×
 

"அந்த மனசு தான்யா கடவுள்".. ஈக்குவாலிட்டினா இப்படி இருக்கனும்.. பலரது கவனத்தை ஈர்த்த நடிகர் சூரியின் பதிவு..!

தன்னுடன் பயணித்த சக கலைஞர்கள் குறித்து நடிகர் சூரி பதிவிட்டுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஒரு காலத்தில் பரோட்டா காமெடியில் பின்னி பெடல் எடுத்த நடிகர் சூரி, இன்று கதாநாயகனாக மாறி வில்லன்களை பின்னி பெடலெடுப்பார்  என யாரும் நினைத்து கூட பார்த்ததில்லை. அப்படிப்பட்ட நடிகர் சூரி, பல கதாநாயகர்ளுடன் இணைந்து காமெடியனாக சினிமாவில் வலம் வந்து கொண்டு இருந்தார். சந்தானம், யோகி பாபு வரிசையில் என்றும் ஸ்டார் காமெடியனாகவே இருந்த நடிகர் சூரி, தற்பொழுது காமெடி கதாபாத்திரங்களை விட்டு கதாநாயகனாக நடிக்க துவங்கியுள்ளார்.

இந்த சூழலில், சமீபத்தில் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூரியின் எழுத்தில் உருவாகி இருக்கும் பாசம் கலந்த திரைப்படம் தான் 'மாமன்' திரைப்படம். இந்தப் படம் எதைக் குறிக்கிறது என்று பார்த்தால் தாய்மாமன் உறவையும் அதன் முக்கியத்துவத்தையும், அக்கா தம்பியின் உறவைக் குறித்தும், கணவன் மனைவியின் இல்லற வாழ்க்கை குறித்தும் வெளிப்படையாக சொல்லும் திரைப்படமாகவே இப்படத்தை எழுதியிருக்கிறார் நடிகர் சூரி. கதை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் சூரியின் முயற்சிக்கு ஒரு புறம் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

இதையும் படிங்க: என்ன மக்களே... சூரியின் 'மாமன்' படத்தை ஓடிடியில் காண தயாரா...!

இப்படி முழுக்க முழுக்க தாய்மாமன் பாசத்தை மட்டும் வைத்து உருவாகியுள்ள இப்படம், வசூலில் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை பின்னுக்கு தள்ளி புது சாதனை படைத்துள்ளது. மேலும் இப்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான 'ஜீ5 நிறுவனம்' வாங்கியுள்ளது. இத்திரைப்படம் திரையரங்குகளில் 30 நாட்கள் கடந்த பின் வரவேற்புகளை பார்த்த பின்னர் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தில் தன்னுடன் பயணித்த சுவாசிகா, சரவணன், ஒளிப்பதிவாளர் தினேஷ் ஆகியோரை பற்றி பெருமையான பதிவுகளை பகிர்ந்துள்ளார் நடிகர் சூரி. 

அதன் படி, முதலாவதாக சுவாசிகா குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், " என் அன்பும் நன்றிகளும் Girija அக்காவுக்கு, சுவாசிகா மாமன் படத்தில் உங்கள் நடிப்பு என் மனதை ஆழமாக கவர்ந்தது. அக்கா, லட்டு அம்மா, மகள், மனைவி – ஒவ்வொரு வேடத்திலும் நீங்கள் காட்டிய திறமை ஒளிர்ந்தது. நீங்கள் நடித்த ஒவ்வொரு காட்சியிலும் உண்மையான உணர்வுகள் இருந்தன. அந்த உணர்ச்சிகள்தான் இந்தப் படத்தின் சிறப்பை உருவாக்கியது. உங்களோடு நடித்தது எனக்கு ஒரு நல்ல அனுபவமாகவும், நல்ல போட்டியாகவும் இருந்தது. நிச்சயமாக, நீங்கள் இந்திய சினிமாவுக்கு ஒரு அரிய செல்வம். உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் பயணம் எப்போதும் தொடரும் "  என பதிவிட்டுள்ளார்.

இரண்டாவதாக சரவணன் குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், " தம்பி பால சரவணன் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் அவர் ஏற்கும் எந்தவொரு கதாபாத்திரத்திலும் பிரமாதமாக நடித்து, மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக உயர்வார். பலரும் மாமன் படத்தில் அவர் காட்சிகள் குறைவாக இருந்தது பற்றி கூறினீர்கள் — அது உண்மைதான். ஆனால் அந்தக் குறுகிய நேரத்திலேயே அவர் அனைவரின் மனதையும் வென்றுவிட்டார் என்பதை யாரும் மறுக்க முடியாது. நான் பல நேர்காணல்களில் கூறியிருக்கிறேன் — தம்பி பாலா தன்னை மீண்டும் மீண்டும் உயர்த்திக்கொண்டு, அனைவரையும் ஆச்சரியப்படுத்தப்போகிறார். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன். படப்பிடிப்பிலும் வெளியிலும் அவர் ஒரு உண்மையான ஆதரவு தூணாக இருந்தார். தம்பி, உன்னுடன் இன்னும் பல படங்களில் வேலை செய்ய வேண்டும். நம்முடைய கூட்டணிக்கே இப்போது நான் ரசிகனாகிவிட்டேன். உனக்கு என் அன்பும் நன்றியும் தம்பி " என பதிவிட்டுள்ளார். 

மூன்றாவதாக ஒளிப்பதிவாளர் தினேஷ் குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், " நம்ம தினேஷ் – காமெராவோட கதை சொல்லும் கவிஞர்! தனது தனிப்பட்ட அர்ப்பணிப்பால் அனைத்துப் படங்களையும் வெற்றிப்பாதையில் அழைத்துச்சென்றவர். ஒவ்வொரு ஷாட்டிலும் அவர் செலுத்தும் அக்கறையும் கவனமும், நம்மை மட்டும் அல்ல, கதையையும் உயர்த்தி நிறுத்துகிறது. ஒரு படத்தில் DOP என்பவரின் பங்கு, இயக்குனரின் பங்குக்கு நிகராகவே முக்கியம். அந்த அளவுக்கு தினேஷ் ஒவ்வொரு ஃபிரேமிலும் உணர்வுகளை உயர்த்த, சரியான லென்ஸில் கதையை சொல்லும் தன்மை கொண்டவர். 

உங்க lens-la #Maaman படம் அழகா தெரிஞ்சதுக்கு எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்!" என தெரிவித்திருக்கிறார்.


 

இதையும் படிங்க: தியேட்டரில் படம் பாருங்க.. திருட்டுத்தனமாக டவுன்லோடு செய்து பார்க்காதீங்க..! சூரி காட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share