில் இருந்து மீண்டு வருவார்.

அப்படி பட்ட விஜய் ஆண்டனி தற்பொழுது பாடகி சின்மயிக்கு ஆதரவு கொடுத்துள்ளார். அதன்படி, சமீபத்தில் 'மார்கன்' படத்தின் புரமோஷனுக்கு வந்த விஜய் ஆண்டனியிடம் சின்மயிக்கு சான்ஸ் கொடுப்பீங்களா? என்கிற கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர், "இனி வரும் காலங்களில் நான் நிறைய படங்களுக்கு இசையமைக்க உள்ளேன். அதில் கண்டிப்பாக பாடகி சின்மயியை பாட வைப்பேன்... ஏற்கனவே எனது இசையில் பாடிய அவருக்கு இன்றும் என் இசை ஸ்டுடியோவில் இடமுண்டு" என்று கூறியிருக்கிறார். அவரது பேச்சு சின்மயி-யின் ரசிகர்களுக்கு சற்று ஆறுதல்களையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: இந்த வெட்கத்துக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் ஈடாகாது..! கீர்த்தி சுரேஷின் ஹனிமூன் போட்டோஸ் வைரல்..!