அதிமுக முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் அதிமுக வேட்பாளருமான ஓஎஸ்.மணியன் நாகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், வாக்கே இல்லாத கட்சிகளை கூட்டணியில் சேர்த்துள்ளது திமுக. ஆனால் அதிமுக பலம் வாய்ந்த கூட்டணி. வேதாரண்யம், நாகப்பட்டினம் மட்டுமல்ல தேசிய முற்போக்கு கூட்டணி தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும். கிராமப்புறங்களுக்கு குடிநீர் கொடுக்கும் ஜல்ஜீவன் திட்டம் முழுமையடையவில்லை, அவசரகதியில் திமுக வேலையை இன்னும் முடிக்காமல் வைத்துள்ளது.
மோடி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மண்ணை காக்க மத்திய அரசும், மக்களை காக்க மாநில அரசும் இருக்க வேண்டும். மண்ணை காக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது, ஆனால் மக்களை காக்கும் அரசாக திமுக இல்லை. உலகம் போற்றுகிற தலைவர் பிரதமர் மோடி. கடந்த ஐந்து ஆண்டுகளில் விலைவாசி ஏற்றம் விஷம்போல் விண்ணைத் தொடும் அளவில் உயர்ந்துள்ளது. ஆனால் எந்த காரணமும் இல்லை.
ஈரானில் போர் நடக்கும் இந்த நேரத்தில் பிரதமர் மோடி சாதுர்யமாக செயல்படுகிறார். பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்ந்தாலும், நமது தேவைகளை அண்டை நாடுகளிடம் இருந்து கெட்டுப்பேற்று கொண்டு வந்து சேர்க்கும் பணியில் மோடி ஈடுபடுகிறார். ஆகையால் எரிபொருள் விலை உயர்வு பாஜக அங்கம் வகிக்கும் எங்கள் கூட்டணியை பாதிக்காது. அதிமுக தலைமையில் உள்ள கூட்டணி கட்சிகள் எந்த சின்னத்தில் நிற்க வேண்டுமென்றாலும் அது அவர்களின் விருப்பம் என்று எடப்பாடி சொல்லியுள்ளார்.
இதையும் படிங்க: NDA-விலிருந்து கழன்ற முக்கிய கட்சி... இரவோடு இரவாக இபிஎஸுக்கு வந்த ஷாக்கிங் நியூஸ்... கூட்டணி கட்சி எடுத்த திடீர் முடிவு...!
என் பக்கத்தில் இருப்பவர்களும் சிறுபான்மையினர்தான், இஸ்லாமியர்களை குறிப்பாக பெண்களை போராட்டக் களத்தில் நிற்க வைத்து CAA என்று சொல்லி கஷ்டப்படுத்தினார்கள். சிறுபான்மையினர் யாரும் வாழ முடியாது, யாரும் குடியிருக்க முடியாது என்றெல்லாம் வதந்தி பரப்பினார்கள். CAA சட்டத்தினால் ஏதாவது ஒரு மாவட்டத்தில், ஒரு தாலுகாவில், ஒரு ஊரில் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டதாக நிரூபித்தால் நான் அரசியல் வாழ்க்கையைவிட்டு விலக தயார். இது தவறான செய்தி. அதிமுகவில் பாஜக இருப்பதால் சிறுபான்மையினர் வாக்குகள் பாதிக்காது.
இதையும் படிங்க: மீண்டும் மீண்டும் தாமரை வேண்டாம்..! போஸ்டர் ஒட்டி அதிருப்தியை வெளிப்படுத்திய அதிமுகவினர்..!!