×
 

தனது காதல் ஜோடியுடன் பறந்த நடிகை ராஷ்மிகா மந்தனா..! கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி..!

தனது காதலனுடன் மகிழ்ச்சியாக சென்ற ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ இணையத்தில் வைரல்.

"காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்" இந்தப் பாடலை தெரியாதவர்கள் ஒருவருமே இருக்க முடியாது. ஆனால் இந்தப் பாடலின் வரிகளுக்கு ஏற்ப தற்பொழுது இரண்டு ஜோடிகள் காத்திருப்புப் பட்டியில் இருப்பதைப் போல நடந்து கொண்டு வருகின்றனர் என்றால் அவர்கள் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவர்கொண்டா.

பார்க்க அழகாகவும் க்யூட் ஆகவும் தனது கண்களின் அசைவால் பலரை வருடு இழுக்கும் நடிகை தான் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான "சிக்கந்தர்" திரைபடத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்து தற்பொழுது ஃபான் இந்தியா ஸ்டாராக இருக்கிறார். இந்த படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக இவர் நடித்ததை பார்த்த அனைவரும் அவரை பாராட்டி வந்தனர். இந்த சூழலில் தற்பொழுது  பான் இந்தியா திரைப்படமாக அனைவரது எதிர்பார்ப்பையும் எகிர செய்திருக்கும் திரைப்படம் தான் நடிகர் தனுஷின் நடிப்பில் வெளியாகவுள்ள 'குபேரா' திரைப்படம். 

இதையும் படிங்க: காலையிலேயே பரபரப்பாக்கிய ஐ.டி. ரெய்டு... நடிகர் ஆர்யா சொன்னா திடுக்கிடும் தகவல்...! 

இத்திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், எல்.எல்.பி  மற்றும் அம்மிகோ கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளனர். இத்திரைப்படத்தில் ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார். மேலும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாநாயகர்களாக நடிகர் தனுஷ், நாகர்ஜுனா ஆகியோருடன் நடித்து இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. இப்படி இருக்க, இதுவரை, தமிழில் இயக்குனர் பாரத் கம்மா இயக்ககத்தில் 2019ம் ஆண்டு வெளியான "டியர் காம்ரேட்", இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் 2021ம் ஆண்டு வெளியான "புஸ்பா (தி ரைஸ்)", இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் 2021ம் ஆண்டு வெளியான "சுல்தான்", 

இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் 2022ம் ஆண்டு வெளியான "சீதா ராமம்", இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளியான "அனிமல்", இயக்குநர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளியான "வாரிசு", இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் 2024ம் ஆண்டு வெளியான "புஷ்பா (தி ரூல்)" ஆகிய திரைப்படங்களில் சிறப்பாக நடித்து உள்ளார். இப்படி இருக்க, நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதாக பல தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. ஆனால், இருவரும் தங்களது காதல் தொடர்பான எந்த அறிக்கையையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. 

இந்த சூழலில், சமீபத்தில் நடிகை ராஷ்மிகா யாருக்கும் தெரியாமல் பிரபல ஹோட்டலுக்கு சென்று இருந்தார். அப்போது ராஷ்மிகாவை அடையாளம் கண்ட, அங்கிருந்த போட்டோ கலைஞர்கள், அவரை புகைப்படம் எடுத்துள்ளனர். பின் தனது மாஸ்க் மற்றும் தொப்பியை கழற்றி அவர்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு, ராஷ்மிகா ஹோட்டல் உள்ளே சென்ற சிறிது நேரத்தில், ஹோட்டல் பின்புறமாக வந்த நடிகரான விஜய் தேவர்கொண்டா மாஸ்க் மற்றும் தொப்பி அணிந்து கொண்டு ஹோட்டல் உள்ளே சென்றார். இதற்குண்டான புகைப்படங்களே வைரலாகி இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள் என சாட்சி சொல்லி வந்த நிலையில் மீண்டும் ஒரு விஷயம் நடந்துள்ளது. 

அதன்படி, தற்போது ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் ஏர்போர்ட்டில் இருந்து வந்து ஒரே காரில் ஏறிச்செல்லும் வீடியோ வைரல் ஆகி இருக்கிறது. ஒன்றாக வரக்கூடாது என்பதற்காக கொஞ்சம் தாமதமாக ராஷ்மிகா பின்னால் வந்திருக்கிறார். ஆனால் இருவரும் ஒரே காரில் சென்றதை அங்கிருந்த அனைவரும் தனது மொபைல் போனில் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். 

அந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: விமான நிலையத்தில் வீல்-சேருடன் வந்த பிரியங்கா தேஷ்பாண்டே.. வருத்தத்தில் ரசிகர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share