×
 

அல்லு அர்ஜுன் - அட்லீ கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்ட படம்..! வெளியான மாஸ் அப்டேட்..!

அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவாகும் பிரமாண்ட படத்திற்கான அப்டேட் கிடைத்துள்ளது.

தமிழ் மட்டுமல்லாது இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகத்தில், கூலியாக இருக்கும் புஷ்பா, தன் தாயை அனைவரும் மதிக்க வைக்கவும், தன்னுடைய பிறப்பை நிலைநாட்டவும் பணக்காரனாக செம்மர கடத்தலில் ஈடுபட நினைத்து, போலீசிடம் இருந்து மரத்தை பாதுகாத்து சென்னைக்கு கடத்த கொண்டாரெட்டியுடன் இருந்து உதவி செய்து.பின் சென்னை முருகனை சந்தித்து பெரிய ஆர்ட்டர்களை எடுத்து சின்டிகேட்டுக்கே தலைவராக மாறுவார். இதில் இவருக்கு வில்லன் என்றால் சகாவத், போலீஸான சகாவத்தை புஷ்பா அவமானப்படுத்துவதால் பழிவாங்க துடித்து காத்திருப்பது போல் படம் முடிந்து இருக்கும். 

பின் நீண்ட வருடங்களுக்கு பிறகு கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியான புஷ்பா 2 அனைவரது கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தில் கடத்தலுக்கு தடைகளை கொண்டு வரும் சகாவத்தை மீறி வெளிநாடுகளுக்கு செம்மரத்தை கடத்துவது. தனது மனைவி கேட்டதற்காக முதலமைச்சருடன் ஒரு போட்டோ எடுக்க புதிய முதலமைச்சரை கொண்டு வருவது. கடைசியில் தனது தங்கையை காப்பாற்ற அடிவாங்கி, தனது குடும்பத்துடன் இணைவது போன்று காண்பிக்கப்பட்டு இப்படம் முடிவடைந்திருக்கும். இப்படத்தில் இன்னும் ஜாலி ரெட்டி பழிவாங்க இருப்பதால் புஷ்பா பாகம் மூன்று வர உள்ளது. 

இதையும் படிங்க: ஒரே ஹீரோ மூன்று ஹீரோயின்..! அல்லு அர்ஜுனுக்கு கிடைத்த மச்சக்காரி நடிகை..! 

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ஓடிடி நிறுவனத்தினர் போர்ச்சுகீஸ், இந்தோனேசியா, போலிஷ் (போலந்து), ஸ்பானிஷ் மற்றும் தாய்லாந்து என ஐந்து மொழிகளில் ஆங் சப் என்ற டைட்டில்களுடன் ஓடிடியில் புஷ்பா 2-வை வெளியிட்டனர். அங்கும் இந்த படம் வெற்றியடைந்து இருக்கிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை ரூ.1871 ஆயிரம் கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது புஷ்பா2.

இப்படி இருக்க, இயக்குநர் ஷங்கரிடம், நண்பன் மற்றும் ரஜினியின் எந்திரன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்து ஷங்கரின் முழுவித்தையையும் கற்று கொண்ட அட்லீ தயாரித்த, ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில், போன்ற படங்கள் அனைத்தும் ஹிட் படம் தான். இதனை தொடர்ந்து, இவர் இயக்கிய 'ஜவான்' திரைப்படம்  ஓடாது என்று விமர்சனம் செய்தவர்கள் வாய்பிளக்கும் அளவிற்கு ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து அனைவரையும் திக்குமுக்காட வைத்தது. 

இந்த நிலையில், தற்போது, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மிகவும் பிரமாண்டமாக அட்லீ இயக்க இருக்கும் திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க இருக்கிறார். ஹாலிவுட் திரைப்படங்களில் பணியாற்றிய VFX குழு இப்படத்தில் பணிபுரிய இருக்கும் அறிவிப்புடன் ஏப்ரல் மாதம் வீடியோ மூலமாக படம் உறுதியானது வெளியானது. இந்த சூழலில், வரும் ஜுன் மாத இறுதியில் இப்பட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்தப் படத்தில் 6 ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவர தொடங்கியுள்ளன.

இதையும் படிங்க: அமலா பால் மகனுக்கு கோலாகலமாக நடைபெற்ற கிறித்தவ சடங்கு விழா..! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share