தமிழ்நாட்டில் இளைஞர்களிடையே மோட்டார் பந்தயங்களின் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், விளையாட்டு சுற்றுலா மற்றும் மாநில பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய “மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்” அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ், பார்முலா 1, பார்முலா 2, பார்முலா 3 மற்றும் பார்முலா 4 உள்ளிட்ட உலகத் தரத்திலான பன்னாட்டு பந்தயங்களை நடத்தும் வகையில் சர்வதேச அளவிலான பந்தயத் தடமும், தொழில்நுட்ப பயிற்சி மையங்களும் உருவாக்கப்படும்.
இதன் முக்கிய நோக்கம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீரர்களை உருவாக்குவதோடு, தமிழ்நாட்டை உலகளாவிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் மையமாக மாற்றுவதாகும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்தார். இந்த அறிவிப்பை வரவேற்று நடிகர் அஜித் குமார் நன்றி தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம்.. முதல்வர் பெயர் சரித்திரத்தில் நிலைக்கும்.. அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம்..!!

இந்நிலையில், முதலமைச்சர் விஜயின் அறிவிப்புக்கு அஜித் நன்றி தெரிவித்தது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் இன்று ஊடகங்களிடம் பேசும்போது, “முதலமைச்சர் விஜயின் இந்த முக்கிய அறிவிப்புக்கு நடிகர் அஜித் நன்றி தெரிவித்துள்ளார். இது விளையாட்டுத் துறை மீது அவருக்கு உள்ள ஆழ்ந்த ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. அவர் விளையாட்டுத் துறையிலும் தனக்கென தனித்துவமான பாதையை வகுத்துக்கொண்டவர்.
அவருக்கு நாங்களும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவர் ஆசைப்பட்டபடி விளையாட்டுத் துறை மட்டுமல்லாமல், அனைத்து துறைகளிலும் பல்வேறு முன்னேற்றங்களை முதலமைச்சர் விஜய் ஏற்படுத்துவார் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டார்.
இந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் திட்டம், இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதோடு, சர்வதேச நிகழ்வுகளை ஈர்த்து சுற்றுலாத் துறையையும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் விளையாட்டு வளர்ச்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்றும் அரசு தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "அமைதியான ஆன்மீகம்"..! பொதுமக்களுக்கு அமைச்சர் ரமேஷ் வைத்த கோரிக்கை..!