×
 

காலையிலேயே பரபரப்பாக்கிய ஐ.டி. ரெய்டு... நடிகர் ஆர்யா சொன்னா திடுக்கிடும் தகவல்...! 

தனக்கு சொந்தமான ஓட்டலில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக வெளியான தகவல்களை நடிகர் ஆர்யா மறுத்துள்ளார். 

 சென்னையில் நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான ஹோட்டலில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில் நடிகர் ஆர்யா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

நடிகர் ஆர்யாவுக்கு சென்னையில் பல்வேறு பகுதியில் சீசெல் என்ற பெயரில் ஏராளமான உணவுகள் இயங்கி வருவதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் இன்று காலை முதலே சென்னையில் உள்ள சீசெல் ஹோட்டலில் வருமான வரித்துறை அதிகாரிகள்  சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியானது. மேலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும் நடிகர் ஆரியா மீது புகார் எழுந்ததால்,  இந்த சோதனை நடந்து வருவதாக முதலில் கூறப்பட்டிருந்தது. 

இதையும் படிங்க: கட்டும் சேலை மடிப்பில் கசங்க வைத்த பூஜா ஹெக்டே..! ஹோம்லி லுக்கில் இளசுகளை கவர்ந்த நடிகை..! 


இந்த நிலையில் இந்த தகவல் குறித்த நடிகர் ஆர்யா மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் ஓட்டலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், அது வேறு ஒரு நபருக்கு ஏற்கனவே விற்கப்பட்டதாகவும், அந்த ஓட்டலுக்கு தற்போதைய வேறு ஒருவர் என்று அவர் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. 

சோதனையின் பின்னணி என்ன?

சென்னை அண்ணாநகர், வேளச்சேரி, துரைப்பாக்கம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் உள்ள சீசெல் உணவகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  இதில் ஒரு உணவகத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆர்யா நடத்தி வந்துள்ளார். தற்போது அதை வேறொருவருக்கு விற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. அண்ணாநகரில் உள்ள அந்த உணவகத்திலும் தற்போது சோதனையானது  இன்று காலை 6:30 மணி முதலே தொடங்கி நடைபெற்று வருகிறது.

வரியாய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். சோதனை முடிவிலேயே என்னென்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டிருக்கிறது?, எவ்வளவு வரியப்பு செய்திருக்கிறார்கள்?, அங்கு என்னென்ன நகை பொருள் அல்லது அசையும் சொத்து அசையா சொத்து உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன உள்ளிட்ட விவரங்கள் அனைத்துமே சோதனை முடிவில் தெரியவரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இதையும் படிங்க: அமானுஷ்யத்தால் சுழற்றி எடுக்கப்படும் காந்தாரா 2 நடிகர்கள்.. அடுத்தடுத்த உயிர் பலிகளால் பதற்றத்தில் படக்குழுவினர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share