விமான நிலையத்தில் வீல்-சேருடன் வந்த பிரியங்கா தேஷ்பாண்டே.. வருத்தத்தில் ரசிகர்கள்..!
தொகுப்பாளனி பிரியங்கா தேஷ் பாண்டே விமான நிலையத்தில் வீல் சாரில் வந்த காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தற்பொழுது உள்ள காலகட்டத்தில் எப்படி தொலைக்காட்சிகள் பிரபலமாக இருக்கிறதோ அந்த பிரபலத்திற்கு முக்கியமான காரணமாக இருப்பவர்கள் தான் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் முக்கியமானவர்களாக இருக்கும் தொகுப்பாளர்கள் என்று கூறுவர்.
இப்படிப்பட்ட தொகுப்பாளர்களுடைய வேலைகள் என்ன என பார்த்தால் அவர்கள் பெரும்பாலும் நடக்கும் போட்டி நிகழ்ச்சிகளில் நடுவர்களாக வருபவர்களின் பெயர்களை வாசிக்க வேண்டும். அவர்களை மேடையில் அமர வைக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் போட்டியாளர்களின் பெயரை அறிவிக்க வேண்டும். கமெண்ட்ஸ்களை கேட்க வேண்டும். குறிப்பாக அந்த நிகழ்ச்சியை ஸ்பான்சர் செய்த நிறுவனங்களின் பெயர்களை தவறாமல் சொல்லிவிட வேண்டும். இதுதான் ஒரு தொகுப்பாளரின் பிரதான வேலையாக இருக்கிறது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் இருக்கும் தொகுப்பாளர்கள் இவை அனைத்தையும் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கட்டும் சேலை மடிப்பில் கசங்க வைத்த பூஜா ஹெக்டே..! ஹோம்லி லுக்கில் இளசுகளை கவர்ந்த நடிகை..!
ஆனால் அதனுடன் அடிஷ்னலாக காமெடிகளை செய்வது, பிறரை கலாய்ப்பது அவர்களுடன் விளையாடுவது என போட்டியாளர்கள் ஐந்து நிமிடத்தில் பாடுவதும் ஆடுவதும் போன்ற செயல்களை செய்தால் மீதமுள்ள நேரங்களில் தொகுப்பாளர்களும் நடுவர்களும் எடுத்துக் கொள்கின்றனர். அந்த அளவிற்கு தொகுப்பாளர்களின் அட்ராசிட்டி பலதரப்பட்ட மக்களுக்கு பிடித்து போக அவர்களும் நட்சத்திர பிரபலமாக நடமாடி வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளர்கள் என்றால் சிவகார்த்திகேயன், திவ்யதர்ஷினி, ஜாக்லின், ரம்யா, பாவனா, ரக்சன், மாகாபா ஆனந்த், நீயா நானா கோபி என பலர் தொகுப்பாளர்களாக இருந்தவர்கள் என்ற பெயரையும் தொகுப்பாளராகவே பிரபலமாக இருக்கின்றனர் என்ற பெயரையும் பெற்று வருகின்றனர்.
அப்படிப்பட்ட இவர்களில் வரிசையில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ஒரு தொகுப்பாளர் என்றால் அவர் தான் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ் பாண்டே. பார்க்க கொழு கொழு நடிகைக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு இருக்கும் பிரியங்கா தேஷ்பாண்டேவின் சிரிப்பு என்றும் ஃபேமஸ் ஆக உள்ளது. மேலும் தனது அழகிய முட்டை கண்களால் பார்ப்பவர்களை வருடி இழுக்கும் அவர், தன்னை ஒருவர் கலாய்த்து விட்டால் அவர்களை மீண்டும் கலாய்க்கும் வரைக்கும் ஓயமாட்டார்.
அப்படிப்பட்ட பிரியங்கா எதையும் ஸ்போட்டிவாக எடுத்துக் கொள்பவர். தன்னிடம் சவால் விட்டால் அதனை எப்படியாவது சாதித்துக் காட்டி விட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். இப்படி இருக்கையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு செல்லாமலேயே சின்னத்திரையில் அமர்ந்து கொண்டு பல வெள்ளித்திரை முகங்களை தன் வசம் ஈர்த்து வைத்திருப்பவர் தான் பிரியங்கா.
மேலும் இவர் மாகாபா ஆனந்துடன் இணையும் பொழுது இவர்கள் இருவரும் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் விசில் பறக்கும். இப்படிப்பட்ட பிரியங்கா சமீபத்தில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அப்பொழுது இவருக்கும் தொகுப்பாளனி மணிமேகலைக்கும் இடையே ஏற்பட்ட ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக மணிமேகலை இவரைக் குறித்து அவதூறாக பேசி வீடியோவை வெளியிட்டார். இதனால் மிகவும் மனமுடைந்து போன பிரியங்கா... வெளியே எங்கும் தலைகாட்டாமல் யாரிடமும் பேசாமல் instagram - லும் பெரிய அளவில் ஆக்டிவாக இல்லாமல் மிகவும் சோர்ந்து போயிருந்தார்.
அந்த வேலையில் பார்த்த மக்கள் அனைவரும் அவ்வளவு தான் இனி பிரியங்காவினுடைய கெரியர் அனைத்தும் முற்றிலுமாக ஃகுளோஸ் ஆகிவிட்டது என்றும் அவர் இனி இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சமூக வலைத்தளங்களிலும் தனது காலடித்தடத்தையே பதிக்க மாட்டார் எனவும் கூறி வந்தனர். இந்த வேலையில் தான் திடீரென ஒரு நாள் தொழிலதிபர் 'வசி' என்பவரை ரகசிய திருமணம் செய்து அதனை தனது instagramல் பதிவிட்டு அனைவரையும் திக்கு முக்காட வைத்தார். பின்பு 'எனக்கு எண்டு கார்டு போடலாம்னு நினைச்சீங்கன்னா அது நீங்க செஞ்ச தப்பு, எனக்கு எண்டே கிடையாது' என கமா போட்டு மீண்டும் விஜய் டிவியில் கால் அடித்தடம் பதித்து இருக்கிறார் தொகுப்பாளினி பிரியங்கா.
இப்படிப்பட்டதான வேளையில் பல நாடுகளுக்கு சென்று தனது கணவருடன் ஹனிமூனில் பிஸியாக இருந்த பிரியங்கா சமீபத்தில் தனது கால் பிராக்சர் ஆகிவிட்டதாக போட்டோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இப்படி இருக்க, தனது கணவர் ஒருபுறமும் பிரியங்கா ஒரு புறமும் இருக்க, அவரது கணவர் வசி எப்பொழுது பிரியங்கா உங்களை நான் பார்ப்பேன்? உங்களை நான் மிகவும் மிஸ் பண்ணுகிறேன் என கூறி இருந்தார்.
அதற்குப் பிரியங்கா விரைவில் சூட்கள் முடித்ததும் தங்களை காண லண்டனுக்கு வருவேன் என கூறி இருந்தார். அந்த வகையில், தற்பொழுது நடக்க முடியாத நிலையில் வீல் சாருடன் தனது கணவரை காண வந்த தொகுப்பாளனி பிரியங்காவை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்த அவரது கணவர் வசி, அவர் வீல் சேரில் தள்ளப்பட்டு வருவதை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
அதில் வீல்-சேருடன் வரும் பிரியங்கா தனது கணவரை கண்டதும் அவர் மகிழ்ச்சியடைந்ததை கண்டு ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.
இதையும் படிங்க: அமானுஷ்யத்தால் சுழற்றி எடுக்கப்படும் காந்தாரா 2 நடிகர்கள்.. அடுத்தடுத்த உயிர் பலிகளால் பதற்றத்தில் படக்குழுவினர்..!