பிரியங்கா சோப்ராவை அடுத்து நடிகை வரலட்சுமி சரத்குமார்..! ஹாலிவுட்டில் என்ட்ரி கொடுத்து அசத்தல்..!
ஹாலிவுட்டில் அடியெடுத்து வைத்த நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு உலக சினிமா ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரை உலகில் முக்கிய நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் தான் வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழ் மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் அதிகமாக நடித்து இருப்பார். முக்கியமாக லண்டனை தளமாகக் கொண்ட ஒரு நடனக் கலைஞராக நடிகர் சிம்புவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால், 2012ம் ஆண்டில் விக்னேஷ் சிவனின் காதல் நாடகத் திரைப்படமான "போடா போடி" திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார்.
எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை முடித்த வரலட்சுமி, நடிகையாக மாறுவதற்கு முன்பு மும்பையில் உள்ள "அனுபம் கெரின்" என்ற நடிப்புப் பள்ளியில் தனது நடிப்புத் திறனை வளர்த்துக் கொண்டார். இதனை அடுத்து போடா போடி திரைப்படம் அவருக்கு பெரிய வெற்றியை தேடி தந்தது. இதனை அடுத்து சுந்தர் சியின் மசாலா படமான "மத கஜ ராஜா"வில் விஷாலுடன் இணைந்து வரலட்சுமி பணியாற்றினார், ஆனால் நிதி சிக்கல்கள் காரணமாக அந்தப் படம் அப்பொழுது வெளியிடப்படாமல் இத்தனை வருடம் கழித்து, தற்பொழுது வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்றது.
இதையும் படிங்க: மருத்துவமனையில் நடிகர் பொன்னம்பலம்..! அவர் பேசிய ஆடியோவை கேட்டு கதறி அழும் ரசிகர்கள்..!
இதனிடையில், நடிகர் சுதீப்புடன் கன்னடப் படமான "மாணிக்யா" படத்திலும் பாலாவின் "தாரை தப்பட்டை" படத்திலும் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனக்கென இடம் பிடித்தார். பின் சண்டக்கோழி 2 திரைப்படத்தில் விஷாலுக்கு வில்லையாகவும், சர்காரில் நடிகர் விஜய்க்கு வில்லியாகவும் தனது அபார நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். இந்த நிலையில் அவரது உதவியாளரும் போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்க, இவருக்கும் தொடர்புள்ளதா என அதிகாரிகள் வரலட்சுமியை விசாரிக்க, அதிலிருந்து நிரபராதியாக மீண்டு வந்தார். இப்படி இருக்க, நடிகை வரலட்சுமி கடந்த ஆண்டு தன்னுடைய காதலன் "நிக்கோலாய் சச்தேவ்" என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களது திருமணம் பலரால் பேசப்பட்டாலும் இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
மேலும், தேவராஜ் பரணிதரன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த 'ஷிவாங்கி லையோனஸ்' திரைப்படம் கடந்த மார்ச் 7ம் தேதி திரையரங்கில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூல் பெற்றது. அதுமட்டுமல்லாமல் தற்பொழுது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி. வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்பொழுது ஹாலிவுட் நடிகையாக களமிறங்கியுள்ளார் நடிகை வரலட்சுமி.
அதன்படி, இயக்குனர் சந்திரன் ருத்னம் இயக்கத்தில் நடிகை வரலட்சுமி நடிப்பில் முழுக்க முழுக்க இலங்கையில் படமாக்கப்பட்ட, 2005ல் சவுதி அரேபியாவில் குழந்தையைக் கொன்றதற்காக ரிஜானா நபீக் என்பவரின் தலை வெட்டப்பட்ட சம்பவம் குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் தான் "ரிஜானா- ஏ கேஜ்ட் பேர்ட்" திரைப்படம். இத்திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தை குறித்து பேசிய நடிகை வரலட்சுமி, "தற்பொழுது வெளியான 'தி லயன் கிங்' படத்தில் குரல் கொடுத்திருக்கும் நடிகர் ஜெரோமி ஐரோன்ஸ் உடன் நடித்தது மிகவும் அருமையாக இருந்தது. மேலும் அவருடன் நடித்ததன் மூலம் எனது கனவு தற்பொழுது நனவாகி இருக்கிறது. ஜெரோமி ஐரோன்ஸ் அவர்கள் ஹாலிவுட்டில் மட்டுமல்ல, உலக சினிமாவிலும் மக்களால் மதிக்கக்கூடிய உண்மையான நபர்" என தெரிவித்து இருக்கிறார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் நடிகை வரலட்சுமிக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இனி தான் ஆட்டமே.. இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் கூட்டணி அமைத்த நடிகர் சூரி..!