கடந்த சில தினங்களாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த ஜூன் 2ம் தேதி நெல்லை மாநகரை சேர்ந்த 6ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி நேற்று இரவு தனது வீட்டின் அருகே உள்ள கடைக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்திருந்த போது, தச்சநல்லூரைச் சார்ந்த 34 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சிறுமியிடம் பேச்சுக் கொடுப்பது போல பேசியுள்ளார். தொடர்ச்சியாக சிறுமிக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுதே பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
அதிர்ச்சியடைந்த சிறுமி அந்த நபரிடம் இருந்து தப்பித்து தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியதை அடுத்து, சிறுமியின் பெற்றோர் நெல்லை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த முத்து வயது 34 வயது நபரை கைது செய்தனர்.
இந்த அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து நெல்லை மக்கள் மீள்வதற்குள், நெல்லை பேட்டை பகுதியைச் சார்ந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு 5 வயது சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அதே பகுதியைச் சார்ந்த மாணிக்கம் வயது 50, என்பவர் சிறுமியிடம் விளையாடுவது போல பேச்சு கொடுத்துள்ளார்.
சிறிது நேரத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமிய உடனே அச்சமடைந்து இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து நெல்லை சைல்ட் வெல்பர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவர்கள் நெல்லை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து டவுன் அனைத்து மகளிர் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் 5 வயது சிறுமிக்கு மாணிக்கம் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தற்பொழுது நெல்லையில் பதுங்கி இருந்த மாணிக்கத்தை டவுன் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: விடிந்ததுமே பேரதிர்ச்சி... கல்லால் அடித்து இளைஞர் கொலை... நெல்லையில் அரங்கேறிய பயங்கரம்...!
கடந்த ஜூன் 2ம் தேதி நெல்லை தச்சநல்லூர் பகுதியில் சாலையில் நடந்து சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் ஒரே வாரத்தில் மீண்டும் அடுத்த சம்பவம் நடைபெற்றுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தையே உலுக்கிய பகீர் சம்பவம்... 3 சிறுவர்கள் உட்பட 8 பேரை தட்டித்தூக்கிய காவல்துறை...!