×
 

கர்நாடகத்தில் எதிர்ப்பு.. மன்னிப்பு கேட்க முடியாது.. கமல்ஹாசன் நெத்தியடி ரியாக்‌ஷன்!!

தமிழிலிருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல் கூறியது கர்நாடகத்தில் சர்ச்சையான நிலையில், இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்க முடியாது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழிலிருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல் கூறியது கர்நாடகத்தில் சர்ச்சையான நிலையில், இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்க முடியாது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை கமல்ஹாசன் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "நிறைய வரலாற்று ஆசிரியர்கள் எனக்கு மொழி வரலாற்றைக் கற்பித்திருக்கிறார்கள். நான் எதையும் அர்த்தப்படுத்திச் சொல்லவில்லை. அரசியல்வாதிகள் இதுபோன்ற விஷயங்களைப் பற்றி பேசுவதற்கான நிபுணத்தும் இல்லாதவர்கள். ஒரு ‘மேனன்’, ‘ரெட்டி’ ஆகியோர் முதல்வராக இருந்திருக்கின்றனர். எங்களின் முதல்வராக ‘தமிழர்’ இருந்திருக்கிறார். கன்னட ஐயங்கார் ஒருவரும் எங்களின் முதல்வராக இருந்திருக்கிறார். இது தமிழக அரசியல் பாரம்பரியத்தைக் காட்டுகிறது.



மொழி பற்றி பேசுவதற்கான தகுதி அரசியல்வாதிகளுக்கு இல்லை. நான் உட்பட இதுபோன்ற விஷயங்களைப் பேச தகுதி இருப்பதில்லை. இந்த ஆழமான விவாதத்தை வரலாற்றாசிரியர்கள், தொல்பொருள் ஆய்வாளர்கள், மொழி அறிஞர்களிடம் விட்டுவிடுவோம். தமிழகத்தில் எனக்கு நெருக்கடி வந்தபோது, கன்னடர்கள் தங்களது ஊருக்கு வருமாறு என்னை அழைத்தார்கள். அன்பின் காரணமாகவே நான் அவ்வாறு கூறினேன். அன்பு எப்போதும் மன்னிப்பை எதிர்ப்பார்க்காது” என்று கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.



சில தினங்களுக்கு முன்பு சென்னையில் அண்மையில் நடைபெற்ற 'தக் லைஃப்' திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், 'தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது' என்று கூறி இருந்தார். இதற்கு கன்னட அமைப்புகள் எதிர்த்து வருகின்றன.  கமல்ஹாசன் தனது கருத்துக்கு பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: சிம்புவை அழவைத்த இயக்குனர் மணிரத்தினம்..! ஆறுதல் படுத்திய டி.ராஜேந்திரன்..!

இதையும் படிங்க: நடிகர் சிம்புவை புகழ்ந்து தள்ளிய கமல்ஹாசன்... என்ன சொன்னார் தெரியுமா..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share