அமானுஷ்யத்தால் சுழற்றி எடுக்கப்படும் காந்தாரா 2 பட நடிகர்கள்.... அடுத்தடுத்து உயிர்பலிகளால் பதட்டத்தில் படகுழுவினர்...!
உயிர் பலிகளை வாங்கும் காந்தாரா 2 தபடப்பிடிப்பு தளத்தில் என்ன நடக்கிறது.
வாழ்க்கையில் பல திரில்லர் திரைப்படங்களை நாம் இயக்கலாம். அந்த திரில்லர் படங்கள் பார்க்க அருமையாகவும் இருக்கலாம். ஆனால் ஒரு திகில் திரில்லர் திரைப்படத்தை இயக்க சென்ற பட குழுவினரே இன்று சிக்கி இருக்கிறார்கள் என்றால் அவர்கள் தான் காந்தாரா திரைப்பட குழுவினர். அப்படி என்னதான் இவர்களுக்கு ஆகி வருகிறது என்பதை கீழே பார்க்கலாம்.
கடந்த 2022 -ம் ஆண்டு ஹோம் பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரிஷப் செட்டி இயக்கி நடித்த 'காந்தாரா' திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. கன்னடத்தில் உருவான இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், என அனைத்து மொழிகளிலும் வெளியானது. இத்திரைப்படத்தை குறித்து பார்த்தால், கன்னட மலைப் பகுதிகளில் வாழும் மக்கள் வணங்கும் 'பஞ்சசுருளி' என்ற தெய்வத்தின் கதையை மையமாக எடுக்கப்பட்ட திரைப்படம் தான் இந்த "காந்தாரா". இந்த திரைப்படத்தின் முதல் பாகம் மாபெரும் ஹிட் அடித்த நிலையில் அதன் இரண்டாம் பாகத்தை காண்பதற்காக மக்கள் மிகவும் ஆவலாக இருந்து வந்தனர்.. இதனால் கடந்த வருடம் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.
இதையும் படிங்க: ஆர்த்தி ரவி போட்ட எமோஷனல் பதிவு..! நடிகர் ரவிமோகனை வம்பிழுக்கும் நெட்டிசன்கள்..!
எல்லாம் சரியாக போய்க் கொண்டிருந்த நேரத்தில் சில மாதங்களுக்கு முன்பு, இப்படத்தில் மிகவும் முக்கியமாக கருதப்பட்ட 'துணை நடிகரான கபில்' படப்பிடிப்பின் பொழுது ஆற்றில் குளிக்க சென்று இருக்கிறார் . நன்றாக குளித்துக் கொண்டு இருந்த அவர் திடீரென ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதால் செய்வதறியாது இருந்த படக்குழுவினர், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் அவரது உடலை நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு பத்திரமாக மீட்டனர். இதுவே பட குழுவினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் அடுத்த ஒரு வாரத்தில் படத்தில் நடித்து வந்த வேறொரு நடிகரான 'ராஜேஷ் பூஜாரி' திடீரென மாரடைப்பால் உயிர் இழந்தார். என்னடா இது... திடீர் திடீரென படத்தில் நடிப்பவர்கள் உயிரிழக்கிறார்களே என பட குழுவினர் பல பூஜைகளை செய்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு-க்காக வந்த கேரளாவைச் சேர்ந்த 'பிஜு' என்பவர் ஹோட்டலில் தங்கி இருந்தார். அப்பொழுது அவருக்கும் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதனால் இப்படத்தை எடுக்கவே பயந்து எல்லோரும் வீட்டில் அமர்ந்து கொண்டிருக்கும் வேலையில் எப்படியாவது இந்த படத்தை இயக்கி முடித்தே ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் நடிகர் ரிஷப் செட்டி. இப்படி இருக்க, மீண்டும் ஒரு அசம்பாவித சம்பவம் நடந்ததால் படு குழுவினர் அனைவரும் கதிகலங்கி அமர்ந்திருக்கின்றனர். அப்படி என்னவானது எனப் பார்த்தால் கர்நாடகாவில் உள்ள மாணி என்ற அணைப்பகுதியில் 'காந்தாரா - 2 படத்திற்கான படப்பிடிப்புகள் மும்மரமாக நடைபெற்று வந்தது. அப்பொழுது திடீரென யாரும் எதிர்பாராத வேலையில் படகு கவிழ்ந்துள்ளது. அனைவரும் சுதாரிப்பதற்குள் முழுவதுமாக நீரில் விழ, ஒரு நிமிடத்தில் அனைவரும் பதறிப் போயினர். ஆனால் அவர்கள் விழுந்த இடம் ஆளமில்லாத பகுதி என்பதால் படத்தின் கதாநாயகன் முதல் படக்குழுவினர் அனைவரும் நீந்திய படி கரைக்கு வந்து உயிர் தப்பி இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவங்களை ஒவ்வொன்றாக பார்த்த பட குழுவினர் என்ன செய்வது என்று தெரியாமல் பீதியில் அமர்ந்திருக்கின்றனர்.
சரி இதுவரை நடந்த விபத்துக்களை மட்டுமே பார்த்தால் இதுவரை அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டங்களும் தடுங்கல்களையும் குறித்து பார்க்கலாம். அந்த வகையில் பார்த்தால், கடந்த ஆண்டு படத்திற்காக மிகவும் பிரம்மாண்டமான செட்டு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அப்பொழுது படப்பிடிப்பு துவங்க இருந்த நேரத்தில் திடீரென அந்த செட் சரிந்து விழ பட தயாரிப்பு நிறுவனத்திற்கு மூன்று கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது.
அடுத்ததாக கடந்த நவம்பர் மாதம் கொல்லூறி என்ற பகுதியில் படப்பிடிப்பு நடத்துவதற்காக படக்குழுவினர் அனைவரும் பேருந்தில் சென்று கொண்டு இருந்தனர். அப்பொழுது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் உள்ள ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. ஆனால் இதில் எந்த உயிர் சேதமும் ஆகவில்லை.
இப்படி இருக்க, இந்த திரைப்படத்தின் ஏற்படும் அசாம்பாவிதங்களை குறித்து பல மாந்திரீகர்களிடம் படக்குழுவினர் சென்று யாசகம் கேட்டபொழுது இத்திரைப்படமானது மிகவும் அமானுஷ்யம் நிறைந்ததாக இருப்பதால் இப்படத்திற்கு நிறைய தடுங்கள் ஏற்படும். மேலும் உயிர்பலிகளும் வர வாய்ப்பு இருக்கிறது என்று கூறி இருக்கின்றனர். இதனால் காந்தாரா 2 படத்தில் நடிக்காமல் பின்வாங்க பல நடிகர்களும் யோசித்து வருவதாக படக்குழுவினர் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒன்னு இல்ல ரெண்டு பேர்.. விபூதி அடிக்க நினைத்த சீரியல் நடிகை.. உஷாராகி போலீசில் சிக்கவைத்த ஸ்வீட் ஹஸ்பண்ட்..!