×
 

விநாயகர் கோவிலில் நடிகை த்ரிஷா செய்த வேலையை பாருங்க..! அதிர்ச்சியில் மக்கள்..!

நடிகை த்ரிஷா செல்வ விநாயகர் கோவிலுக்கு ஒரு நல்ல காரியத்தை செய்து இருக்கிறார்.

தமிழ் திரையுலகில் எத்தனையோ லேடி சூப்பர் ஸ்டார்கள் வந்தாலும் ஒருவரை மட்டும் தாண்ட முடியாது என்றால் அவர் தான் நடிகை திரிஷா. இவரது நடிப்பை பார்க்க அனைவரும் கூட்டம் கூட்டமாக வருவர். பல வருடங்களாக தமிழ் சினிமாவை தனது உள்ளங்கையில் வைத்து அசைத்தவர் தான் நடிகை திரிஷா. ஆனாலும் சில நாட்களாக அவரை திரையில் காணவில்லை என பலரும் மனம் சோர்ந்திருந்த வேளையில் மீண்டும் தற்பொழுது கம்பேக் கொடுத்து அனைத்து திரைப்படங்களையும் ஒரு கை பார்த்து வருகிறார்.

இப்படிப்பட்ட நடிகை திரிஷாவை குறித்து பார்க்க வேண்டும் ஆனால் இவர் தமிழ் திரையுலகில் 'மௌனம் பேசியதே' என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியான சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம் உள்ளிட்ட அனைத்து படங்களும் ஹிட் ஆனது. இவரது படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு மிகவும் புத்துணர்ச்சி தான். ஆக விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த '96 திரைப்படம்' மாபெரும் ஹிட்டானது. இந்த படத்தை த்ரிஷாவின் காம்பேக் படமாக பார்த்தனர் தமிழ் ரசிகர்கள். குறிப்பாக மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் இருந்தாலும் த்ரிஷாவையே பலரும் நோக்கினர். அந்த அளவிற்கு இந்த படத்தின் மூலம் மீண்டும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: விஜய் பற்றியும் என்னை பற்றியும் உனக்கு என்ன தெரியும்..! ஆவேசப்பட்ட நடிகை த்ரிஷா..!

இப்படி பட்ட திரிஷாவின் ஆரம்ப வாழ்க்கை, "மிஸ் இந்தியா" மற்றும் "மிஸ்.மெட்ராஸ்" போன்ற அழகி போட்டியில் தொடங்கியது. அதில் பங்குபெற்று வெற்றி பெற்ற நடிகை திரிஷா, 1999-ம் ஆண்டு 'ஜோடி' என்ற திரைப்படத்தில் சிம்ரனுக்கு தோழியாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். இதனை அடுத்து, இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவான "லேசா லேசா" என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் இளம் நடிகையாக அறிமுகமானார். இதுவரை ஜோடி, குஷி, மௌனம் பேசியதே, சாமி, அலை, லேசா லேசா, மனசெல்லாம், எனக்கு 20 உனக்கு 18, கில்லி, ஆய்த எழுத்து, ஜி, ஆறு, திருப்பாச்சி, ஆதி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், கிரீடம், பீமா, வெள்ளித்திரை, குருவி, அபியும் நானும், சர்வம், விண்ணைத்தாண்டி வருவாயா, மன்மதன் அம்பு, மங்காத்தா, என்றென்றும் புன்னகை, சமர், தூங்காவனம், சகலகலா வல்லவன், பூலோகம், 

என்னை அறிந்தால், கொடி, அரண்மனை 2, நாயகி, மோகினி, 96, பேட்ட, பரமபதம் விளையாட்டு, பொன்னியின் செல்வன் (PS 1), ராங்கி, லியோ, பொன்னியின் செல்வன் 2, தி ரோடு, குற்றப்பயிற்சி, தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்), தக் லைஃப், விடாமுயற்சி, குட் பேட் அக்லி உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார் நடிகை த்ரிஷா. இப்படி, 21 ஆண்டுகளாக, சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வரும் த்ரிஷா, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல படங்களில் தற்பொழுது பிஸியாக நடித்து வருகிறார். மேலும் அஜித்தின் "குட் பேட் அக்லி" படத்தில் மாஸ் காண்பித்து இருக்கிறார் த்ரிஷா. அதுமட்டுமல்லாமல் தற்போது கமல் நடிப்பில் வெளியான "தக் லைஃப்" படத்தில் நாயகியாக நடித்து அசத்தியிருக்கிறார். மேலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஜோடியாக நடித்து முடித்துள்ளார். 

சமிபத்தில் நடிகர் விஜயின் பிறந்தநாளுக்கு அவர் தனது செல்ல பிராணியை தூக்கி கொஞ்சும் புகைப்படத்தை வெளியிட்டு ஹாப்பி பர்த்டே டூ யூ விஜய் என பதிவிட்டு இருந்தார். இதனை பார்த்த பலர் இவர்கள் இருவரையும் ஒன்றாக வைத்து சித்தரித்து பேச ஆரம்பித்தனர். ஆனாலும் அதனை பற்றி ஒருபொழுதும் பெரியதாக நினைக்காத திரிஷா, தற்பொழுது தமிழகத்தில் முதல் முறையாக விநாயகர் கோவிலுக்கு சிறப்பான  பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். அதன்படி, வனவிலங்குகளை பாதுகாக்கும் நல்ல எண்ணத்துடனும், கோயில்களில் வளர்க்கப்படும் யானைகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் நோக்கத்தில் "People For Cattle In India" என்ற அமைப்புடன் இணைந்து நடிகை த்ரிஷா பரிசு ஒன்றை அருப்புக்கோட்டையில் உள்ள செல்வ விநாயகர் கோயிலுக்கு கொடுத்துள்ளார். 

சுமார் ரூ. 6 லட்சம் மதிப்புள்ள "இயந்திர யானை" ஒன்றை நடிகை த்ரிஷா அந்த கோவிலுக்கு பரிசாக வழங்கியுள்ளார். மேலும் இந்த யானைக்கு "கஜா" என்றும் பெயரிடப்படுள்ளது. 

 

இதையும் படிங்க: மலையாள பிட்டு படங்களுடன் என்னை வச்சு பேசுறாங்க..! சினிமாவும் வாழ்க்கையும் ஒன்னா.. நடிகை திரிஷா அப்செட்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share