கோவையில் தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜூணனை ஆதரித்து அண்ணாமலை தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் சித்தாந்த அடிப்படையில் வேறுபாடு இருந்தாலும், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் நோக்கில் இணைந்துள்ளதாக தெரிவித்தார்.
கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் 2080 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக விமர்சித்தார். கோவை தெற்குத் தொகுதியில் அம்மன் அர்ஜுனன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். முதலமைச்சர் ஸ்டாலின் பெயரில் சொந்தமாக கார் இல்லையென்பது மக்களை ஏமாற்றும் முயற்சியா என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, திமுக அரசு 511 வாக்குறுதிகளில் வெறும் 70 (15%) மட்டுமே நிறைவேற்றியுள்ளதாக குற்றம்சாட்டினார்.

மேலும், திமுக பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், கனிமொழி பேசும் கருத்துகளை விமர்சித்தும் பேசினார். சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என்றும், பிரதமர் மோடி மக்களுக்கு பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்கிறார் என்றும் கூறினார். கடந்த 5 ஆண்டுகளில் டாஸ்மாக் மூலம் 2,24,320 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும், மேலும், எடப்பாடி பழனிச்சாமி மக்களுக்காக மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என தாம் ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அண்ணாமலையை கைவிட்ட குலசாமி & பழனிசாமி... தேர்தலில் இருந்து விலகிய பரபரப்பு பின்னணி...!
கஞ்சா வழக்கில் இருப்பவர்கள் திமுகவில் பொறுப்பில் உள்ளனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார் அதிமுக–பாஜக கூட்டணி அவிநாசி உள்ளிட்ட 11 தொகுதிகளில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்த அண்ணாமலை, “ஒற்றுமையாக களம் காண்போம்” என அழைப்பு விடுத்தார். இந்நிகழ்ச்சியால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டிருந்தால் மன்னிக்குமாறு கேட்டுக் கொண்ட அவர், வாக்கு சேகரிப்பின் போது ஒரு குழந்தைக்கு “மித்ரன் மணிசாய்” என பெயர் சூட்டினார்.
இதையும் படிங்க: பழனிசாமியா? கந்தசாமியா?... கன்ஃபியூஸ் ஆன அண்ணாமலை...அதிமுகவினர் அதிர்ச்சி...!