எனக்கு உங்கள பிடிச்சிருக்கு... நடிகை கீர்த்தி ஷெட்டி பேச்சால் ரசிகர்கள் மகிழ்ச்சி...!
நடிகை கீர்த்தி ஷெட்டி பேச்சால் ரசிகர்கள் குதூகலத்தில் உள்ளனர்.
கோலிவுட் திரையுலகில் தற்பொழுது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கும் ஒரே நடிகை என்றால் அவர் தான் நடிகை கீர்த்தி செட்டி. சிறு வயது கதாநாயகியாக வலம் வரும் இவர் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களாகவே இருக்கிறது. அதனாலேயே இவருக்கும் பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் இந்தியாவில் இருக்கிறது.
பார்க்க சிறுவயது தோற்றத்தில் அழகிய பெண்மணியாக வலம் வரும் நடிகை கீர்த்தி செட்டி தற்பொழுது படித்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா... ஆம், இவர் 2003-ம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி மும்பையில் கர்நாடகாவின் மங்களூர்வை சேர்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார். அப்படி பார்த்தால் 22 வயதான கீர்த்தி செட்டி, தற்பொழுது தான் மும்பையில் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் உளவியல் படிப்பை படித்து வருகிறார். அப்பொழுது அவர் படித்துக் கொண்டிருக்கும் வேளையில் சில வணிக விளம்பரங்களில் நடிக்க தொடங்கினார்.
இதையும் படிங்க: கல்யாணமா.. எனக்கா.. நெவர்..! நடிகை சதாவுக்கு திருமணத்தை விட அதுலதான் இன்ட்ரஸ்ட்டாமா..!
அதற்குப் பின்பு தான் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்து. தற்பொழுது முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட கீர்த்தி செட்டி தமிழில் ராகுல் சன்கிரிதியன் இயக்கத்தில் வெளியான 'ஷாம் சிங்கராய்' திரைப்படத்தில் 2021-ம் ஆண்டு நடித்தார். இதனை அடுத்து 2022-ம் ஆண்டு இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் 'தி வாரியர்' திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து 2023-ம் ஆண்டு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கஸ்டடி' என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் 2024-ம் ஆண்டு இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் "வா வாத்தியார்" என்ற திரைப்படத்தில் நடித்து தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதனை அடுத்து, அதே 2024-ம் ஆண்டு இயக்குனர் அர்ஜுனன் இயக்கத்தில் உருவான 'சீனி' திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இப்படி பல படங்களில் நடித்து இன்று முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை கீர்த்தி செட்டி தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி தற்பொழுது தமிழில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்.ஐ.கே) " என்ற திரைப்படத்தில் நடித்து உள்ளார் நடிகை கீர்த்தி செட்டி. இந்தத் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இவரது பல படங்கள் வெளியாக காத்திருக்கிறது. இந்த நிலையில் நடிகை கீர்த்தி செட்டி கோவையில் நடைபெற்ற ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அப்பொழுது மகிழ்ச்சி பொங்க பேசிய அவர், " உண்மையாகவே எனக்கு கோவையின் கலாச்சாரமும் பாரம்பரியமும் மிகவும் பிடித்திருக்கிறது. அதைவிட, கோவை மக்கள் பேசும் தமிழ் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஏனெனில் உங்கள் தமிழில் ஒரு அழகான நடைமுறை உள்ளது.
வெளி உலகத்தில் சொல்வதைப் போல இங்கு கிடைத்த அன்பும் வரவேற்பும் என்னை மிகவும் நெகிழச் செய்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தற்பொழுது நான் அதிகமாக தமிழ் படங்களில் நடித்து வருகிறேன். நான் நடித்து வரும் அனைத்து தமிழ் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவை தருவீர்கள் என ஆணித்தரமாக நம்புகிறேன் உங்கள் நம்பிக்கைதான் எனது சினிமா வாழ்க்கை" என அவர் தெரிவித்திருக்கிறார்.
தற்பொழுது கீர்த்தி செட்டி தமிழில் நடித்து வரும் செய்திகளை கேட்ட அவரது ரசிகர்கள் உங்கள் படத்துக்கு நாங்க கேரன்டி மேடம் என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: படம்னா.. எப்படி இருக்குன்னு தெரியுமா.. உங்க படத்தை கொளுத்துங்க.. நடிகர் தனுஷ் ஆவேச பேச்சு..!