×
 

கல்யாணமா...எனக்கா...நெவர்...! நடிகை சதாவுக்கு திருமணத்தை விட அதுலதான் இன்ட்ரஸ்ட்டாமா..!

நடிகை சதா திருமணம் செய்வதை விட இதில் தான் அதிக விருப்பம் என தெரிவித்து இருக்கிறார்.

நடிகர் ரவி மோகனின் சிறந்த ஜோடி என்று இன்றளவும் சினிமா வட்டாரங்களிலும் சினிமா ரசிகர்களின் உள்ளங்களிலும் இருந்து நீங்கா இடம்பிடித்திருப்பவர் நடிகை சதா. பார்க்க ஸ்லிமாகவும் இன்றைய கால நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் இவரது அழகுக்கும் நடிப்புக்கும் ஈடு இணையே கிடையாது. நடிகர் ரவிமோகனுடன் இவர் நடித்த "ஜெயம்" திரைப்படத்தை யாராலும் மறக்க முடியாது. அப்படத்தில் வரும் "கண்ணாமூச்சி ரே...ரே...கண்டுபிடி யாரு" என்ற பாடல் வரிகளுடன் இவர்கள் காதலிக்கவும், வில்லனிடமிருந்து தப்பிக்கவும் எடுக்கும் முயற்சி சிறப்பாக இருக்கும். 


அதுமட்டுமல்லாமல் பெண்களை கவரும் வகையில் "திருவிழான்னு வந்தா இவ கோவில் வரமாட்டா" என்று பாடி சதாவை ரவி மோகன் வசியம் செய்திருப்பார். கடைசியில் இருவரும் காதலிக்க ஆரமித்து விடுவர். அப்படியிருக்க தனது காதலியை காண வீட்டின் ஓட்டை பிரித்து கயிற்றில் தொங்கிய படி "கவிதையே தெரியுமா என் கனவு நிதானடி" என நடு ராத்திரியில் பாடி காதலை வளர்த்து இருப்பர். எப்படியோ ஒருவழியாக வில்லனிடம் இருந்து பல பாடுகளை பட்டு கடைசியில் இருவரும் ஒன்று சேருவர். இப்படத்தில் மிகவும் அழகாக தோன்றிய சதா அன்று முதல் இன்று வரை பலரது உள்ளத்தின் நாயகியாக இருக்கிறார்.இப்படி சதா வெள்ளித்திரைக்கு வருவதற்கு முன்பாக, மும்பையில் தனது தோழிகளுடன் மாடலிங் துறையில் பணியாற்றி வந்ததார். 

பின் சில திரை நட்சத்திரங்களின் அறிமுகத்தால் தெலுங்கில் இயக்குனர் தேஜாவின் "ஜெயம்" திரைப்படத்தில் நாயகியாக நடித்து திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். இப்படம் தெலுங்கில் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படத்தில் நடித்தற்காக சதா "பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். இப்படி தெலுங்கில் "ஜெயம்" திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து நாக மற்றும் பிராணம் போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில், 'ஜெயம்' படத்தை பார்த்து பிடித்துப்போன தமிழ் இயக்குனர் மோகன் ராஜா, சதாவை வைத்து தனது இயக்கத்தில் அப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய நினைத்தார். ஆதலால் இப்படத்தில் ரவி மோகனுடன் சதாவை நடிக்க வைத்து தமிழிலில் அறிமுகப்படுத்தினார். 

இதையும் படிங்க: 1000 கோடி பட்ஜெட் நடிகை ராஷ்மிகாவா..! சொல்லவே கூச்சமா இருக்கு.. தனுஷ் பேச்சுக்கு ஹீரோயின் ரியாக்ஷன்..!

இதனை அடுத்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதுவரை ஜெயம், வர்ணஜாலம், எதிரி, பிரியசகி, அந்நியன், திருப்பதி, உன்னாலே உன்னாலே, நான் அவள் அது, புலி வேஷம், எலி, டார்ச்லைட்,மத கஜ ராஜா உள்ளிட்ட படங்களில் சதா நடித்து இருக்கிறார். இதற்கிடையில், சில வருடங்களுக்கு முன்பு, இவர் வாடகை இருப்பிடத்தில் நடித்தி வந்த அவரது காபி ஷாப்பை அந்த இடத்தின் ஓனர் காலி செய்ய சொன்னதாக கூறி, தனது வருத்தத்தை கண்ணீர் மல்க தெரிவித்தார். பின் கண்டிப்பாக மீண்டும் எழுந்து நான் போராடுவேன் என்கிறார். அதுமட்டுமல்லாமல் தனக்கு போட்டோ கிராஃபியில் ஆர்வம் இருப்பதால் "வைல்ட் லைஃப் போட்டோகிராபர்" ஆவேன் எனவும் பதிவிட்டு இருந்தார். 

அந்த வகையில் தனது நீண்ட நாள் கனவை நினைவாக்கிய சதா, தற்பொழுது படங்களில் பெரிதும் நடிக்காமல் விலங்குகளுடன் காடுகளில் சுற்றித்திரிந்து புகைப்படங்களை எடுத்து வருகிறார். தனது புகைப்பட கலைஞர் வாழ்க்கையை குறித்து சதா அவ்வப்பொழுது இன்ஸ்ட்டாவில் பதிவிட்டு பேசி வருகிறார். இப்படி இருக்க, சமீபத்திய நேர்காணலில் நடிகை சதாவிடம், " உங்களுக்கு 41 வயதாகி விட்டது ஆனால் ஏன்? இன்னும் நீங்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகை சதா, " நீங்கள் சொல்வதை போல நான் திருமணம் செய்திருக்க வேண்டும் தான். ஆனால் திருமணத்தின் மீது எனக்கு அதிகப்படியான ஆசை எதுவும் இதுவரை இல்லை. திருமணம் செய்தால் எனது இலட்சியத்தை அடைய முடியாது. தற்பொழுது புகைப்பட துறையில் இன்னும் சாதிக்க வேண்டியுள்ளது. அதன்பிறகு வேண்டுமானால் பார்க்கலாம். காலம் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளும். அதற்குள்ளாக நாமே அவரசப்பட கூடாது" என தெரிவித்தார்.


தனது புகைப்பட ஆசையால் வரும் பட வாய்ப்புகளையும் நிராகரித்து வரும் நடிகை சதாவை நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: ரசிகர்களை குழப்பும் விஜய்.. அரசியல் சும்மா.. சினிமா தான் மெயின்..! தளபதியின் பிளானை புட்டுப்புட்டு வைத்த நடிகை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share