×
 

நடிகர் சூர்யாவுடன் ஹனிமூன் பிசியில் ஜோதிகா..! இளமையை கழிக்க சென்றுள்ள இடத்தை பாருங்க..!

தனது கணவரான சூர்யாவுடன் ஹனிமூனுக்கு கிளம்பி உள்ளார் நடிகை ஜோதிகா.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் பெண்களைப் பார்த்து. இங்குள்ள பெண்கள் அனைவரும் சூர்யாவை போல மணமகன் வேண்டும் என்று கேட்கிறீர்களே.. நீங்கள் யாராவது ஜோதிகாவை போல் இருக்கிறீர்களா என கேட்டு இருப்பார். அந்த அளவிற்கு இன்று சினிமாவில் சிறந்த ஜோடி மற்றும் சிறந்த ஃபேர் யார்? எனக் கேட்டால் அனைவரது மனதிலும் நினைவிற்கு வரும் ஒரே ஒரு தம்பதி நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதியினர் மட்டுமே.

ஒரு காலத்தில் நடிப்பிற்காக இணைந்த இவர்கள் காலப்போக்கில் வாழ்க்கையில் இணைவார்கள் என ஒருவரும் நினைத்து பார்க்கவில்லை. ஆனால் அப்படி இருந்தும் காலம் இவர்களை இணைத்ததற்கு பின்பாக இன்று அவர்களுடைய வாழ்க்கை பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: தனது மகன்களுடன் இணைந்த நடிகர் ரவிமோகன்..! ஆத்திரத்தில் மனைவி ஆர்த்தி ரவி..!

பெரியவர்கள் கூறியது போல அழகான மனைவி, அன்பான கணவன், அருமையான பிள்ளைகள் இருந்தால் வாழ்க்கை அழகாக மாறிவிடும் என சொன்னதைப் போல இன்று இவர்களது வாழ்க்கையும் அவ்வாறாகவே இருக்கிறது என்றால் மிகையாகாது. அப்படிப்பட்ட இவர்களது வாழ்க்கை பலரும் பொறாமை படும் வகையில் அமைந்து இருக்கிறது.

நடிகர் சூர்யா 1997-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான "நேருக்கு நேர்" திரைப்படத்தில் விஜயுடன் துணை நாயகனாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து தனது காதல் மனைவியான ஜோதிகாவுடன் 1999-ம் ஆண்டு "பூவெல்லாம் கேட்டுப்பார்" என்ற திரைப்படத்தில் நடித்தார். இதிலிருந்து இவர்களது காதல் வாழ்க்கை தோன்றியது. அதன் பின், 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி இருவரும் பெற்றவர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் சில நாட்கள் சினிமாவிற்குள் வராத ஜோதிகா தனது குழந்தைகள் மற்றும் குடும்ப நலனில் அக்கறை காட்டி வந்தார். 

பின் தனது பிள்ளைகளுக்கு உலக அறிவு வந்த பின் இனி அவர்களை பார்த்து கொள்ளும் அளவிற்கு வயது வந்துவிட்டது என சொல்லி மீண்டும் சினிமாவில் சிங்கிள் ரோலில் பெண்களின் வாழ்க்கை மேம்படுத்தும் வகையில் ட்சசி, 36 வயதினிலே, பொன்மகள் வந்தால், மகளிர் மட்டும், நாச்சியார் என பல படங்களில் நடித்து உள்ளார். மேலும் டப்பா கார்ட்டெல் என்ற பாலிவுட் வெப் சீரிஸிலும், லையன் என்ற தமிழ் படத்திலும் நடித்து இருக்கிறார் ஜோதிகா.

இப்படி ஜோதிகாவின் நலனிலும் அவரது கெரியரிலும் அக்கறையில் உள்ள சூர்யா சமீபத்தில் தனது மனைவியான ஜோதிகா மற்றும் அவரது குழந்தைகள் அனைவருடனும் மும்பையில் உள்ள ஜோவின் அம்மாவீட்டில் குடியேறி இருக்கிறார். இதனை பற்றி சூர்யா கூறும்போது, எனக்காக எல்லாவற்றையும் விட்டு வந்த 'ஜோ'வுக்காக நானும் எனது குழந்தைகளும் மும்பை வந்துவிட்டோம் என்றார்.

ஆனால் ஜோதிகா கூறும் பொழுதோ, தனது தாய் தந்தைக்கு உடல் நிலை சரியில்லை, அவர்களை பக்கத்திலிருந்து பார்த்து கொள்ளவும், தமிழகத்தில் தங்கள் குழந்தைகைகளின் படிப்பிற்கு ஏற்ற பள்ளிகள் இல்லை என்பதால், அவர்களின் எதிர்கால நலன் கருதியும் மும்பைக்கு வந்ததாகவும் கூறியிருந்தார்.

தற்பொழுது சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா, ரெட்ரோ முதலிய திரைப்படங்கள் தோல்வியடைந்து வரும் வேளையில், மிகவும் ஸ்ட்ரெஸில்  இருந்த சூர்யாவை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று இருக்கிறார் அவரது மனைவி ஜோதிகா. மேலும் பல இளம் நடிகைகள் தற்பொழுது திருமணமாகி ஹனிமூன் செல்லும் வேளையில் நமக்கான வாழ்க்கையை நாம் வாழ்வோம் என இருவரும் மகிழ்ச்சியாக கிளம்பியுள்ளனர். இதற்குண்டான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை ஜோதிகா. 

இதனை பார்த்த பல இளசுகள், வயசானாலும் உங்கள் இருவரது நெருக்கமும் புரிந்து கொள்ளும் மனப்பக்குவமும் அனைவருக்கும் இருந்தால் இந்த உலகில் ஏழேழு ஜென்மத்திற்கு ஒன்றாக வாழலாம் என தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: மணமகனாக மாறிய 'பசங்க' பட நடிகர் ஸ்ரீராம்..! காதலியை கரம்பிடித்த அந்த தருணமே.. என்ன நடந்தது பாருங்க..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share