குறிப்பிட்ட தொழில் மட்டும் இன்றி அனைத்து துறைகளிலும் பிரதானமான நகரமாக இருந்து வருகிறது வந்தாரை வாழ வைக்கும் சென்னை. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் சென்னைக்கு குடிப்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மாணவர்கள் தொடங்கி வேலை பார்ப்பவர்கள் என ஒவ்வொருவரும் தன் கனவை நிறைவு செய்து கொள்வதற்காக சென்னையைத் தேடி ஆண்டதோறும் வந்து கொண்டே இருக்கின்றனர்.

அந்த வகையில் எதையும் தாங்கும் இதயம் என்று போல் சென்னையும் ஒவ்வொரு ஆண்டும் கூட்டு கூட்டாக குவியும் மக்களை தாராளமாக கையை விரித்து அணைத்துக் கொள்கிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நாலடி இருக்கும் இடத்தில் 100 பேர் தங்கும் சூழலை உருவாக்கி வருகிறது என்றே சொல்லலாம். இதனால் விலை மானியங்கள், பொருட்களின் தேவைகள் என அனைத்தும் உயர்ந்து கொண்டே செல்கிறது.
இதையும் படிங்க: காங்கிரஸ் நிகழ்ச்சியில் சுதீஷ் பங்கேற்றது ஏன்? ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்! பிரேமலதா சொன்ன விஷயம்...
மக்கள் தொகையால் நகரின் பல்வேறு இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன. மக்கள் வருவதையும் தடுக்க முடியாது அதே சமயத்தில் மக்களின் அத்தியாவசியத்தையும் நிறைவேற்றாமல் இருக்க முடியாது என கருதி வளர்ச்சி திட்டத்தில் ஒன்றான மெட்ரோ திட்டம் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் பயணிகள் போக்குவரத்து நெரிசல் இன்றி தப்பிக்க ஒரு பெரும் உதவியாக அமைந்துள்ளது.

முன்னதாக 2015 ஆம் ஆண்டு சென்னையில் மெட்ரோ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதன் பயனாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவானதாகவே இருந்தது. ஆனால் அதன் பயனும் அதன் சிறப்பு அம்சங்களும் நாளடைவில் மக்களை தன்வசப்படுத்தியது. குறித்த நேரத்தில் குறித்த இடத்திற்கு செல்ல தவித்த மக்கள் மெட்ரோ திட்டத்தினால் அதனை எளிதாக்க முடிந்தது. இதனால் மெட்ரோவின் பயனாளர்கள் மல மலவென அடுத்தடுத்த ஆண்டுகளில் கணிசமான உயர்வை கண்டது. அந்த வகையில் மெட்ரோ திட்டம் தொடங்கியது முதல் இன்று வரை, ஒவ்வொரு மாதமும் மெட்ரோ பயனாளர்களின் எண்ணிக்கையை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தற்போது வெளியிட்ட அறிக்கையில், சென்னை மெட்ரோ ரெயில் தொடங்கி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. மெட்ரோ ரயில் சேவை தொடங்கி 10 ஆண்டுகளில் மொத்தம் 40 கோடி பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்ததால் தற்போது 2ம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் 3 வழித்தடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: வெளியுறவுத்துறை அமைச்சருக்கே ஆப்பா? கட்சி தாவும் சசிதரூர்? புகைச்சலில் பாஜ- காங்கிரஸ்..!