போதை பொருள் வழக்கு தொடர்பாக நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வரக்கூடிய நிலையில், அவரது வீட்டில போலீசார் இரன்டு மணி நேரத்திற்கு மேலாக திடீர் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பெசன்ட்நகர் கலாசேத்திரா காலனியில் இருக்கக்கூடிய அவரது வீட்டில் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி அவரது வீடு, கார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனையானது நிகழ்த்தப்பட்டிருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது போதை பொருள் வழக்கு சம்பந்தமாக அவரை பிடித்து விசாரணை நடத்தி வருவதால் அது சம்பந்தமான பொருட்கள் ஏதேனும் அவரது வீடு மற்றும் கார்களில் இருக்கிறதா? என ஆய்வு செய்வதற்காக போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் இதன் அடிப்படையில் தான் வீடு மற்றும் அவரது காரில் இந்த சோதனையானது நிகழ்த்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே கைதான நடிகர் ஸ்ரீகாந்த் உடைய வீட்டிலும் சோதனை மேற்கொண்டு ஒரு கிராம் கொக்கைன் போதை பொருளை கைப்பற்றிய நிலையில், தற்போது நடிகர் கிருஷ்ணாவும் இதே வழக்கில் சிக்கி இருப்பதால் இவரது வீடு முழுவதும் இந்த சோதனையானது நிகழ்த்தப்பட்டு வருகிறது அதாவது இவர் வந்து போலீசாரோட விசாரணையில தனக்கு உடல்நிலை சம்பந்தமான பல பிரச்சனைகள் இருப்பதால் போதை பொருள் பயன்படுத்த வாய்ப்பில்லை என போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனை தொடர்பாக இவர் பயன்படுத்தக்கூடிய மருந்துகள் வீட்டில் இருக்கிறதா? என்பதையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கோலிவுட்டில் கொக்கைன் மாஃபியா.. நடிகர் கிருஷ்ணா விவகாரத்தில் திடீர் திருப்பம்...!
குறிப்பாக கிருஷ்ணா பயன்படுத்தக்கூடிய மருந்துகள் கிடைத்தாலும் அதனையும் ஆய்வுக்காக அனுப்பவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இவரது சமூக வலைதள கணக்கு உள்ளிட்டவையும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. அதாவது ஏதேனும் அந்த போதை பொருள் கும்பலுடன் இவருக்கு தொடர்புள்ளதா அல்லது நடிகர் ஸ்ரீகாந்துடன் என்ன மாதிரியான தொடர்புள்ளது ஏற்கனவே கைது செய்யப்பட்ட அந்த பிரசாத் மற்றும் பிரதீப் குமார் ஆகியோரிடன் ஏதேனும் தொடர்புகள் உள்ளதா? பணப்பரிவர்த்தனை ஏதேனும் நடைபெற்றதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: பட்டைய கிளப்பும் 'கூலி' பட பாடல்..! அனிரூத் இசையில் மிரட்டும் சாங் ரிலீஸ்..!