ஒரே வார்த்தையில் ஆர்த்தி ரவியை அழவைத்த பாடகி கெனிஷா..! இப்படி ஒரு பதிலடியை எதிர்பார்க்காத ரவிமோகன்..!
ஆர்த்தி ரவியை மட்டம் தட்டி பேசியிருக்கிறார் பாடகி கேனிஷா.
தமிழ் பெண்கள் மட்டுமல்லாது அனைத்து பெண்களும் தனக்கு கணவனாக இப்படி ஒருவன் வரமாட்டானா என ஏங்கும் அளவிற்கு இருப்பவர் தான் நடிகர் ரவி மோகன். ஜெயம் படத்தில் நடித்ததால் மக்கள் மத்தியில் ஜெயம் ரவி என அன்புடன் அழைக்கப்பட்ட இவர், நிறைய படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை கையில் வைத்திருக்கிறார். மேலும், இவர் நடிப்பில் வெளியான தில்லாலங்கடி படத்தில் இவரது காமெடி திறமையால் அனைவரையும் தன் வசமாக்கினார். அடுத்து எம்.குமரன் s/o மகாலட்சுமி என்ற படத்தில் பாக்ஸராக வந்து மலையாளியாக வந்த அசினை, ஒய் மலபார் என சொல்லி மலையாள பெண்களை திரும்பி பார்க்க வைத்தார்.
இப்படி, ஜெயம், எம் குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி, மழை, தாஸ், சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், இதய திருடன், தீபாவளி, வெள்ளித்திரை, சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம், பேராண்மை, தில்லாலங்கடி, எங்கேயும் காதல், கோ, ஆதி பகவன், நிமிர்ந்து நில், ரோமியோ ஜுலியெட், தனி ஒருவன், சகலகலா வல்லவன், பூலோகம், மிருதன், போகன், வனமகன், அடங்க மறு, டிக் டிக் டிக், தும்பா, கோமாளி, பூமி, பொன்னியின் செல்வன் (PS 1), இறைவன், அகிலன், பொன்னியின் செல்வன் 2, சைரன், பிரதர், தக் லைஃப், ஜீனி, காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: பாடகி இங்க உங்க பொண்டாட்டி ஆர்த்தி எங்க..! ரவிமோகனுக்கு எதிராக நிற்கும் நடிகைகள்..!
இத்தனை படத்தில் நடித்த ரவி மோகனுக்கு பல ரசிகர்கள் இருந்தாலும் தனக்கு முதல் ரசிகையாக தனது மனைவி ஆர்த்தி இருக்க வேண்டும் என நினைத்தார் ரவிமோகன். ஆனால் ஆர்த்தியோ எல்லா விஷயத்திலும் அவரது அம்மாவையே முன் வைக்கிறார். தன்னை அவமானப்படுத்துகிறார் என குற்றம் சாட்டி விவாகரத்து செய்ய முன்வந்து நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ரவிமோகன் பாடகி கெனிஷாவை காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் பரவ, அதனை பாடகியும் அப்பொழுது மறுத்தார். ஆனால், தயாரிப்பாளரான ஐசரி கே கணேஷ் மகளின் இல்லத்திருமண விழாவில் இருவரும் ஜோடியாக வந்து நிற்க அது இணையத்தில் பேசுபொருளாக மாறியது.
இதனை அடுத்து, ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி, ஒரு அறிக்கை ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டார். அதில், ஒரு வருடமாக என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு இதுவரை நான் எந்த பதிலும் கூறாமல் இருந்தேன். தற்போது உலகமே நாங்கள் பிரிய என்ன காரணம் என்பதை தெரிந்துகொண்டிருக்கும். என்னை ரவி மோகனின் முன்னாள் மனைவி என அழைக்க வேண்டாம் என மீடியாவிடம் கேட்டு கொள்கிறேன். சட்டப்படி, எனக்கும் ரவி மோகனுக்கும் விவாகரத்து ஆகவில்லை. ஒரு அப்பாவாக ரவி மோகன் தனது மகன்களை தவிக்கவிட்டு சென்று உள்ளார். எந்த பண உதவியும் இல்லாமல் நாங்கள் இருவரும் சேர்ந்து கட்டிய வீட்டில் இருந்து பேங்க் மூலமாக எங்களை காலி செய்ய வைத்துள்ளார் ரவி " என தெரிவித்து இருந்தார்.
இதனால் அனைவரும் பாடகி கெனிஷாவை பற்றி அவதூறாக பேச, டென்ஷானான அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஆர்த்தி ரவிக்கு பதில் கொடுத்துள்ளார் அவர் வெளியிட்டுள்ள பதிவில் " ஒரு ஆண் கலவரமான உணர்ச்சிகளை கொண்ட பெண்ணிடம் ஈர்க்கப்பட மாட்டார். அவருக்கு அமைதி கொடுக்கும் பெண்ணிடமே அவரது இதயம் செல்லும். அந்த பெண்ணின் கனிவு என்பது ஒரு பாவனையாக இருக்காது.
அது ஒரு பெரிய சக்தியாக இருக்கும். அப்படி இருக்கையில் இருவரும் அவரவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வர்" என வெளிப்படையாக இருவரும் ஒன்றாக இருப்பதை பற்றி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விக்னேஷ் சிவனுக்கு வந்த கனவு..! பதறியடித்து கொண்டு அவர் சென்ற அதிசய இடம்..!