×
 

மருத்துவமனையில் நடிகர் பொன்னம்பலம்..! அவர் பேசிய ஆடியோவை கேட்டு கதறி அழும் ரசிகர்கள்..!

அறுவை சிகிச்சை செய்யப்பட பின்னர் நடிகர் பொன்னம்பலம் பேசி வெளியிட்ட ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் வில்லனாக கலக்கி வந்தவர் தான் நடிகர் பொன்னம்பலம். இவரது பெயரை கேட்டாலே ஹீரோக்கள் முதல் ஹீரோயின்கள் வரை அனைவரும் பத்தடி பின்பாகவே சென்று விடுவர். அந்த அளவிற்கு பார்க ட்டெறராக இருக்கும் இவர் மிகப்பெரிய வில்லனாக சினிமாவில் அவதரித்து வாழ்ந்து வந்தார்.

நடிகர் பொன்னம்பலம் தமிழ் சினிமாவில் பல வேடங்களில் நடித்திருந்தாலும் அவரது சொந்த பெயரிலேயே நடித்த திரைப்படம் என்றால் அதுதான் "நாட்டாமை" திரைப்படம். பொதுவாக திரைப்படத்தில் இவரது வில்லத்தனங்கள், பார்க்கும் ரசிகர்களையே வியக்க வைக்கும் அளவிற்கு இருக்கும். பல சினிமா பிரபலங்களுடன் நடித்திருக்கும் பொன்னம்பலத்தின் பெயரைக் கேட்டால் உடனே நாம் அனைவருக்கும் நினைவிற்கு வரும் திரைப்படம் என்றால் அதுதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் அவர் அட்டகாசமாக நடித்த 'முத்து' திரைப்படம். அந்தத் திரைப்படத்தில் 'நீதான் ஜமீன்தாரை அடித்து கொலை செய்து விட்டாயே என்று ரஜினியை பார்த்து சொல்லுவதெல்லாம் அட்டகாசமாக இருக்கும். 

இதையும் படிங்க: இனி தான் ஆட்டமே.. இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் கூட்டணி அமைத்த நடிகர் சூரி..! 

மேலும் ஒரு கட்டத்தில் அடி தாங்க முடியாமல் "என்னை மன்னித்துவிடு முத்து... அம்பலத்தான் சொல்லித்தான் எஜமானனை நான் கொலை செய்தேன்" என்ற காட்சிகள் எல்லாம் கண்களில் கண்ணீரை வர வைத்தது. அதுமட்டுமல்லாமல் நடிகர் ரஜினியின் அருணாச்சலம் திரைப்படத்திலும் ஒரு காட்சியில் வந்தாலும் அட்டகாசமாக நடித்து இருப்பார் பொன்னம்பலம். தொடர்ந்து தனது நடிப்பால் பல நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் நடித்திருக்கும் பொன்னம்பலத்திற்கு என்றும் ஃபேன்ஸ்கள் ஜாஸ்தியாகவே இருக்கின்றனர். இப்படி தமிழ், தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து பெயர் பெற்ற இவர் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கும்  மேலாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டு வருகிறார். 

அதுமட்டுமல்லாமல் தனது உடல் நிலையை பாதுகாப்பதற்காகவே மருத்துவ செலவு அதிகமாகிவிட்டதாகவும் தற்பொழுது பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதை அறிந்த நடிகர் சிரஞ்சீவி, பொன்னம்பலத்தை நலம் விசாரித்து அவருக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தார். தற்பொழுது ஆசன வாயு அருகில் அறுவை சிகிச்சை முடித்த பின்பு நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டு உள்ள நடிகர் பொன்னம்பலம் தனது இக்கட்டான சூழ்நிலையில் தனக்கு மருத்துவ உதவிகளை செய்து தனது உயிரை காப்பாற்றிய அனைத்து நடிகர்களுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள அந்த ஆடியோவில், " நான் பொருளாதாரத்தில் அடிபட்டு தரை மட்டத்திற்கு சென்று விட்டேன். என்னுடைய இந்த நிலைமையில் நடிகர் கமலஹாசன், சரத்குமார், தனுஷ், கே.எஸ்.ரவிக்குமார், நிழல்கள் ரவி, ரவி மோகன், சிம்பு உள்ளிட்டோர் எனக்கு மிகப்பெரிய உதவிகளை செய்து இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் தற்பொழுது என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எனது உடல்நிலை சீராவதற்காக அனைவரும் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்" என தெரிவித்துள்ளார்.

இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் தனக்கு உதவி செய்தவர்களை மறக்காமல் அவர்களுக்கு நன்றி தெரிவித்த பொன்னம்பலத்திற்கு எதுவும் ஆகாது எனவும் உங்களுக்காக கண்டிப்பாக நாங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் எனவும் நெட்டிசன்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அரசியல் செய்ய தனி அறிவு வேண்டும்.. அதெல்லாம்.. நடிகர் விஜய் ஆண்டனி பரபரப்பு பேச்சு..! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share